Try GOLD - Free

ஒரு நபர் ஆணையம்... முதல் பக்க தொடர்ச்சி

Dinakaran Trichy

|

September 29, 2025

ஆம்புலன்ஸ்களில் அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், உயிரிழப்பு தொடர்பாக, கரூர் போலீசார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடி நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது பிஎன்எஸ் சட்ட பிரிவு கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை (105), குற்றமற்ற கொலை செய்ய முயற்சி (110), மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர, அலட்சிய செயல்களுக்கு தண்டனை (125), பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை (223), பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் (டிஎன்பிபிடிஎல் சட்டம் பிரிவு-3) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 2வது குற்றவாளியாகவும், முதன்மை குற்றவாளியாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், 3வது குற்றவாளியாக நிர்மல்குமார் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிவில் மேலும் சில தவெக நிர்வாகிகள் வழக்கில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கரூர் துயர சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை உடனடியாக அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். நேற்று மாலை 5 மணியளவில் சம்பவம் நடந்த பகுதியான வேலுச்சாமிபுரத்தில் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் கேட்டறிந்தார்.

அப்போது அங்கு வந்த பொதுமக்களில் சிலர், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

MORE STORIES FROM Dinakaran Trichy

Dinakaran Trichy

Dinakaran Trichy

புதுவை முதல்வர் ரங்கசாமி ஆட்சியை கவிழ்க்க முயற்சியா?

பாஜ அமைச்சர் பேச்சால் சந்தேகம்

time to read

1 min

October 11, 2025

Dinakaran Trichy

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவி இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஈரா னின் எண்ணெய் ஏற்றும திக்கு உதவிய இந்திய நிறு வனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதி ராக அமெரிக்கா பொரு ளாதார தடைகளை விதித் துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறு வனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கருவூலத்துறை இந்த தடை களை அறிவித்துள்ளன.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Trichy

Dinakaran Trichy

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 3 மடங்கு கட்டணம் அதிகரிப்பு

விமான கட்டணத்தை மிஞ்சியதால் பயணிகள் அதிர்ச்சி குடும்பத்துடன் செல்ல ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது.

time to read

2 mins

October 11, 2025

Dinakaran Trichy

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சமரசம் காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலானது

பிணைக் கைதிகள் விடுவிப்பு

time to read

1 min

October 11, 2025

Dinakaran Trichy

கோல்ட்ரிப் இருமல் மருந்து கம்பெனியில் 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் மருந்து ஆய்வுக்குழு எந்தவித ஆய்வையும் செய்யவில்லை

அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

time to read

1 min

October 11, 2025

Dinakaran Trichy

பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா

பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Trichy

Dinakaran Trichy

275 அதிகாரிகளின் சஸ்பெண்டை ரத்து செய்ய வலியுறுத்தி பத்திரப்பதிவு அலுவலகங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

தமிழகம் முழுவதும் ஊழியர்கள் பங்கேற்பு

time to read

1 mins

October 11, 2025

Dinakaran Trichy

பேச முடியாத அளவில் துயரத்தில் உள்ளோம் கரூரில் உயிரிழந்தவர்களுக்காக 16 நாட்கள் துக்கம் அனுசரித்துக்கொண்டு இருக்கிறோம்

தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு சென்றார். அவருடைய வீட்டில் தங்கியிருந்தார். பின்னர் 4 நாட்களுக்குப் பிறகு உத்தர காண்ட் மாநிலத்தில் நடந்த கூடைப்பந்து விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கும் விழாவுக்கு சென்றார். ஆனால் அந்த மாநில முதல்வர் விழாவில் கலந்து கொள்வதாக இருந்ததால், ஆதவ் அர்ஜூனா நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்டதால், அவரை கலந்துகொள்ள வேண்டாம் என்று அந்த மாநில அரசு கூறிவிட்டது. இதனால் துவக்க விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Trichy

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்

வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

time to read

1 min

October 11, 2025

Dinakaran Trichy

ஜெயஸ்வால் சத வெடி

வெ.இ.யுடன் 2வது டெஸ்ட்

time to read

1 min

October 11, 2025

Translate

Share

-
+

Change font size