Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

நீதி தேவன் மயக்கம் தெளிய வேண்டும்!

Dinamani Nagapattinam

|

July 31, 2025

உச்சநீதிமன்ற உள் விசாரணையை எதிர்த்தும், தலைமை நீதிபதி அனுப்பிய பரிந்துரையை எதிர்த்தும் நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்சநீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்துள்ளார். தங்களுக்கு எதிரான வழக்கை தாங்களே விசாரிப்பது உச்சநீதிமன்றம் இதுவரை கண்டதில்லை.

- உதயமு. வீரையன்

துவாக ஊழல் என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடும். அதிலும் நீதித் துறையில் ஊழல் என்றால் கேட்க வேண்டுமா? நாட்டின் அனைத்து வளர்ச்சிகளையும் அழித்துவிடும். தேசம் முன்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக பின்னோக்கிச் செல்லத் தொடங்கி விடும். தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றங்களும், நீதிபதிகளும் மக்களின் நம்பிக்கைக்கு உரியதாகச் செயல்பட வேண்டும். எப்போதாவது, தவறு ஏற்படுமானால் வெள்ளைத் துணியில் கருப்பு மை பட்டதுபோல் எல்லோருக்கும் தெரிந்துவிடும்.

'நீதித் துறையில் ஊழல் மற்றும் தவறான செயல்பாடுகள் இடம்பெறுவது அதன் மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் ஒட்டுமொத்த நீதித் துறையின் நேர்மை மீதான நம்பிக்கையும் சிதைந்து விடும்' என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் 'நீதித் துறையின் சட்டபூர்வ தன்மை மற்றும் பொது நம்பிக்கையைப் பராமரித்தல்' என்ற தலைப்பில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்ற அவர் இவ்வாறு பேசியுள்ளார். ஒவ்வொரு அமைப்பும் வலுவான நடைமுறையைக் கொண்டுள்ளபோதும் தொழில் முறையில் தவறான நடத்தை தொடர்பான பிரச்னைகளுக்கு உள்ளாகின்றன.

எப்போதாவது நீதித் துறைக்குள்ளும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற நடத்தைகள் பொதுமக்களின் நம்பிக்கை மீது எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இதற்கு எதிராக சரியான வெளிப்படையான நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்.

அந்த வகையில், நீதித் துறையில் ஊழல், தவறான நடத்தைகள் தொடர்பான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும் போதெல்லாம் உரிய உடனடி நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் மேற்கொண்டு வருகிறது. மேலும், நீதிபதிகள் பணி ஓய்வு பெற்றவுடன் அரசில் நியமனங்களை மேற்கொள்வது அல்லது தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பணி விலகுவது போன்றவற்றால் பொதுமக்களின் நம்பிக்கையை இழக்க வாய்ப்புள்ளது.

அதன் காரணமாக, பணி ஓய்வுக்குப் பிறகு எந்தவித அரசுப் பணியையும் ஏற்க மாட்டோம் என்று உறுதி ஏற்க வேண்டும். நீதித் துறையின் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக இந்த உறுதிப்பாடு இருக்க வேண்டும்.

MORE STORIES FROM Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Nagapattinam

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Nagapattinam

அன்புள்ள ஆசிரியருக்கு...

நடுத்தர மக்களின் வளர்ச்சி

time to read

1 min

October 31, 2025

Dinamani Nagapattinam

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Nagapattinam

இரட்டைப் பெருமை!

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

time to read

2 mins

October 31, 2025

Translate

Share

-
+

Change font size