ஆடியில் அம்மனின் தரிசனம்!
Thozhi
|16-31, July 2025
தாயமங்கலம் - முத்துமாரி
முத்துச்செட்டியாருக்கு மழலைச் செல்வம் தவிர மற்ற எல்லா செல்வங் களும் இருந்தன. மதுரை மீனாட்சியி டம் குழந்தை செல்வம் வேண்டினார் செட்டியார். ஒரு முறை மதுரையிலிருந்து சின்னக் கண்ணனூர் காட்டுப் பகுதியை கடக்கும் போது மூன்று வயது சிறுமி அழுது கொண்டிருப்பதைக் கண்டார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை. குழந்தையை தூக்கிக் கொண்டு, நடக்கத் தொடங்கினார். கோடை வெயில் தாகத்தை தணிக்க, ஊருணியில் நீர் அருந்தினார். திரும்பிப் பார்த்தவர் உடன் இருந்த குழந்தையை காணவில்லை. சோகத்தோடு வீடு வந்து சேர்ந்தார். அன்றிரவு கனவில் குழந்தை வடிவில் அம்மன் தோன்றி, தான் கத்தாழை காட்டிற்குள் தங்கியிருப்பதாகவும், தன்னைப் போன்றே உருவம் செய்து வழிபடுமாறு கூறினாள். மறுநாள் அங்கு சென்றவர், சிறுமியின் காலடித் தடம் தெரிய, அதைப் பின்பற்றி சென்றார். அந்தக்காலடி முடிந்த இடத்தில் மண்ணை குழைத்து அம்மன் உருவத்தை வடித்தனர். முத்துச்செட்டியாரின் கனவில் வந்து கூறியதால் முத்துமாரி என்றழைத்தார்கள்.
ராமநாதபுரத்து மக்களின் கண்கண்ட தெய்வமாக மாறிய முத்துமாரியை வணங்கினாள், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். மதுரையிலிருந்து மானாமதுரை வழியாகவும், மதுரையிலிருந்து சிவகங்கை சென்றும் தாயமங்கலத்தை அடையலாம்.
குன்றத்தூர் கல்யாணதேவி காத்யாயனிதெய்வத் திருமுறைகள் பாடி பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் இல்லத்திற்கு நேர் எதிரில்தான் காத்யாயனி தேவியின் ஆலயம் உள்ளது. இதனாலேயே இத்தலத்தை திருமுறைக்காடு என்கிறார்கள். பார்வதி, பரமேஸ்வரனின் திருமணத்தில் தடை ஏற்பட்ட போது, காத்யாயன மகரிஷியை அணுகினார்கள். அவர் காத்யாயனி தேவியையும், மந்திரத்தையும் உருவாக்கினார். அந்த மந்திரத்தை ஜபிப்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. அதனாலேயே இவளை கல்யாணதேவி என்கிறார்கள். இக்கோயிலில் உள்ள மூன்று கிளை வேம்பின் கீழுள்ள நாகராஜரை தரிசித்து கருவறையில் அன்னையை தரிசிக்க வேண்டியது நிறைவேறும். குன்றத்தூர் முருகன் மலைக்கோயிலிலிருந்து திருநீர் மலைக்குப் பிரியும் தெருவில் திருமுறைக் காடு தேவி காத்யாயனி கோயில் உள்ளது.
கீவளூர் - அஞ்சுவட்டத்தம்மன்
Diese Geschichte stammt aus der 16-31, July 2025-Ausgabe von Thozhi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Thozhi
Thozhi
பாரிலே நாளைய சரிதம் நாம்!
இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது... உலகமே போற்றுகிறது.
2 mins
16-30, Nov 2025
Thozhi
மாரடைப்பைத் தவிர்க்க!
பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
First Lady of New York City
தனது தனித்துவமான அடையாளங்களுடன் ஓவியர் ரமா துவாஜி நியூயார்க் நகரின் ஃபர்ஸ்ட் லேடியாகி இருக்கிறார்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
ராமநாதபுரம் to தாய்லாந்து
மிஸ் ஹெரிடேல்
1 mins
16-30, Nov 2025
Thozhi
கையாறு நதி
பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
நாங்களும் மனிதர்களே
“சார் கொஞ்சம் நில்லுங்கள்...” என்றாள் பூங்கொடி. குரல் கேட்டு திரும்பி பார்த்தார் கதிரேசன். “என்னம்மா... என்னையா கூப்பிட்ட.”
4 mins
16-30, Nov 2025
Thozhi
போலி ORS பானங்களுக்கு தடையின் பின்னணியில் பெண் டாக்டர்!
உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் 'ORS' (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!
அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தேசம் கடந்து மணக்கும் மதுரை மல்லி!
“மல்லிகை... என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..!” என்ற பாடலுக்கு ஏற்ப மல்லிகை மலரின் மணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
2 mins
16-30, Nov 2025
Translate
Change font size

