Try GOLD - Free

திராவிட மாடல் அரசின் சாதனைகள் எடப்பாடியின் கண்களை உறுத்திக்கொண்டு இருக்கிறது

Dinakaran Nagercoil

|

September 15, 2025

திராவிட மாடல் அரசின் சாதனைகள் எடப்பாடி பழனிசாமியின் கண்களை உறுத்திக் கொண்டு இருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திராவிட மாடல் அரசின் சாதனைகள் எடப்பாடியின் கண்களை உறுத்திக்கொண்டு இருக்கிறது

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கு திருமணத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து, பரிசுப் பொருட்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது: இன்றைக்கு சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இல்வாழ்க்கையில் இணைய இருக்கிற 193 இணையர்களுக்கு இன்றைக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையிலே ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஓராண்டில் மட்டும் அறநிலையத்துறையின் சார்பாக 1000 இணையர்களுக்கு திருமணங்களை நடத்தி வைக்க வேண்டும். என்பதுதான் இலக்கு. அதன்படி, கடந்த ஜூலை மாதம் சுமார் 775 இணையர்களுக்கு திருமணங்களை நடத்தி வைத்தார். இன்றைக்கு, இங்கும், தமிழ்நாடு முழுவதும் நடத்தி வைக்கப்படுகிற திருமணங்களின் மூலம், அறநிலையத்துறையின் சார்பில் 1000 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்து இலக்கினை அடைந்து விட்டார்.

எனக்கு பக்கத்தில் அமர்திருக்கும் இணையர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். மணமகனின் பெயர் சந்தோஷ், மணமகளின் பெயர் லட்சுமி. சந்தோஷிடம் எப்படிப்பா பெண்ணை தெரியும் என்று கேட்டேன். நான் நினைத்திருந்தது போலவே, அவர் தனக்கு காதல் திருமணம் என்று தெரிவித்தார். எப்படிப்பா பழக்கம் என்று கேட்டேன். ஒரு வருடமாக ஒரே இடத்தில் வேலை செய்கிறோம் என்று தெரிவித்தார். மிகுந்த மகிழ்ச்சி.

MORE STORIES FROM Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லை 2வது நாளாக மூடல்

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மற்றும் வான் வெளியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்து மீறி வருவதாக கூறி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகள் சனியன்று இரவு பாகிஸ்தானின் ராணுவ சோதனை சாவடிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

விமல் ஜோடியாக சிருஷ்டி டாங்கே

கடந்த 2023ல் வெளியான கிரைம் திரில்லர் படம், 'இராக்கதன்'. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மருதம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் செல்வராஜு, ராணி ஹென்றி சாமுவேல் இணைந்து தயாரிக்கும் 'மகாசேனா' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நெல்லை அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி தாயும் தற்கொலை

நெல்லை கங்கைகொண்டான் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா (38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (27). முத்தமிழ் (4), சுசிலா தேவி (3) என இரண்டு மகள்கள் இருந்தனர்.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பரிதாப பலி

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (27). இவரது மனைவி சுகன்யா (26). தம்பதிக்கு பிரகாஷ் (4) என்ற மகனும், ஹேமாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் மாரியப்பனின் தாய் அசலா (55) என்பவரும் உடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மாரியப்பனின் வீட்டின் ஜன்னலுக்குள் துதிக்கையை நுழைத்து உணவு தேடியுள்ளது. அதன் பிறகு ஜன்னல் கம்பிகளை வளைத்ததோடு, கதவினை தந்தத்தால் குத்தி உடைக்க முற்பட்டுள்ளது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடியில் மதுரை, வேலூர் அரசு சட்டக்கல்லூரிகளில் கட்டிடம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

October 14, 2025

Dinakaran Nagercoil

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பு

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடித்தது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து

தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை பரிந்துரையின் படி இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வருங்கால வைப்பு நிதி பணம் 100% வரை இனி எடுக்கலாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100 % வரை ஊழியர்கள் இனி எடுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்துடன் சென்னை விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

விஐடி சென்னை மற்றும் ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகம் இணைந்து, சைபர் பாதுகாப்பு பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி துணை தலைவர் ஜி.வி. செல்வம், டீகின் பல்கலைக்கழகத்தின் இணை டீன் பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

time to read

1 min

October 14, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தீபாவளியை முன்னிட்டு நாளை மறுதினம் முதல் தினமும் 1,500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

அமைச்சர் சிவசங்கரன் தகவல்

time to read

1 min

October 14, 2025

Translate

Share

-
+

Change font size