Try GOLD - Free
தமிழரின் தொன்மையை மறைக்க முயற்சி!
Dinamani Nagapattinam
|June 25, 2025
புணே, புதுச்சேரி ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் தரம் வாய்ந்த ஆய்வு மையங்களும், அமெரிக்காவில் உள்ள ஆய்வு மையமும் கீழடியில் கிடைத்த பழம்பொருள்களை ஆராய்ந்து கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெளிவான அறிக்கை அளித்துள்ளன.
கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க அறிவியல் ரீதியான தரவுகள் தேவை என்று மத்திய அரசின் கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார். மேலும், 'கீழடி அகழாய்வு குறித்து அளிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல; அவற்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன்பு மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். கூடுதல் தகவல்கள், சான்றுகள், கூடுதல் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன' என்றும் அவர் கூறியுள்ளார்.
கீழடியில் 2014-2015 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் துறை அதிகாரியான முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணன் தலைமையில் வைகையாற்றின் தோற்றுவாயிலிருந்து அது கடலில் கலக்கும் இடம்வரை இரு கரைகள் நெடுகிலும் ஆய்வு நடத்தப்பட்டு 293 தொல்லியல் ஆய்வு சுவடுகள் கண்டறியப்பட்டன. இவற்றில் மதுரை அருகே கீழடி என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து முதலில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. இதன்மூலம் 5,800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.
முதன்முதலாக செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் சுவடுகள் கண்டறியப்பட்டன. ஓடுகள், உறைக்கிணறுகள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் அடங்கிய ஏராளமான பானை ஓடுகளும் கண்டறியப்பட்டன. அதில் ஒரு பானை ஓட்டில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. பாண்டியரின் சின்னமான மீன் சின்னம் கிடைத்ததால் இது பண்டைய மதுரையாக இருந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது.
மேலும், அங்கு கண்டறியப்பட்ட பழம்பொருள்களின் மூலம் கீழடி நாகரிகம் ஒரு நகர்ப்புற நாகரிகமே என்பது நிறுவப்பட்டது. இதன் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு என்பதும் தமிழகத்தின் தொல்லியல் ஆய்வு வரலாற்றில் இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாகும் என்பதும் வரலாற்றுப்பூர்வமான உண்மைகளாகும்.
1926-ஆம் ஆண்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தின்போது சிந்து மாநிலத்தில் சர் ஜான் மார்ஷல் என்ற தொல்லியல் அதிகாரி நடத்திய அகழாய்வில் சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டது. இந்திய வரலாற்றில் ஆரியர் இந்தியாவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே மிகத் தொன்மையான நாகரிகம் இது என்பதை உலகம் உணர்ந்தது. இயற்கை காரணங்களினால் சிந்துவெளி நாகரிகம் அழிந்து 1,000 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆரியர்கள் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்தனர் என்பதையும் உலகம் உணர்ந்தது.
This story is from the June 25, 2025 edition of Dinamani Nagapattinam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானில் வெள்ளிக்கிழமை நில நடுக்கம் ஏற்பட்டது.
1 min
October 25, 2025
Dinamani Nagapattinam
கேரள ஆளும் இடதுசாரி கூட்டணியில் சர்ச்சை
‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தில் இணைந்ததால் கருத்து வேறுபாடு
1 mins
October 25, 2025
Dinamani Nagapattinam
பிரியாவுக்கு வெண்கலம்
செர்பியாவில் நடைபெறும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பிரியா மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்.
1 min
October 25, 2025
Dinamani Nagapattinam
உக்ரைனுக்கு டாமஹாக் வழங்கினால் கடும் பதிலடி: அமெரிக்காவுக்கு புதின் எச்சரிக்கை
உக்ரைனுக்கு அமெரிக்கா டாமஹாக் ஏவுகணைகளை வழங்கினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வியாழக்கிழமை எச்சரித்தார்.
1 min
October 25, 2025
Dinamani Nagapattinam
பங்குச் சந்தையில் 6 நாள் உயர்வுக்கு முடிவு
ஆறு நாள் உயர்வுக்குப் பிறகு எஃப்எம்சிஜி மற்றும் வங்கி பங்குகளில் லாப நோக்கு விற்பனை மற்றும் அந்நிய முதலீட்டு வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
October 25, 2025
Dinamani Nagapattinam
அன்புள்ள ஆசிரியருக்கு...
பாரம்பரிய மருத்துவம்
1 min
October 25, 2025
Dinamani Nagapattinam
உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி!
உலக அளவில் ஒரு நாட்டின் பொருளாதார சக்கரச் சுழற்சியை இயங்கச் செய்வதிலும், நாட்டின் நிதிக் கட்டமைப்பின் வலிமையை நிர்ணயிப்பதிலும் அந்நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்புதான் முக்கியப் பங்காற்றுகிறது. எனவேதான், ஒரு நாடு பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் போதும், கடன் சுமை அதிகரிக்கும் போதும், தங்கத்தை விற்று நெருக்கடியைச் சமாளித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அடிக்கல்லாக, பாதுகாப்பு கவசமாக தங்கம் விளங்குகிறது.
3 mins
October 25, 2025
Dinamani Nagapattinam
மறுக்கப்படும் உரிமை!
ஒரு காலத்தில் சலுகையின் அடையாளமாகக் கருதப்பட்ட விடுப்பு, இன்று பணியாளர்களின் அடிப்படை உரிமையாகவும், சமூகப் பாதுகாப்பின் இன்றியமையாத அங்கமாகவும் நிலைபெற்றுள்ளது. இருப்பினும், சட்டக் கட்டமைப்புகளுக்கும், களத்தில் நிலவும் நடைமுறைச் சூழல்களுக்கும் இடையேயான முரண்பாடுகளால், விடுப்பு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.
2 mins
October 25, 2025
Dinamani Nagapattinam
டொயோட்டா விற்பனை 16% அதிகரிப்பு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பர் மாதத்தில் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
October 25, 2025
Dinamani Nagapattinam
ராகு - கேது தோஷம் போக்கும் தலம்
அண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் ‘ஆண்மை ஊர்' என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘ஆமையூராக' மாறிய தலம், தற்போது ஆம்பூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ளது சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில்.
1 mins
October 24, 2025
Translate
Change font size

