Try GOLD - Free
தமிழரின் தொன்மை கூறும் கீழடி
Pothu Arivu Ulagam
|July 2025
மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்திருக்கும் நிலையில், சில விளக்கங்களைக் கோரி அந்த ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப் பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
-

982 பக்க அறிக்கை தாக்கல்
மதுரையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி தொல்லியல் தளத்தை 2014-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியத் தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்டறிந்தார். இதற்குப் பிறகு இந்த இடத்தில் 2014-15, 2015-16 ஆகிய இரண்டு ஆண்டுகள் அவரது தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு, இந்தியத் தொல்லியல் துறை மேலும் ஒரு முறை அகழாய்வு நடத்தியது. இதன் பின்பு மாநிலத் தொல்லியல் துறை அங்கு தொடர்ந்து அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏஎஸ்ஐயிடம் சமர்ப்பித்தார். இந்த அறிக்கை 982 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்தது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்துவிட்டாலும் இந்த அறிக்கையை ஏஎஸ்ஐ வெளியிடவில்லை. தற்போது, இந்த அறிக்கை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி, அறிக்கை அமர்நாத் ராமகிருஷ்ணனிடமே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது.
அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்த அறிக்கையை இரண்டு நிபுணர்களிடம் அனுப்பியதாகவும், அறிக்கையை மேலும் நம்பகத்தன்மையுள்ளதாக ஆக்க, அந்த நிபுணர்கள் சில கேள்வி களை எழுப்பியிருப்பதாகவும் ஏஎஸ்ஐ தெரிவித்திருக்கிறது. இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது, அந்த இடத்தில் மூன்று பண்பாட்டு காலகட்டம் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதுவதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியிருந்தார். இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என்றும் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவு வரை இருந்திருக்கலாம் என்றும் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் சில கேள்விகள் ஏஎஸ்ஐயால் எழுப்பப்பட்டுள்ளன.
ஏஎஸ்ஐயால் எழுப்பப்பட்ட கேள்விகள்
This story is from the July 2025 edition of Pothu Arivu Ulagam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam
உலக அழகி - 2025
72-வது உலக அழகிப்போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி தொடங்கியது.
1 min
July 2025

Pothu Arivu Ulagam
எளிமை ஆளுமை திட்டம்
தமிழக அரசின் முக்கிய 10 சேவைகளை விரைவாக பெற வகை செய்யும் 'எளிமை ஆளுமை' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
2 mins
July 2025

Pothu Arivu Ulagam
இஸ்ரேல் - ஈரான் போர்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மிகச் சமீபத்திய மோதலில், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
3 mins
July 2025

Pothu Arivu Ulagam
இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம்
நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி. ஆர் சுப்பிரமணியம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, இந்தியா ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்று கூறினார்.
3 mins
July 2025

Pothu Arivu Ulagam
தமிழரின் தொன்மை கூறும் கீழடி
மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்திருக்கும் நிலையில், சில விளக்கங்களைக் கோரி அந்த ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப் பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
4 mins
July 2025

Pothu Arivu Ulagam
பால சாகித்ய புரஸ்கார் விருது
ஒவ்வொரு ஆண்டும், நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் இலக்கிய நூல்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து, சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
1 min
July 2025

Pothu Arivu Ulagam
உயரும் சாலைகளும் புதையும் நகரங்களும்
கடல் மட்டத்திலிருந்து 6.4 மீட்டர் உயரத்தில் இருக்கிறது சென்னை மாநகரம்.
2 mins
June 2024

Pothu Arivu Ulagam
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
3 mins
June 2024

Pothu Arivu Ulagam
நடப்பு நிகழ்வுகள்
தமிழ்நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையிலிருந்து ஒரு புதிய 'நீர்க் கரடி' இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
2 mins
June 2024

Pothu Arivu Ulagam
இந்திய பொதுத் தேர்தல்கள் - 2024
ஜனநாயகத்தின் முக்கிய திருவிழாவான இந்தியத் தேர்தல்களில், குறைந்த வாக்குப்பதிவு என்பது வெறும் புள்ளிவிவர ஒழுங்கின்மையாக மட்டுமல்லாமல், நாட்டின் அரசியல் விதியை தீர்மானிப்பதில் மக்களுக்கு இருக்கும் பொறுப்பின்மையும் தெரிகிறது.
2 mins
June 2024
Translate
Change font size