Try GOLD - Free
சிதறிய அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு
DINACHEITHI - MADURAI
|September 06, 2025
“சிதறிய அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும்” என்று, எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்துள்ளார். “கோரிக்கை ஏற்கப்பட்டால் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபடுவேன்” என்றும் அவர் கூறி உள்ளார்.
-
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான இவருக்கும், கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
இதற்கிடையே கடந்த 1-ந் தேதி கோபி அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செங்கோட்டையன் வருகிற 5-ந் தேதி (அதாவது நேற்று) கோபியில் உள்ள புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேச உள்ளேன் என கூறி இருந்தார்.
அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கோபி கரட்டூர் ரோட்டில் உள்ள கோபி புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில், மேசையில் முன் வைக்கப்பட்டுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை வணங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அண்ணாவின் தொண்டராக, மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார். நாடே வியக்கத்தக்க செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தந்த தலைவர் எம்.ஜி.ஆர். அவர் இந்தியாவிலேயே சிறந்த ஆட்சியை நடத்தினார்.
This story is from the September 06, 2025 edition of DINACHEITHI - MADURAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
ஆந்திர பிரதேசம்: கோவிலில் கூட்ட நெரிசல்; 10 பேர் பலியான சோகம்
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
1 min
November 02, 2025
DINACHEITHI - MADURAI
காவல்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க, காவல்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
1 min
November 02, 2025
DINACHEITHI - MADURAI
சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ். ஆகியோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல- நீக்கப்பட்டவர்கள்
எடப்பாடி பழனிசாமி பேட்டி
1 min
November 02, 2025
DINACHEITHI - MADURAI
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
மாத தொடக்கத்தில் குறைந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 min
November 02, 2025
DINACHEITHI - MADURAI
நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு
1 min
November 02, 2025
DINACHEITHI - MADURAI
மாமன்னர் இராஜராஜ சோழன் புகழ் போற்றுவோம்- மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1 min
November 02, 2025
DINACHEITHI - MADURAI
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மோன்தா புயலாக மாறியது. இது திங்கட்கிழமை ஆந்திராவில் கரையை கடந்தது.
1 min
November 01, 2025
DINACHEITHI - MADURAI
16 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆன செஸ் வீரர் இளம்பரிதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு
சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர். இளம்பரிதி. இவர் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில் விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
1 min
November 01, 2025
DINACHEITHI - MADURAI
சென்னை மறைமலை நகரில் ரூ. 3,250 கோடி முதலீட்டில் புதிய வாகன என்ஜின் தொழிற்சாலை
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
1 mins
November 01, 2025
DINACHEITHI - MADURAI
போர்டு நிறுவனம்: தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைய பதிவு
முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உலகில் போர், பொருளாதார நெருக்கடிகள் என எண்ணற்ற அரசியல் நிலையற்ற சூழல்கள் நிலவி வந்தாலும், முதலமைச்சரின் அமெரிக்க பயணம் போர்டு தொழிற்சாலையை மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த உலகளாவிய நிறுவனத்தின் மூலம் கூடுதல் முதலீடுகளும், வேலைவாய்ப்பும் கிடைக்க இருக்கிறது என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார். இந்தநிலையில், முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம் என முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவில், ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும்.
1 min
November 01, 2025
Translate
Change font size
