Facebook Pixel தீ கட்டுக்குள் வந்தநிலையில் சரக்கு கப்பலில் மீண்டும் கரும்புகை | DINACHEITHI - DHARMAPURI - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

தீ கட்டுக்குள் வந்தநிலையில் சரக்கு கப்பலில் மீண்டும் கரும்புகை

DINACHEITHI - DHARMAPURI

|

June 13, 2025

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி சரக்கு கப்பல் கடலில் கடந்த 9-ந்தேதி சென்று கொண்டிருந்தது. சிங்கப்பூர் கொடி ஏற்றப்பட்ட எம்.வி. வார்ன் ஹாய்-53 என்ற அந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் துறைமுகம் அருகே நடுக்கடலில் சென்ற போது, திடீரென கப்பலில் இருந்த கன்டெய்னர்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென பரவியது.

கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் 20 டன் வெடிபொருட்கள், அபாயகரமான ரசாயனங்கள் இருந்ததால் வெடித்து சிதறின. இதனால் கப்பலில் இருந்து கரும்புகை கிளம்பியது. அதோடு கப்பலில் இருந்து அடுத்தடுத்து 100-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் கடலுக்குள் விழுந்தன. கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 ஊழியர்களும் உயிர் தப்பிப்பதற்காக, கடலில் குதித்தனர்.

இதில் கடலில் தத்தளித்த 18 பேரை கடல் எல்லை பாதுகாப்பு படையினர், கடற்படையினர் மீட்டனர். மேலும் கடலில் மாயமான 4 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சிறப்பு நீச்சல் வீரர்கள் கடலுக்குள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தீ விபத்தை அடுத்து, கடல் எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான சதேத், சமுத்திர பிரகாரி, ஆர்னேஷ், ராஜ்தூத், சமர் ஆகிய 5 கப்பல்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த கப்பல்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து 2 நாட்களாக தீயணைப்பு பணி நடந்து வந்தது. நேற்று 3-வது நாளாக கடல் எல்லை பாதுகாப்பு படையினர், கடற்படையினர், மீட்பு குழுவினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

MORE STORIES FROM DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி

இன்று தொடங்குகிறது

time to read

1 min

April 12, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தவெக தலைவர் விஜய் காரைக்குடியில் பிரசாரம் செய்ய முடியாமல் திரும்பினார்

வழி நெடுகிலும் மக்கள் கூட்டம் திரண்டதால் காவல்துறை குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து பேச முடிய வில்லை

time to read

1 min

April 11, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சென்னை: மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

time to read

1 min

April 11, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

புதுச்சேரி தேர்தல்: கையில் பூக்களோடு வாக்காளர்களை வரவேற்ற நிலா ரோபோ

அசாம், கேரளம், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இந்த நிலையில் புதுச்சேரியில் வ. உ. சி. அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நிலா, என்ற ரோபோ வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.

time to read

1 min

April 10, 2026

DINACHEITHI - DHARMAPURI

கேரளா -77.3 சதவீதம் அசாம் - 85.1 சதவீதம் பதிவு

அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் நேற்று சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது.

time to read

1 min

April 10, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

time to read

1 min

April 10, 2026

DINACHEITHI - DHARMAPURI

புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் இன்று நடக்கிறது.

time to read

1 mins

April 09, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மக்கள் அதிமுக பக்கம் இருக்கிறார்கள்: வாழப்பாடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

வாழப்பாடியில் நடைபெற்ற பிரச்சாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.

time to read

1 min

April 08, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

விஜய், சீமான் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மனுக்கள் ஏற்பு

9-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது

time to read

1 min

April 08, 2026

DINACHEITHI - DHARMAPURI

‘டெல்லியிலிருந்து ரிமோட் மூலம் புதுச்சேரி இயக்கப்படுகிறது’

உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

time to read

1 mins

April 08, 2026

Translate

Share

-
+

Change font size