Try GOLD - Free
தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் முதல்வர் படைப்பகம் திட்டத்திற்கு மகத்தான வெற்றி : ஜூன் இறுதி வரை முன்பதிவுகள் நீடிப்பு
DINACHEITHI - DHARMAPURI
|May 28, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னைகொளத்தூர் தொகுதியில் புதிய திட்டமாக முதல்வர் படைப்பகம் என்னும் திட்டத்தை 4.11.2024 அன்று தொடங்கிவைத்தார். இத்திட்டம் பகிர்ந்தபணியிடம் என அப்போது அறிவிக்கப்பட்டது. அது தான் கூட்டுப்பணி இடம் என்று இங்கே குறிப்பிடப்படுகிறது.
-
அதாவது, அமைதியாக ஒருவர் வீட்டில் வசதிகள் இல்லாததால் தனியாகவோ அல்லது தன்னுடைய குழுவினருடனோ அமர்ந்து, குறித்த நேரத்திற்குள் தம்முடைய வேலையைச் செய்து முடித்துக்கொள்ள வேண்டும் என்று கருதினால், அதற்குத் தேவையான இடவசதி, இருக்கைகள், மேசை வசதி, மின் இணைப்பு வசதி, இணைய வசதி, குளிர்சாதன வசதி (AirConditioner), முதலிய அனைத்து வசதிகளுடனும் மிகமிகக் குறைந்த கட்டணத்தில் தனது மடிக்கணினியைப் பயன்படுத்தி கருதிய வேலையைச் செய்து முடித்துக் கொள்வதற்குப் பயன்படும் இடம் இந்த முதல்வர் படைப்பகம்.
இந்தத் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மற்ற திட்டங்களைப் போலவே படித்த இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது, அது குறித்த வெற்றிச் செய்தியை 'இந்துஸ்தான் டைம்ஸ்" ஆங்கில பத்திரிகை 26.5.2025 திங்கட்கிழமை அன்று செய்திக் கட்டுரையாக வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: சென்னையில் உள்ள அரசு நடத்தும் கூட்டுப் பணி இடத்தில், 22 வயதான பட்டதாரி இளைஞர் ஒருவர் தொடங்கிய இரண்டு மாதமே ஆன சுற்றுலா நிறுவனம், டெக் மகிந்திராவில் ஆட்டோமேஷன் பிரிவின் 52 வயது முன்னாள் தலைவருடன் இடத்தை பகிர்ந்து கொள்கிறார். அவர் ஓய்வுக்குப் பிறகு ஐ.டி. துறையில் தொழில்முனைவராக முயற்சி செய்து வருகிறார். அவருக்கு எதிரே, ஹைப்ரிட் காலத்தில் படுக்கையில் இருந்து வேலை செய்து வந்த Oracle நிறுவனத்தின் நிதி ஆய்வாளர் ஒருவர் இங்கு வந்த பின் (முதல்வர் படைப்பகம்) அதிக உற்பத்தித் திறனுடன் இருப்பதாக உணர்கிறார்.
This story is from the May 28, 2025 edition of DINACHEITHI - DHARMAPURI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"அவரது போராட்டங்கள் நமக்கு வழி காட்டும்
1 min
October 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க வேண்டும்
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 mins
October 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
எல்லை மீறி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டு, மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
1 mins
October 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
காசா இன படுகொலையை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
கரூர் கூட்டநெரிசல்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக த.வெ.க. மேல்முறையீடு
சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
1 min
October 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும்
வாக்கு பதிவு இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்
1 mins
October 09, 2025

DINACHEITHI - DHARMAPURI
'சென்னை ஒன்' செயலியில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம்
இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்' மொபைல் செயலியை கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min
October 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
வரும் 9-ந் தேதி மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படவுள்ள அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
பீகார் சட்டசபைக்கு நவ. 6, 11-ந்தேதி 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவ., 22ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
1 min
October 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜனாதிபதி திரவுபதி முர்மு 22-ந்தேதி சபரிமலை வருகை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.
1 min
October 07, 2025
Translate
Change font size