Try GOLD - Free
அணு ஆயுதம் என்னும் அச்சுறுத்தல்
Dinamani Kanchipuram
|August 18, 2025
அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய போராக இரண்டாம் உலகப் போர் திகழ்கிறது. அணுகுண்டுகளால் ஜப்பானில் ஏற்பட்ட விளைவுகளை இரண்டாம் உலகப் போர் இன்னும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால், உலக நாடுகள் அணுகுண்டு தயாரிப்பதை ஐ.நா.வும், வல்லரசு நாடுகளும் எதிர்த்து வருகின்றன.
உலகம் எங்கும் ஆங்காங்கு பல நாடுகளில் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. போரின் இறுதியில் அமைதிப் பேச்சுவார்த்தையும் நடக்கிறது. அது முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முடிவில்லாத இந்தப் போரும், பேச்சுவார்த்தையும் எங்கே போய் முடியுமோ என்ற கவலையும் மக்களுக்கு ஏற்பட்டு விட்டது.
உலக வல்லரசான அமெரிக்காவும், ரஷ்யாவும் இந்தப் போர்களுக்குக் காரணமாக இருக்கின்றன. அவர்கள் தயாரித்து வைத்திருக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வதற்காகவே போர்களைத் தூண்டி விடுகின்றன. இப்போது போர்கள் எல்லாமே ஏவுகணை களின் போர்களாகவே மாறி விட்டன.
கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் குறிப்பிட்ட இலக்கினைத் தாக்கி அழிக்கின்றன. பல காலமாகப் பாடுபட்டு எழுப்பப்பட்ட வானளாவிய கட்டடங்கள் இருந்த இடம் தெரியாமல் தகர்க்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. அழிப்பது எப்போதும் எளிய செயலாகும். அந்த நகரங்களைக் கட்டி எழுப்புவதற்கு எத்தனை காலமாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதற்குப் பின்னால் அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றை எடுத்துக் காட்டியே அச்சுறுத்தல்கள் நிகழ்கின்றன. அண்டை நாடான பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடாக இருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 'குரங்கு கையில் கொள்ளியைக் கொடுத்த கதையே' நினைவுக்கு வருகிறது.
"எதிர்காலத்தில் இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அணு ஆயுதத்தையும் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம்; பாகிஸ்தானைத் தாக்கினால் உலகின் ஒரு பகுதி அழிவைச் சந்திக்கும்..." என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முனீர் பேசியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அசீம் முனீருக்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறப்பு விருந்து அளித்தார். இரண்டாவது முறையாக கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி அமெரிக்காவுக்கு அவர் அதிகாரபூர்வமாகப் பயணம் மேற்கொண்டார்.
This story is from the August 18, 2025 edition of Dinamani Kanchipuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
கோயில்களில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய உத்தரவு
கோயில்களில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
July 01, 2026
Dinamani Kanchipuram
ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்
உயர்கல்வித் துறையில் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிகழாண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்தார்.
1 min
July 01, 2026
Dinamani Kanchipuram
கவிஞர் புவியரசு (94) காலமானார்
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.
2 mins
July 01, 2026
Dinamani Kanchipuram
இறுதியில் ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
1 min
July 01, 2026
Dinamani Kanchipuram
சீர்திருத்தங்கள், தற்சார்பு நடவடிக்கைகள்: மத்திய செயலர்களுடன் பிரதமர் ஆலோசனை
நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் தொழில் புரிவதை எளிதாக்குவதற்கான சீர்திருத்தங்கள் மற்றும் தற்சார்பு நடவடிக்கைகள் ஊக்குவிப்பு ஆகிய இரு அம்சங்களின்கீழ், மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உயர்நிலை ஆலோசனை நடத்தினார்.
1 min
July 01, 2026
Dinamani Kanchipuram
ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்
புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
1 min
July 01, 2026
Dinamani Kanchipuram
புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்
அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு
1 min
July 01, 2026
Dinamani Kanchipuram
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயர்வு
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2026, மார்ச் இறுதியில் ரூ.72.08 லட்சம் கோடியாக (762.8 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min
July 01, 2026
Dinamani Kanchipuram
ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.
1 min
June 30, 2026
Dinamani Kanchipuram
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min
June 30, 2026
Translate
Change font size
