அரபிக் கடலின் ராணி கொச்சி!
Penmani
|August 2025
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிற கேரள நாட்டிற்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் போய் வரலாம் என்று நினைக்கிற எத்தனையோ ஆயிரம் பேர்களில் ஒருத்தி நான். இன்னும் கூட இவர்கள் சாதிகளை தங்கள் பெயருக்கு பின்னால் சுமந்து கொண்டிருக்கிறார்கள் தான் என்றாலும் இயற்கை அள்ளிக் கொடுத்திருக்கிற பேரழகை இன்னும் கட்டி காத்து வருகிறார்கள் என்பதால் அந்த வகையில் பாராட்டுக்குரியவர்கள் தான்.
கொச்சி, முன்பு ஒரு முறை பார்த்த இடம் தான். ஆனால் காலம் எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப் போட்டு விடுகிறது தானே? இப்போது அந்த இடங்கள் எப்படி இருக்கின்றன என்று பார்க்க ஆவலாக இருந்தது. கிளம்பிவிட்டோம்.
தென்னிந்தியாவின் மலபார் பிரதேசத்தில் மலபார் கடற்கரையில் அமைந்த பெரிய துறைமுக நகரம் கொச்சி. இது எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கிறது. கொச்சி என்றும் கொச்சின் என்றும் அழைக்கப்படும் இந்த பிரதேசம் கேரளாவின் மக்கள் தொகை அடர்த்தி மிக்க பெருநகரம். அரபிக் கடலின் ராணி என்று அழைக்கப்படும் சொர்க்கமும் இது தான்.
முதலில் நாங்கள் சென்றது போர்ட் கொச்சி கடற்கரை. சுத்தமான வளாகம். அமைதியான சுற்றுப்புறம் என்று முதல் பார்வையிலேயே கண்களை கவர்ந்தது. கடற்கரைக்குச் செல்லும் நடைபாதைகளில் அடர்த்தியான மரங்களும் அவை தரும் நிழல்களும் இடத்தின் அழகை அதிகரிக்கின்றன. பசுமையான கிளைகளும், நீல வானமும் வெண் நுரை ததும்பும் அலைகளும் ஓவியம் போல காட்சியளிக்கின்றன. புத்தாண்டு தின கொண்டாட்டங்களின் போது கொச்சின் கார்வினல் என்ற பிரபலமான நிகழ்ச்சி, இந்த கொச்சின் கடற்கரைகளில் தான் நடத்தப்படுகிறது. கடல் உணவுகளை ரசிப்பதற்காகவே வருகிறது அதற்கான ரசிகர் கூட்டம்.
சரக்கு கப்பல்கள், பயணியர் கப்பல்கள், மரைன் கப்பல்கள் என்று பெரிய பெரிய கப்பல்களை இங்கே சர்வ சாதாரணமாக காண முடிகிறது.
வைப்பின் என்கிற வாட்டர் மெட்ரோ ஸ்டேஷனில் டிக்கெட் வாங்கியபோது மகிழ்ச்சியான திகைப்பு ஏற்பட்டது. ஆமாம் கடலை கடந்து போர்ட் கொச்சி செல்ல வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கிறார்கள். மிகப்பெரிய கப்பல் போன்ற கார்கள் ஆட்டோக்கள் பேருந்துகள். ஸ்கூட்டர்கள் இவற்றுடன் சேர்ந்து நாங்களும் பயணித்து கடலை கடந்தோம். காம்ரேடுகளின் தேசத்தில் சாமானியனின் வாழ்க்கைக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு இருப்பதை நேரில் பார்த்தேன்.Diese Geschichte stammt aus der August 2025-Ausgabe von Penmani.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Penmani
Penmani
தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!
தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....
7 mins
October 2025
Penmani
தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!
அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.
2 mins
October 2025
Penmani
ஆலங்காட்டு ரகசியம்!
சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.
1 min
October 2025
Penmani
நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்
ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.
3 mins
October 2025
Penmani
குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!
இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.
2 mins
October 2025
Penmani
தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!
தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.
4 mins
October 2025
Penmani
இனிப்பு பிறந்த கதை
இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.
1 min
October 2025
Penmani
பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!
யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 min
October 2025
Penmani
தீபாவளி பூ!
இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.
1 min
October 2025
Penmani
மதுரையில் மஹா பெரியவர் கோயில்!
திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!
1 min
October 2025
Translate
Change font size

