Try GOLD - Free

குடியரசு தலைவர் எழுப்பியது மாநில உரிமை மீதான கேள்வி...

DINACHEITHI - CHENNAI

|

May 21, 2025

ஓர் அதிகாரத்தின் மீது எழுப்பப்பட்ட கேள்வி இப்போது உரிமை தொடர்பான கேள்வியாக மாறி நிற்கிறது. மாநில அரசின் மசோதாவை குறிப்பிட்ட கெடுவுக்குள் பரிசீலியுங்கள் என்று சாதாரண ஓர் அறிவுரையை தான் உத்தரவாக உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால் அதை தங்கள் அதிகாரத்துக்கு எதிரானதாக கருதி தேவையின்றி ஆளுநர்களும் குடியரசுத் தலைவர்களும் கொதித்து எழுந்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்திடம் அந்த உத்தரவு தொடர்பான விளக்கங்களை குடியரசுத் தலைவர் கேட்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் போட்டிருந்தது ஒரே ஒரு உத்தரவு. ஆனால் குடியரசு தலைவர் கேட்டிருப்பது ஒரு பிரதான கேள்வியும் அதற்கு உட்பட்ட 14 கிளை கேள்விகளும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மக்கள் நலம் சார்ந்தும் குடியரசுத் தலைவரின் கேள்விகள் தங்களது அதிகார பலம் சார்ந்தும் இருப்பது அவரது கேள்விகளைப் படிக்கும் பாமர மனிதர்களுக்கும் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும்.

எப்படியாவது உச்ச நீதிமன்றத்தின் விளக்கத்தைப் பெற்று தங்களது வெறுப்புரிமை அடிப்படையில் மாநிலங்களின் மசோதாக்களை வழக்கம்போல் கிடப்பில் போடுவதே நோக்கமாக குடியரசு தலைவரின் கேள்விகளில் தொனிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் விளக்கம் தீர்ப்பாகவோ, சட்ட விதியாகவோ கருதப்படாது. ஒரு வழிகாட்டும் நெறிமுறையாக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்திருப்பதால், அதன் மூலம் பெரிதாக ஒன்றும் இவர்களால் சாதித்துக் கொள்ள முடியாது. ஆனாலும், மாநிலங்களின் சுயேட்சை தன்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உச்ச பதவியில் இருப்பவர்களுக்கு இல்லை என்பதை அந்த வினாக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

MORE STORIES FROM DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் 3 நாட்கள் நீடிப்பு

19-ந் தேதி மாதிரி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது

time to read

1 mins

December 12, 2025

DINACHEITHI - CHENNAI

“தேர்தல் விதிமுறைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என அறிவுறுத்தல்”

பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து 15 துறை அதிகாரிகளுடன் தமிழக அதிகாரி ஆலோசனை

time to read

1 mins

December 11, 2025

DINACHEITHI - CHENNAI

தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம்

தி.மு.க.வின் வாக்குச்சாவடி பரப்புரை

time to read

1 min

December 11, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்

எடப்பாடி பழனிசாமி பேச்சு

time to read

1 min

December 11, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னையில் 6 நாட்கள் வானம் மேக மூட்டமாக காணப்படும்: வானிலை நிலையம் அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

time to read

1 min

December 10, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாட்டில் தகுதியான 55 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள்: விரைவில் கிடைக்க அரசு ஏற்பாடு

தகுதியான 55 ஆயிரம் பேர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

time to read

1 min

December 10, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஜன. 25-க்குள் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்

தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம்

time to read

1 min

December 10, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு

திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

time to read

1 min

December 10, 2025

DINACHEITHI - CHENNAI

என்னையும், ராமதாசையும் பிரித்தது ஜி.கே. மணிதான்: அன்புமணி பேச்சு

மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது :

time to read

1 min

December 10, 2025

DINACHEITHI - CHENNAI

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி தீர்மான கடிதம்

பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அளித்தனர்

time to read

1 min

December 10, 2025

Translate

Share

-
+

Change font size