Try GOLD - Free
ஒரு நபர் ஆணையம்... முதல் பக்க தொடர்ச்சி
Dinakaran Nagercoil
|September 29, 2025
ஆம்புலன்ஸ்களில் அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், உயிரிழப்பு தொடர்பாக, கரூர் போலீசார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடி நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது பிஎன்எஸ் சட்ட பிரிவு கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை (105), குற்றமற்ற கொலை செய்ய முயற்சி (110), மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர, அலட்சிய செயல்களுக்கு தண்டனை (125), பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை (223), பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் (டிஎன்பிபிடிஎல் சட்டம் பிரிவு-3) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
இந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 2வது குற்றவாளியாகவும், முதன்மை குற்றவாளியாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், 3வது குற்றவாளியாக நிர்மல்குமார் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிவில் மேலும் சில தவெக நிர்வாகிகள் வழக்கில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கரூர் துயர சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை உடனடியாக அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். நேற்று மாலை 5 மணியளவில் சம்பவம் நடந்த பகுதியான வேலுச்சாமிபுரத்தில் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் கேட்டறிந்தார்.
அப்போது அங்கு வந்த பொதுமக்களில் சிலர், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
This story is from the September 29, 2025 edition of Dinakaran Nagercoil.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
சீமான், நடிகை விஜயலட்சுமி நிபந்தனையற்ற மன்னிப்பு
உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
விஜய் கூட்டத்தில் 41 பேர் மரணம் எஸ்.ஐ.டி. விசாரணையில் நம்பிக்கை உள்ளது
கரூரில் நடந்த 41 பேர் மரணம் தொடர்பாக எஸ்.ஐ.டி. குழு விசாரணையில் நம்பிக்கை உள்ளது என்று அன்புமணி கூறினார்.
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
காசா இனப் படுகொலையை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
தெருக்கள், சாலை, நீர்நிலை, கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறை
குடியிருப்பு தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் மற்றும் வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குதல் மற்றும் மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 mins
October 09, 2025
Dinakaran Nagercoil
சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி
அணையில் இருந்து அதிக நீர் திறந்ததால் பாதிப்பு
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
ஆந்திராவில் கோர சம்பவம் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலி
ஆந்திராவில் நேற்று ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகள் அறிவிப்பு
உலோக-கரிம கட்டமைப்பு உருவாக்கத்திற்காக, வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
முதல்வர் அறிவித்தபடி முதற்கட்டமாக 23 பேருக்கு ரூ.15.50 லட்சம் நிவாரணம்
விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
ரூ.19,650 கோடி செலவில் அமைக்கப்பட நவிமும்பை விமான நிலையம் திறப்பு
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிரான மனு நாளை விசாரணை
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சிபிஐ விசாரணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
1 min
October 09, 2025
Translate
Change font size