கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அறிவித்த ஐசிசி
DINACHEITHI - NAGAI
|June 29, 2025
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிமுறையை ஐசிசி அறிவித்தது. இந்த விதிகள் நடப்பு (2025-27) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே இலங்கை வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டிகளில் புதிய விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருநாள் தொடருக்கான ஐசிசி விதிகள் வரும் ஜூலை 2 முதல் அமலுக்கு வருகின்றன.
-
டெஸ்ட் போட்டிகளிலும் 60 நொடிக்குள் அடுத்த ஓவரை வீசத் துவங்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை ஐசிசி அறிவித்தது. ஒரு இன்னிங்சில் 3-வது முறையாக (இரண்டு எச்சரிக்கைகளுக்குப் பிறகு) அவ்வாறு செய்யத் தவறினால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். இது ஒவ்வொரு 80 ஓவர்கள் கடந்த பிறகு, ஒரு புதிய பந்து கிடைக்கும்போது அமலாகும்.
பந்தின் மீது எச்சில் தடவுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், எச்சில் தடவியது கண்டறியப்பட்டால் நடுவர்கள் பந்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. பந்தை மாற்றுவற்காக இந்த தந்திரம் கடைபிடிக்கப்படலாம் என்பதால் இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே ஓடி ரன் எடுக்கும்போது, பேட்ஸ்மேன் கிரீஸை தொடாமல் சென்றுவிட்டால், அந்த ரன் வழங்கப்படாது. பேட்டர்கள் இருந்த இடத்துக்கே செல்ல வேண்டும். பவுலிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். மேலும், இருவரில் அடுத்த பந்தை எந்த பேட்டர் எதிர்கொள்ள வேண்டும் என்பதை பவுலிங் அணி கேப்டன் தேர்வு செய்ய முடியும்.
This story is from the June 29, 2025 edition of DINACHEITHI - NAGAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 100 வயதை நிறைவு செய்து 101-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
1 min
December 27, 2025
DINACHEITHI - NAGAI
சட்டசபை ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது: கவர்னர் உரை நிகழ்த்துகிறார்: அப்பாவு தகவல்
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.
1 min
December 27, 2025
DINACHEITHI - NAGAI
தந்தை பெரியார் நினைவுநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
“பெரியார் எனும் பெருஞ்சூரியனின் வழி நடப்போம்” என சபதம்
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
எல்விஎம்-3 திட்டம் வெற்றி, இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாடு முழுவதும் 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி வருகிறார்
புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 25, 2025
DINACHEITHI - NAGAI
உழவர் நலனைக் காக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
1 min
December 24, 2025
DINACHEITHI - NAGAI
215 கிலோ மீட்டர் தூரம் வரை கூடுதல் கட்டணம் இல்லை
இந்தியா முழுவதும், ரெயில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
1 min
December 22, 2025
DINACHEITHI - NAGAI
தமிழர்தம் நாகரிக உச்சம் பார்த்து மனம் எழுச்சி கொள்கிறது... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம்!
1 min
December 22, 2025
Translate
Change font size

