Try GOLD - Free
சித்த மருத்துவத்தைக் காப்போம்!
Dinamani Thoothukudi
|May 22, 2025
ஆங்கில (அலோபதி) மருத்துவ முறை மிகவும் வளர்ந்தது என்பதாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையில், 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மருத்துவ முறை இல்லை; மிக வயதான சிலர் கூறும் பொருள்களை மருந்து என அந்தக் காலத்தில் உண்டு வந்தனர். இதை மேலை நாடுகளில் பழைய முறை என்று கூறினர். 1806-இல் ஹனிமன் என்பவர் ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்தார். பின்னர்தான் பழைய மருத்துவ முறைக்கு அலோபதி எனப் பெயர் வந்தது. ஆனால், தமிழக சித்த மருத்துவம் ஈராயிரம் ஆண்டுகள் முன்னரே சிறந்து விளங்கியது.
சங்க காலத்தில் (கிமு 1500 - 100) மருத்துவன் தாமோதரனார் முதலிய பெயர்களும், மருத்துவ முறைகளும் இருந்துள்ளன. 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மருந்தையும், மருந்துப் பொருள்களையும் பயன்படுத்துவதில் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தனர்.
சிந்துவெளி அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்களில் வளைந்த சட்டி (வாணலி), கரண்டி, சட்டுவம், கூரிய வெட்டுக் கருவி ஆகியவை கிடைத்துள்ளன. அக்காலத்திலேயே அறுவை மருத்துவமும் செய்துள்ளனர். அதற்குச் செம்பைப் பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் ஏற்படாது என்பதையும் தெரிந்துவைத்திருந்தனர்.
போர்க் காலங்களில் வீரர்களுக்கு ஏற்படுகிற பெரிய காயங்கள், வெட்டுகள், புண்கள் ஆகியவற்றை மருந்தால் ஆற்றுவது கடினம் என்பதால், அறுவை மருத்துவர்களால் அந்தப் புண்கள் தைக் கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுள்ளனர். 'மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச் சிரல் பெயர்ந்து நெடுவள் ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்' என்ற பதிற்றுப்பத்து (5.2) பாடல் இதற்குச் சான்றாகும்.
புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலையை அடைய அத்திப்பால் பயன்படும் எனப் புறநானூறு தெரிவிக்கிறது. 'வடுவின்றி வடிந்த யாக்கையான்' என்று பழைய நிலைக்குத் தோல் நிறமும் உடலமைப்பும் திரும்பியதைக் கூறும்.
This story is from the May 22, 2025 edition of Dinamani Thoothukudi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.
1 min
May 14, 2026
Dinamani Thoothukudi
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Thoothukudi
5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்
இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்
2 mins
May 14, 2026
Dinamani Thoothukudi
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Thoothukudi
விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை
தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Thoothukudi
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Thoothukudi
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Thoothukudi
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Thoothukudi
மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.
1 min
May 13, 2026
Dinamani Thoothukudi
கணவர், மாமனார் கொன்று எரிப்பு: ஆண் நண்பருடன் பெண் கைது
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவர், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று எரித்ததாக பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸார் கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Translate
Change font size
