Try GOLD - Free

நல்லன எல்லாம் தரும் கல்வி!

Dinamani Nagapattinam

|

July 16, 2025

ஒரு நல்ல பள்ளிக் கல்வி முறையின் அடிப்படை நோக்கம், குறிப்பிட்ட பாடங்களில் நல்ல மதிப்பெண்களை மட்டுமே உறுதி செய்வதல்ல. மாறாக, முக்கியமாக சுதந்திரமாக சிந்திக்கும் திறன் கற்பிக்கப்பட வேண்டும். இது வெற்றிக்கு மிக முக்கியமானது. அத்தகைய கல்வி முறைதான் உகந்தது.

- ஆர் நட்ராஜ்

ம் நாட்டில் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் எதிர்காலத்தில் எத்தகைய மேற்படிப்பு தொடர வேண்டும்,தொழில் கல்வியா, கலைக் கல்வியா என்பதை தேர்ந்தெடுப்பதில் முழுமையாக ஈடுபடுகின்றனர். அதுமாணவரிடம் மட்டுமாகவிடப்படவில்லை! இந்த ஈடுபாடு ஒருவிதத்தில் நல்லது என்றாலும், மாணவன் என்ன விரும்புகிறான்; அவனது திறன் எதில் இருக்கிறது என்பது ஆராயப்படுவதில்லை.

பள்ளித் தேர்வு முடிவுகள் வரும்போது, அடுத்து என்ன செய்வது என்பது குடும்பத்துக்கு எப்போதும் ஒரு சவாலாக இருக்கும். அதைத் தொடர்ந்து, அடுத்து என்ன என்பதைத் தேர்ந்தெடுப்பது கடினமான பணியாகும். அந்தத் தேதிக்கு எந்தப் படிப்பு வரவேற்கப்படுகிறதோ அதில் எல்லோரும் குவிகிறார்கள். விருப்பம் இருக்கிறதோ இல்லையோ; உயர் கல்வி திணிக்கப்படுகிறது!

இளைஞர்கள் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் என்னென்ன பணிகளை விரும்புகிறார்கள் என்பது குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமானோர் அரசுப் பணியைத் தேர்ந்தெடுக்க விரும்பினர். சுமார் 20 சதவீதம் பேர் தனியார் துறையிலும், 20 சதவீதத்துக்கும் குறைவானோர் தொழில்முனைவோராகவும் விரும்பினர்!

அதிகாரம் மற்றும் வேலை பாதுகாப்பு காரணமாக அரசுப் பணி இன்னும் சமூகத்தில் அந்த மரியாதையைப் பெற்றுள்ளது. அதிகாரமும், பணமும் ஈர்க்கின்றன; ஆனால், சேவையும் தியாகமும் மறக்கப்படுகின்றன.

இந்தியா போன்ற வளரும் நாட்டில், கல்வியில் சிறந்து விளங்குதல் ஒன்றுதான் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்துக்கான உறுதிமொழிக்கு ஒரு சக்தி வாய்ந்த உந்துதலாகவும், கருவியாகவும் உள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியின் தரம், அவர்கள் எங்கு படிக்கிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்பது குறித்து அடிக்கடி கவலைப்பட வேண்டும். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது ஆன்றோர் வாக்கு.

தரமான கல்வி ஒரு நல்ல வாழ்க்கைக்கான கடவுச் சீட்டு என்பது உண்மை. அதிக ஊதியம் தரும் தொழில் என்ற வாக்குறுதியுடன் கணினி அறிவியல், தரவு அறிவியல், வணிகவியல் போன்ற தற்போது பிரபலமான படிப்புத் துறைகளுக்கு இது குறிப்பாக உண்மை.

MORE STORIES FROM Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சமன்செய்து சீர்தூக்கும் கோல்!

தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.

time to read

3 mins

November 03, 2025

Dinamani Nagapattinam

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

November 03, 2025

Dinamani Nagapattinam

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

time to read

1 min

November 03, 2025

Dinamani Nagapattinam

வாரிசுகளின் கடமை

அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

time to read

2 mins

November 03, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

ஊடல் கொள்ள நேரமில்லை!

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Translate

Share

-
+

Change font size