Facebook Pixel 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | DINACHEITHI - KOVAI - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

DINACHEITHI - KOVAI

|

June 21, 2025

சென்னை ஜூன் 21தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (20.6.2025) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம்-கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ரூ.36.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம், துணை வேந்தர், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கான குடியிருப்புகளைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்குதல், அதன் வாயிலாகப் பரவலாக உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், புதிய முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் தீவிரமான கவனம் செலுத்தப்பட்டுப் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயிலப் "புதுமைப் பெண்" திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயிலப் "தமிழ்ப் புதல்வன்" திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித்தொகை வழங்குதல், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குச் சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்விச் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

MORE STORIES FROM DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலி

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மொத்தமாக திரும்ப பெற வேண்டும்

மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - KOVAI

‘அதிமுக மக்களுக்கான கட்சி; திமுக குடும்பத்திற்கான கட்சி’

சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - KOVAI

பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

\"ஆட்சி, அதிகாரம் என்பதெல்லாம் எங்களுக்கு 2-ம் பட்சம் தான்.

time to read

1 mins

April 15, 2026

DINACHEITHI - KOVAI

தேனி மாவட்டம் அதிமுக கோட்டை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வெற்றியை தந்த மாவட்டம்

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

time to read

1 min

April 15, 2026

DINACHEITHI - KOVAI

பாராளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடிய பிரதமர் மோடி-ராகுல்காந்தி

சமூக ஆர்வலரான மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்தநாள் விழா மத்திய அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.

time to read

1 min

April 12, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

time to read

1 mins

April 12, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தவெக தலைவர் விஜய் காரைக்குடியில் பிரசாரம் செய்ய முடியாமல் திரும்பினார்

வழி நெடுகிலும் மக்கள் கூட்டம் திரண்டதால் காவல்துறை குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து பேச முடிய வில்லை

time to read

1 min

April 11, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சென்னை: மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

time to read

1 min

April 11, 2026

DINACHEITHI - KOVAI

கேரளா -77.3 சதவீதம் அசாம் - 85.1 சதவீதம் பதிவு

அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் நேற்று சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது.

time to read

1 min

April 10, 2026

Translate

Share

-
+

Change font size