Versuchen GOLD - Frei
எத்திசையும் புகழ் மணக்க...
Dinamani Chennai
|May 07, 2025
இந்தியாவின் சிறந்த முதல்வர் என்று பாராட்டப்பட்டபோது, "எனக்குப் புகழோ, பாராட்டோ தேவையில்லை; தமிழ்நாடு இந்தியாவின் முதல் மாநிலம் எனப் புகழப்படுவதையே விரும்புகிறேன்; அதுவே எனது ஆசை" என்று கூறி பாடுபட்டு அந்த இலக்கை இன்று அடைந்து புகழின் உச்சத்தைத் தொட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுக அரசு ஐந்தாம் ஆண்டு தொடங்கும் நிலையில், அவரது புகழ் உலகெங்கும் எதிரொலிப்பதைக் காண முடிகிறது.
-
திராவிட மாடல் அரசு மகத்தான சாதனைகளைப் புரிந்துள்ளது. தொலைநோக்குச் சிந்தனைகளுடன் முதல்வர் திட்டமிட்டு வகுத்து நடைமுறைப்படுத்தி வரும் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்டவற்றை நாடு கடந்து வெளிநாடுகளிலும், ஐ.நா. மன்றத்திலும் பாராட்டி வரவேற்கப்படுகின்றன.
இதுவரை எந்த முதல்வரும் பாராட்டுகள் பெற்றிராத வகையில், திசைதிருவும் மக்கள் போற்றி புகழ்கின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் அச்சுறுத்திய கரோனா, அடுத்தடுத்து நிகழ்ந்த புயல், மழை வெள்ளக் கொடுமைகள், கரம் கொடுத்து உதவ வேண்டிய மத்திய அரசின் பாராமுகம், அளிக்க வேண்டிய நிதியையும் அளிக்க முடியாது என நாடாளுமன்றத்திலேயே கூறிய பிடிவாதம்... என்பவற்றையெல்லாம் கடந்து தமிழர்களை அனைத்து வகையிலும் காத்து, 'எல்லாருக்கும் எல்லாம்' என்பதைத் தத்துவமாகவே வடித்துத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால், தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது.
திராவிட மாடல் அரசின் நிர்வாகத் திறனைப் பாராட்டி, மத்திய அரசும், பல்வேறு நிறுவனங்களும் பல விருதுகளை வழங்கியுள்ளன.
முதல்வர் சிறந்த நிர்வாக ஆளுமை மிகுந்தவர் எனப் பலரும் மகுடம் சூட்டுகின்றனர். பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், தொழில் முகவர்கள் என்று தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டுகின்றனர். பத்திரிகைகள் பாராட்டுகின்றன; ஊடகங்கள் போற்றுகின்றன. பிற மாநில அரசுகள் பாராட்டுகின்றன. நீதிமன்றங்கள் பாராட்டுகின்றன.
இவையெல்லாம் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பெருமையையும், பெருமிதத்தையும் ஏற்படுத்தும்.
மத்திய அரசு வழங்கிய விருதுகளின் பாராட்டுப் பட்டியலில் சில:
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பிரிட்டிஷ் ஸ்டேன்டட் இன்ஸ்டியூ ரஷன் 2021 நவம்பர் 3-இல் வழங்கிய ஐ.எஸ்.ஓ. 270001: 2013 சர்வதேசத் தரச் சான்றிதழ் விருது.
Diese Geschichte stammt aus der May 07, 2025-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி
சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.
1 mins
May 17, 2026
Dinamani Chennai
பயோபிக் லைன் அப்!
மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் படமாக வந்து வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தமிழ் ஆளுமைகள் சிலரின் பயோபிக் பட வேலைகள் மும்முரம் அடைந்துள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு ..
2 mins
May 17, 2026
Dinamani Chennai
படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!
'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்குரைஞர் நியமனம்
குற்றவியல் வழக்குகளில் தமிழக அரசு சார்பில் ஆஜராக மூத்த வழக்குரைஞர் ஜான் சத்யனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
1 min
May 17, 2026
Dinamani Chennai
சாமான்யர்களின் வலியை நீதித் துறை தீர்க்க வேண்டும்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
1 min
May 17, 2026
Dinamani Chennai
மெட்ரோ ரயில்களில் பொருள்கள் சிக்கி இழுத்து செல்வதைத் தடுக்க சாதனம் அமைப்பு
மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது, பொருள்கள் சிக்கி இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கும் வகையிலான சாதனம் சர்வதேச அளவில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.
1 min
May 17, 2026
Dinamani Chennai
பர்கர் சாப்பிட்டபோது உணவுக் குழாயில் சிக்கிய உலோகக் கம்பி மோரிஸஸ் ஆசிரியைக்கு சென்னையில் உயிர்காக்கும் சிகிச்சை
மோரீஷஸ் நாட்டைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையின் முக்கிய ரத்த நாளம் மற்றும் தமனி இடையே சிக்கியிருந்த உலோகக் கம்பியை சென்னை மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் நுட்பமாக அகற்றி உயிர் காத்துள்ளனர்.
1 mins
May 17, 2026
Dinamani Chennai
குறைந்த கால ஹஜ் யாத்திரைத் திட்டம்: மத்திய அரசு தொடங்கியது
இந்திய யாத்ரிகர்களுக்கு குறைந்த கால ஹஜ் யாத்திரைத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
1 min
May 17, 2026
Dinamani Chennai
சிண்டாரோவை சாய்த்தார் பிரக்ஞானந்தா
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றார்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
'நீட்' வினாத்தாள் விவகாரம்: பெண் விரிவுரையாளர் கைது
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சேர்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளர் மனீஷா குருநாத் மந்தாரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
May 17, 2026
Translate
Change font size
