Try GOLD - Free
அரிசித் தவிடு எண்ணெய் உடலுக்கு ஏற்றதா?
Dinamani Kanchipuram
|August 24, 2025
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள் பலவாக இருந்தாலும், தற்போது பிரபலமாக இருப்பது அரிசித் தவிடு எண்ணெய்தான். குறைவான கொழுப்பு இருக்கிறது. நீரிழிவு, இதயநோய் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். ஆன்ட்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது” என்கிறார் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியின் ஊட்டச்சத்து, உணவியல் பேராசிரியர் ப.வண்டார்குழலி.
அவரிடம் பேசியபோது: “அரிசித் தவிடு எண்ணெய்யை உடலுக்கு நன்மை தரும் எண்ணெயாகும். உடலுக்குத் தேவையான நுண் ணூட்டங்களான கால்சியம், இரும்புச் சத்து, வைட்ட மின் ஏ, பி குரூப் வைட்டமின்கள் போன்ற வையும், புரதச் சத்தும் மிகுந்துள்ளன.
சமையல் எண்ணெய் பொருத்தவரையில், மணிலா எண்ணெய், கடுகு எண்ணெய் (3:1), நல்லெண்ணெய், மணிலா எண்ணெய் (1:1) என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு எண்ணெய்யில் இருக்கும் நன்மைகள் கிடைப்பதுடன் சில தீமைகளும் தவிர்க்கப்படும்.
அரிசி, அதன் மேலிருக்கும் உமி, அதற்குப் பிறகு இருக்கும் தவிடு, அதற்கடுத்து இருக்கும் விதையின் பிரதான பாகம், அதனுள் இருக்கும் உள்கரு என்று நான்கு முக்கிய பாகங் களைக் கொண்டது 'அரிசித் தவிடு'. வெளிப்புறத்தில் இருக்கும் கடினமான, சாப்பிட முடியாத பாகம் தான் உமி. அதை நீக்கியவுடன் விதைப் பகுதியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தவிடு என்னும் மெல்லிய உறையும் நவீன அரிசி ஆலைகளில் நீக்கப்படுகிறது. இந்தத் தவிடில்தான் அரிசித் தவிடு எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.
அரிசியைப் புழுங்க வைக்கும்போது, நிறம் மாறி, மணம், சுவை இழந்து மென்மையாகிவிடுவதால், பிரட், நொறுக்குகள், குக்கீஸ், பிஸ்கட் போன்றவை செய்வதற்கும் இந்தத் தவிடு பயன்படுத்தப்படுகிறது. நார்ச்சத்து இருப்பதால், இந்த வகையான நொறுக்குத் தின்பண்டங்கள் நீரிழிவு, உடல் எடை குறைப்பு, இதய நோயாளிகளுக்கு பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது.
This story is from the August 24, 2025 edition of Dinamani Kanchipuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
கோயில்களில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய உத்தரவு
கோயில்களில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
July 01, 2026
Dinamani Kanchipuram
ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்
உயர்கல்வித் துறையில் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிகழாண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்தார்.
1 min
July 01, 2026
Dinamani Kanchipuram
கவிஞர் புவியரசு (94) காலமானார்
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.
2 mins
July 01, 2026
Dinamani Kanchipuram
இறுதியில் ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
1 min
July 01, 2026
Dinamani Kanchipuram
சீர்திருத்தங்கள், தற்சார்பு நடவடிக்கைகள்: மத்திய செயலர்களுடன் பிரதமர் ஆலோசனை
நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் தொழில் புரிவதை எளிதாக்குவதற்கான சீர்திருத்தங்கள் மற்றும் தற்சார்பு நடவடிக்கைகள் ஊக்குவிப்பு ஆகிய இரு அம்சங்களின்கீழ், மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உயர்நிலை ஆலோசனை நடத்தினார்.
1 min
July 01, 2026
Dinamani Kanchipuram
ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்
புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
1 min
July 01, 2026
Dinamani Kanchipuram
புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்
அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு
1 min
July 01, 2026
Dinamani Kanchipuram
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயர்வு
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2026, மார்ச் இறுதியில் ரூ.72.08 லட்சம் கோடியாக (762.8 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min
July 01, 2026
Dinamani Kanchipuram
ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.
1 min
June 30, 2026
Dinamani Kanchipuram
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min
June 30, 2026
Translate
Change font size
