Try GOLD - Free
அதிகாரியும், அதிகாரமும்!
Dinamani Thoothukudi
|March 29, 2025
அதிகாரம் தனி மனிதனை வலிமையுள்ளவனாக மாற்றுகிறது. மக்களாட்சியில் ஒவ்வொரு தனி மனிதனும் உள்ளாட்சி நிர்வாகம், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய இடங்களில் தன் நலனுக்கான குரல் ஒலிக்க வேண்டும் என்று விரும்புகிறான்.
அதிகாரம் தனி மனிதனை வலிமையுள்ளவனாக மாற்றுகிறது. மக்களாட்சியில் ஒவ்வொரு தனி மனிதனும் உள்ளாட்சி நிர்வாகம், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய இடங்களில் தன் நலனுக்கான குரல் ஒலிக்க வேண்டும் என்று விரும்புகிறான். அதற்காக தேர்தலில் தன் நலன் காப்பவர் என்று நம்புவருக்கு வாக்களித்து அனுப்புகிறான். இவர்களுக்குக் கொடுக்கப்படும் அதிகாரம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே. எனினும் இவர்களின் அதிகாரம் வலிமைமிக்கது.
மக்களால்தான் இவர்களுக்கு இந்த அதிகாரம், பதவி, பெருமை, பல்வேறு சலுகைகள், ஓய்வூதியம் போன்றவை கிடைக்கின்றன. தேர்தல் நேரங்களில் மட்டும் பொது மக்களின் வீடு தேடி வரும் அவர்களை, அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு சந்திப்பது என்பது சாமானிய மக்களுக்கு சாத்தியப்படுவதில்லை.
மக்களுடைய பிரதிநிதியாக உள்ளாட்சி வார்டு உறுப்பினர் பதவி முதல் அமைச்சர் பதவி வரை பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் இவர்களை தங்களுடைய நலனுக்காகப் பாடுபடுவார்கள் என மக்கள் திடமாக நம்புகிறார்கள். அவர்களைக் கொண்டுதான் மாநில அரசும், மைய அரசும் அமைகின்றன. அவர்களால் மட்டுமே பொது மக்களின் வாழ்வில் நலத்தைக் கொண்டு வர முடியும்.
அதே போல், அரசு அதிகாரிகள் மத்திய, மாநில தேர்வாணையங்கள் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பதவிகளுக்கு வருகிறார்கள். எனவே, அவர்கள் பொதுவாழ்வில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பாரபட்சமின்றியும் நடந்து கொள்வார்கள் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
This story is from the March 29, 2025 edition of Dinamani Thoothukudi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
உயிர் காக்கும் சித்த மருத்துவம்!
அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.
2 mins
November 28, 2025
Dinamani Thoothukudi
காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்
சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
November 28, 2025
Dinamani Thoothukudi
சீனா: ரயிலில் அடிபட்டு 11 பராமரிப்புப் பணியாளர்கள் உயிரிழப்பு
சீனாவின் தென் மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
November 28, 2025
Dinamani Thoothukudi
உறுப்பு தானத்தை ஊக்குவிக்க மாணவர் தூதுவர் குழு
10 மருத்துவக் கல்லூரிகளில் அமைப்பு
1 mins
November 28, 2025
Dinamani Thoothukudi
இம்ரான் கான் நலமாக உள்ளார்: சிறை அதிகாரிகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவர்கள் கூறினர்.
1 min
November 28, 2025
Dinamani Thoothukudi
டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா
சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
2 mins
November 28, 2025
Dinamani Thoothukudi
அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டிகள்
அதிகாரபூர்வமாக அறிவிப்பு
1 min
November 27, 2025
Dinamani Thoothukudi
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: அதிமுக பிரமுகர் கைது
சேலம் மாவட்டம், ஆத்தூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அதிமுக பிரமுகரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
November 27, 2025
Dinamani Thoothukudi
பள்ளிகளில் ஒளிபரப்பாகிறது ‘காக்கா முட்டை’ திரைப்படம்
அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை' திரைப்படத்தைத் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
November 27, 2025
Dinamani Thoothukudi
மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா
குடியரசுத் தலைவர் பெருமிதம்
2 mins
November 27, 2025
Translate
Change font size

