நீட் பயிற்சி! கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள்!
Nakkheeran
|November 02-05,2024
"தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபிறகு, அரசுப் பள்ளி மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை பின்னுக்குத் தள்ளி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பிரபலம் பெற்றுள்ளன.
-
மேலும், பள்ளிப் பாடங்களுக்கு மட்டுமே டியூஷன் வைத்த சூழல் மாறி, நீட் கோச்சிங்கிற்காக 6-ஆம் வகுப்பிலிருந்தே கோச்சிங் அனுப்பும் மோசமான கல்விச் சூழலும், கல்லா கட்டும் சூழலும் பெருகியுள்ளது.
ஆரம்ப காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்விக்குச் சென்றார்கள். அதில் மருத்துவப் படிப்புக்கு எப்போதும் செல்வாக்கு உண்டு. அதிக பெற்ற மாணவர்களுக்கே மருத்துவ சீட் கிடைத்தது. ஆகையால் பெற்றோர்கள் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். ஆனால் 2014-ல் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பின்னால், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. இதற்கு நீட் தேர்வில் கேட்கப்படும் வினாக்களில், மற்ற பாடத்திட்டங்களைவிட சி.பி.எஸ்.இ. அடிப்படையிலான பாடத்திட்டத்திலிருந்து கூடுதலாக இடம்பெறுவதும் முக்கிய காரணமாகும்.
அரசுப் பள்ளியில் படிப்பவர்களைவிட, தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களே அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவராக முடியும் என்கிற ஒரு மாயப் பார்வையை முதலில் கட்டமைத்தனர். அதனால் அவர்கள் சொல்லும் பணத்தை ஏனென்று கேள்வி கேட்காமல் பெற்றோர்கள் கொட்டிக் கொடுத்தனர். நீட் வருகைக்குப் பிறகு சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்கிற மாய பிம்பம் மெல்ல மெல்ல கட்டமைக்கப்படுகிறது.
அதன் மூலம் தற்போது சி.பி.எஸ்.இ. பள்ளிகளை நோக்கி பெற்றோர்களை படையெடுக்க வைத்துள்ளனர். இதனால் சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளி உரிமையாளர்கள் காட்டில் அடைமழைதான். மிக முக்கியமாக அவர்களுக்கு கட்டணம் எதையும் முறையாக அரசு நிர்ணயம் செய்யவில்லை, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நிர்ணயம் செய்வதே கட்டணமாக உள்ளது. அதுதவிரவும் பெரும்பாலான சி.பி.எஸ்.இ. தனி பள்ளிகளில் ஆறாம் வகுப்புகளிலிருந்தே நீட் கோச்சிங் கொண்டு வந்து, தனியார் நீட் கோச் சென்டர்களுக்கு இணையாகப் பணத்தைப் பறிக்கின்றனர் என பரவலாக குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் 12,302, அரசு உதவிபெறும் பள்ளிகள் 8,323, அரசுப் பள்ளிகள் 37,507 என மொத்தமாக 58,641 பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.
This story is from the November 02-05,2024 edition of Nakkheeran.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Nakkheeran
Nakkheeran
திலீப் விடுதலை... பகீர் பின்னணி!
8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!
கொதிக்கும் ஐ.பி.!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
யார் கெத்து? பலியான மாணவன்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!
நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
நிறைவேற்றப்படாத வேண்டுதல்!
‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கைதி என் 9658
ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!
-மக்கள் மனநிலை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அம்மா போட்ட குண்டு?
மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.
3 mins
December 13-16, 2025
Nakkheeran
அடக்கி வாசிக்கும் விஜய்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!
2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.
2 mins
December 13-16, 2025
Translate
Change font size

