Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

நடக்கக்கூடாதது நடைபெறாமல் இருக்க கடும் உத்தரவுகள் தேவை..

DINACHEITHI - NELLAI

|

July 06, 2025

எந்தவித அநீதிக்கும் சால்ஜாப்பு சொல்வதோ, சமாளிக்க நினைப்பதோ அந்த அநீதியை ஆதரிப்பதாகிவிடும். அரசுத் துறையினரால் மக்களுக்கு இழைக்கப்படும் பல கொடுமைகளை பெரும்பாலான அரசுகள் சமாதானம் கோரி தட்டிக் கழிக்கின்றன, அல்லது தள்ளிப் போடுகின்றன. ஆனால் திருப்புவனம் அருகே நடந்த காவல் மரணத்தில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கை, 'அக்கிரமக்காரர்கள் பக்கம் அரசு என்றுமே நிற்காது' என்ற நிம்மதியே மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் விசாரணையின் போது மடப்புரம் கோவில் காவலாளியான அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 5 போலீசார் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அஜித்குமாரின் குடும்பத்தினரை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு வீட்டுமனை பட்டாவும், அஜித் குமாரின் தம்பிக்கு அரசு வேலைக்கான நியமன ஆணையும் உடனே வழங்கப்பட்டது.

மொபைல்போன் மூலம் அஜித்குமார் தாயார் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அஜித் குமாரின் தாயாரிடம் பேசுகையில், 'ரொம்ப 'சாரி'மா. தைரியமா இருங்கள். சீரியசா 'ஆக்சன்' எடுக்க சொல்லியுள்ளேன்.' என்றார். தொடர்ந்து அஜித்குமார் சகோதரரிடம் பேசியவர், 'தம்பி, நடக்கக்கூடாதது நடந்து விட்டது. தைரியமா இருங்கள். என்ன பண்ணணுமோ அமைச்சரிடம் சொல்லி செய்ய சொல்லியுள்ளேன். நடந்ததை யாராலும் ஏற்க முடியாது. ஒத்துக்க முடியாது. தண்டனை பெற்றுத் தருவோம்,' எனக் கூறினார்.

MORE STORIES FROM DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு

தலைமை நீதிபதி தகவல்

time to read

1 min

October 18, 2025

DINACHEITHI - NELLAI

சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த தங்கம் விலை- அதிர்ச்சியில் மக்கள்

பவுன் ரூ. 1 லட்சத்தை நோக்கி பயணிக்கிறது

time to read

1 min

October 18, 2025

DINACHEITHI - NELLAI

உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

time to read

1 min

October 17, 2025

DINACHEITHI - NELLAI

கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்

கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

time to read

1 min

October 17, 2025

DINACHEITHI - NELLAI

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? தமிழக அரசு விளக்கம்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் தெரிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை மற்றும் இரவு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மட்டுமே இதுபோன்ற கால நிர்ணயம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

time to read

1 min

October 17, 2025

DINACHEITHI - NELLAI

அதிமுக- தவெக கூட்டணி அமைந்தாலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

time to read

1 min

October 16, 2025

DINACHEITHI - NELLAI

அப்துல் கலாம் பிறந்தநாள் : முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

முன்னாள் குடியரசுத் தலைவர் - பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

time to read

1 min

October 16, 2025

DINACHEITHI - NELLAI

கரூர் பெருந்துயரம் - த.வெ.க. செய்த தவறு, அரசின் நடவடிக்கை குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கரூர் பெருந்துயர சம்பவம் நடைபெற்ற உடன் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது கரூர் பெருந்துயரம் சம்பவம் தொடர்பாக முதலில் எங்களை பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். முழக்கமிட்டார்.

time to read

2 mins

October 16, 2025

DINACHEITHI - NELLAI

கரூரில் முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 பேரின் உயிர் பறிபோயிருக்காது

எடப்பாடி பழனிசாமி பேட்டி

time to read

1 min

October 16, 2025

DINACHEITHI - NELLAI

டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கு அமலாக்க துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

“சந்தேகத்தின் பேரில் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து ஆவணங்களை எடுத்துச்செல்வீர்களா?” என கேள்வி

time to read

1 min

October 15, 2025

Translate

Share

-
+

Change font size