Try GOLD - Free
காலம் பெற உய்யப் போமின்
Dinamani Nagapattinam
|October 12, 2025
'காலம் பெற' என்பது விடியற்காலை எனப் பொருள் உணர்த்தும் வழக்குச் சொல்லாகும். 'காலம்பெறப் புறப்பட்டால் தான் அந்த வேலையை முடித்து வீடுதிரும்பலாம்' என்னும் கருத்தில் இச்சொல்லாடல் இடம் பெறுவதை இன்றும் காணலாம்.

காலம்பெற மலர்நீரவை தூவித் தொழுதேத்தும் ஞாலம்புகழ் அடியார்உடல் உறுநோய்நலி யாவே (160)
என்னும் திருஞானசம்பந்தர் தேவாரத்தில், 'காலை வேளையில் மலரும் நீரும் தூவி இறைவனை வழிபடுமுறை' பேசப்பட்டுள்ளது. அங்ஙனம் வழிபடும் அடியார்களை 'உடலுறு நோய் வருத்தாது' என்கிறார் அவர்.
'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' (5) என்னும் திருப்பாவைப் பாசுரத்தில் விடியற்காலையில் கண் விழித்தெழுந்து நீராடிப் பாவை நோன்பில் ஈடுபடும் பெண்கள், 'தூமலர் தூவித் தொழுது' கண்ணனை வழிபட்டதாகவே அறிகிறோம்.
இவ்வொரு பொருளேயன்றி 'முன்னதாக' என்னும் பொருளிலும், 'காலம் பெற' எனும் சொல் எடுத்தாளப்பெற்றதையும் பக்திப் பனுவல்களில் பார்க்கலாம்.
பெரியாழ்வார் தம்முடைய திருமொழி ஒன்றில், இறைவன் தம் மனத்தின்கண் குடியேறி விட்டதால், 'நோய்களே! உங்களுக்கு இனி இடமில்லை. ஓடிப் போய்விடுங்கள்' என்று சொல்லும் வகையில் ஒரு பதிகமே (5-2) பாடியிருக்கிறார். அப்பதிகத்தின் முதற்பாசுரத்தில் 'காலம் பெற' என்னும் சொல்லை அவர் பொருத்தமுறக் கையாண்டிருப்பதைக் காணலாம்.
நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்! காலம் பெற உய்யப் போமின், மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார், பைக்கொண்ட பாம்பணையோடும் பண்டன்று பட்டினம் காப்பே!
இப்பாசுரத்தில் இறைவன் வருவதற்கு முன்பாகத் தம் உடம்பில் குடியேறியிருந்த நோய்களை நோக்கி, 'நீங்கள் இனி வெளியேறி விடுங்கள்' என்கிறார் ஆழ்வார். அதனைக் 'காலம் பெற உய்யப் போமின்' என்னும் தொடரால் உணர்த்துகிறார்.
This story is from the October 12, 2025 edition of Dinamani Nagapattinam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.
1 min
October 14, 2025
Dinamani Nagapattinam
வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!
தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.
2 mins
October 14, 2025
Dinamani Nagapattinam
பிகார் 2-ஆம் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்
பிகார் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (அக்.13) தொடங்கியது.
1 min
October 14, 2025
Dinamani Nagapattinam
நூற்றாண்டு காணும் தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு முதல்வர் வாழ்த்து
நூற்றாண்டு காணும் தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
1 min
October 14, 2025
Dinamani Nagapattinam
சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.
1 min
October 14, 2025
Dinamani Nagapattinam
மதிப்புக்கு உரிய மதிப்பு!
ஒரு பொருளின் மெய்யான மதிப்பு எப்போது முழுமையாகத் தெரியும்? 'இப்படி ஒரு கேள்வியை இலக்கியப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்களிடம் கேட்டேன். விலையைப் பொருத்தது' என்றார் ஒரு மாணவர்.
3 mins
October 13, 2025
Dinamani Nagapattinam
கோகோ கெளஃப் சாம்பியன்
சீனாவில் நடைபெற்ற வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
October 13, 2025
Dinamani Nagapattinam
மேலும் இரண்டு ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜிநாமா
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
1 min
October 13, 2025
Dinamani Nagapattinam
முதலிடத்தில் புணே
புது தில்லி, அக். 12: புரோ கபடி லீக் போட்டியின் 79-ஆவது ஆட்டத் தில், புணேரி பல்டன் 'சூப்பர் ரெய்ட்’ வாய்ப்பில் தபங் டெல்லி கே.சி.யை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
October 13, 2025
Dinamani Nagapattinam
வரலாறு படைத்தார் வசெராட்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், மொனாகோ வீரர் வாலெண்டின் வசெராட் சாம்பியன் கோப்பை வென்று வரலாறு படைத்தார்.
1 min
October 13, 2025
Translate
Change font size