Try GOLD - Free
நம்பகத்தன்மையை இழக்கும் இஸ்ரேல்!
Dinamani Kanchipuram
|August 13, 2025
போர் விதிமுறைகளையும், சர்வதேச சட்டத்தையும் பின்பற்றும் ஜனநாயக நாடு என்று இஸ்ரேல் தம்மைக் கூறி வரும் நிலையில், காஸா போர் காரணமாக சர்வதேச அளவில் அந்நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
-
பெர்த்/டெல் அவிவ், ஆக.12:
காஸாவை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டம், அந்தப் பகுதியில் அதிகரித்து வரும் பட்டினி கொடுமை, பாலஸ்தீனத்துக்குச் சொந்தமான மேற்குக் கரையில் இஸ்ரேல் மேற்கொள்ளும் அடக்குமுறைகள் ஆகியவை இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள தர்மசங்கடமான சூழலை எடுத்துரைக்கிறது.
அமெரிக்காவின் ஆதரவு உள்ளபோதிலும், யூதர்களின் நாடான இஸ்ரேல் மீதான நம்பகத்தன்மை தற்போது கேள்விக்குறியாகி வருகிறது. இதில் இருந்து அந்நாட்டால் நீண்ட காலத்துக்கு மீண்டுவர முடியாது.
இஸ்ரேலுக்கு எதிரான கண்ணோட்டத்தை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
போர் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவாவ் காலன்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது. காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக பல சர்வதேச சட்ட வல்லுநர்கள், இனப்படுகொலை குறித்து ஆய்வு செய்யும் அறிஞர்கள், மனித உரிமை குழுவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நெதன்யாகு அரசின் நடவடிக்கைகள் மீது இஸ்ரேலுக்கு உள்ளும், வெளியிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவ்வாறு விமர்சித்தவர்களில் அந்நாட்டு முன்னாள் பிரதமர்கள் ஏவுத் ஓல்மர்ட், ஏவுத் பராக் ஆகியோரும் அடங்குவர். அத்துடன் காஸாவுடனான போரை நிறுத்த நெதன்யாகுவுக்கு அழுத்தம் அளிக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற இஸ்ரேல் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
This story is from the August 13, 2025 edition of Dinamani Kanchipuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
பஞ்சமி நிலத்தை அரசு மீட்டுத்தர தவறினால் பறிமுதல் செய்வோம்
சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
ஆசனூர் அருகே வாகனத்தில் உணவு தேடிய யானை
ஆசனூர் அருகே சாலையில் சென்ற வாகனத்தில் யானை உணவைத் தேடியதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
எம்.பி. சீட்டு விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் பிரேமலதா குற்றச்சாட்டு
மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர்.
2 mins
September 01, 2025
Dinamani Kanchipuram
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை
இன்று சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமிக்கு 1,008 குடம் பாலபிஷேகம்
வல்லக்கோட்டை தெய்வீக சத்திய தர்ம ஸ்தாபனம் சார்பில், 1,008 பால் குடம் ஊர்வலம் நடைபெற்று சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size