Try GOLD - Free
குடியரசு தலைவர் எழுப்பியது மாநில உரிமை மீதான கேள்வி...
DINACHEITHI - NAGAI
|May 21, 2025
ஓர் அதிகாரத்தின் மீது எழுப்பப்பட்ட கேள்வி இப்போது உரிமை தொடர்பான கேள்வியாக மாறி நிற்கிறது. மாநில அரசின் மசோதாவை குறிப்பிட்ட கெடுவுக்குள் பரிசீலியுங்கள் என்று சாதாரண ஓர் அறிவுரையை தான் உத்தரவாக உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால் அதை தங்கள் அதிகாரத்துக்கு எதிரானதாக கருதி தேவையின்றி ஆளுநர்களும் குடியரசுத் தலைவர்களும் கொதித்து எழுந்துள்ளனர். உச்சநீதிமன்றத்திடம் அந்த உத்தரவு தொடர்பான விளக்கங்களை குடியரசுத் தலைவர் கேட்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் போட்டிருந்தது ஒரே ஒரு உத்தரவு. ஆனால் குடியரசு தலைவர் கேட்டிருப்பது ஒரு பிரதான கேள்வியும் அதற்கு உட்பட்ட 14 கிளை கேள்விகளும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மக்கள் நலம் சார்ந்தும் குடியரசுத் தலைவரின் கேள்விகள் தங்களது அதிகார பலம் சார்ந்தும் இருப்பது அவரது கேள்விகளைப் படிக்கும் பாமர மனிதர்களுக்கும் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும்.
-
எப்படியாவது உச்ச நீதிமன்றத்தின் விளக்கத்தைப் பெற்று தங்களது வெறுப்புரிமை அடிப்படையில் மாநிலங்களின் மசோதாக்களை வழக்கம்போல் கிடப்பில் போடுவதே நோக்கமாக குடியரசு தலைவரின் கேள்விகளில் தொனிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் விளக்கம் தீர்ப்பாகவோ, சட்ட விதியாகவோ கருதப்படாது. ஒரு வழிகாட்டும் நெறிமுறையாக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்திருப்பதால், அதன் மூலம் பெரிதாக ஒன்றும் இவர்களால் சாதித்துக் கொள்ள முடியாது. ஆனாலும், மாநிலங்களின் சுயேட்சை தன்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உச்ச பதவியில் இருப்பவர்களுக்கு இல்லை என்பதை அந்த வினாக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இந்த ஜனநாயகத் தன்மைகளையெல்லாம் கடந்து மற்றொரு ஆட்சி அதிகார ஐயப்பாடும் இந்த கேள்வியால் உருவாகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மட்டும்தான் குடியரசு தலைவரின் கேள்வியில் தொக்கி நிற்கும் அத்தகைய உட்பொருளை உணர்ந்து கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
This story is from the May 21, 2025 edition of DINACHEITHI - NAGAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்
“மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் வரை போராட்டம் தொடரும்” என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 mins
November 22, 2025
DINACHEITHI - NAGAI
சென்னை உயர்நீதிமன்றத்தில் ரோடுஷோ பற்றிய வரைவு வழிகாட்டு விதிமுறைகள்
தமிழ்நாடு அரசு தாக்கல்
1 min
November 22, 2025
DINACHEITHI - NAGAI
துபாய் விமான கண்காட்சியில் பங்கேற்ற தேஜஸ் போர் விமானம் எரிந்து கீழே விழுந்தது
துபாயில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் பங்கேற்கும் விமானக் கண்காட்சி கடந்த நவ. 17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் இறுதி நாளான இன்று (நவ. 21) சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் பெருமைமிகு தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கி பின்னர் தீப்பிடித்து எரிந்தது. துபை விமான நிலையம் அருகே உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
November 22, 2025
DINACHEITHI - NAGAI
பீகார் முதல் மந்திரியாக நிதிஷ் குமார் பதவியேற்றார்
பிரதமர் மோடி, அமித்ஷா விழாவில் பங்கேற்பு
1 min
November 21, 2025
DINACHEITHI - NAGAI
ஆளுனருக்கு அதிகாரம் இல்லை
ஜனாதிபதி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
1 min
November 21, 2025
DINACHEITHI - NAGAI
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - மேலும் 4 பேர் கைது
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
1 min
November 21, 2025
DINACHEITHI - NAGAI
தமிழகத்தில் இன்று முதல் பலத்த மழை பெய்யும்: வானிலை நிலையம் அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min
November 21, 2025
DINACHEITHI - NAGAI
மதுரை, கோவையிலும் மெட்ரோ ரெயிலை கொண்டு வருவோம்
திட்டத்துக்கு மத்திய அரசுமறுப்பு :
1 min
November 20, 2025
DINACHEITHI - NAGAI
கோவை விழாவில் பிரதமர் மோடி பேச்சு
ரசாயனம் இல்லாத விவசாயத்தை மேற்கொள்ளுங்கள்
1 mins
November 20, 2025
DINACHEITHI - NAGAI
பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 18 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவித்தார்
புதுடெல்லி,நவ.20சொந்தமாக விவசாய நிலம் பிஎம் கிசான் நிதி வைத்துள்ள விவசாயக் திட்டத்தை மத்திய அரசு குடும்பங்களுக்கு உதவித் 2019ம் ஆண்டு தொடங்கியது. தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டப்படி, 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை 20 தவணைகளாக வங்கி கணக்கு மூலம் பணம் வழங்கப்பட்டுள்ளது.
1 min
November 20, 2025
Translate
Change font size

