Try GOLD - Free

ரயில் விபத்துக்களும் வடவர் ஊழியமும் ...

DINACHEITHI - NAGAI

|

July 10, 2025

இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் ரயில் போக்குவரத்து முழு கட்டுப்பாட்டுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ரயில்வே கிராசிங் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டி பகுதியில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் யானைகள் குறுக்கே வந்தால் அதை நுண்ணுணர்ந்து ரயிலை நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வாகனங்கள் குறிப்பிடும் சூழலில் அதை அறிந்து ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பம் இல்லாது இருக்கிறது. இந்தச் சூழலில் தான் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஒரு கோர விபத்து நடந்துள்ளது.

ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதிய விபத்தில் அந்த வேனில் இருந்த பள்ளி மாணவர்களில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேட் கீப்பர் தூங்கிவிட்டார். அவர் ரயில் வரும்போது ரயில்வே கேட்டை மூடவில்லை. அந்த நேரம் பார்த்து பள்ளி வாகனம் ரயில்வே கேட்டை கடந்தபோது ரயில் மோதி இந்த கோர விபத்து நடந்திருக்கிறது என பொதுமக்கள் கூறியுள்ளனர்.

விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே அளித்த விளக்கத்தில், பள்ளி வாகனம் வரும்போது ரயில்வே கேட்டை ஊழியர் மூடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது பள்ளி வாகன ஓட்டுநர், ஊழியரிடம் வாகனம் சென்றவுடன் மூடிக் கொள்ளுமாறு கேட்டதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனாலும் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை. வட இந்திய ஊழியரான கேள்விகளுக்கு தமிழ் தெளிவாகத் தெரியவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சினையே விபத்துக்கு ஒரு காரணமாக அமைந்து இருக்கலாம் என்று திமுகவும் தெரிவித்துள்ளது. உள்ளூர் மொழி தெரிந்தவர்களையே இந்தப் பணிக்கு நியமனம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

MORE STORIES FROM DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி

முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

தமிழக அமைச்சரவை கூட்டம்

ஆளுனர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

சென்னையில் புத்தகத் திருவிழா: வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, வரும் ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - NAGAI

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 9.14 லட்சம் பேர் விண்ணப்பம்

தேர்தல் ஆணையம் தகவல்

time to read

1 mins

January 06, 2026

DINACHEITHI - NAGAI

தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்

இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்

லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்

time to read

1 mins

January 04, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வெனிசுலா மீது தாக்குதல் : அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்

டிரம்ப் அதிரடி அறிவிப்பு

time to read

1 min

January 04, 2026

DINACHEITHI - NAGAI

மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

3 mins

January 03, 2026

Translate

Share

-
+

Change font size