Versuchen GOLD - Frei
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம்
DINACHEITHI - KOVAI
|May 26, 2025
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர -மாநில அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
-
மாநில துணைச் செயலாளர்கள் எஸ். ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா. இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ. பிரகாஷ், பிரபு கஜேந்திரன், பி.எஸ். சீனிவாசன், ஜி.பி.ராஜா, சி. ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் திருச்சியில் நேற்றுக் காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1: பெகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த அப்பாவி மக்களுக்கு, அஞ்சலி
பெகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த அப்பாவி பொது மக்களுக்கும், ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளும் கழக இளைஞர் அணி நிர்வாகிகளின் இந்தக் கூட்டம், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு, பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
'மக்கள் பிரதிநிதிகளால் நடத்தப்படும் சட்டப் பேரவையைவிட, ஆளுநர் என்பவர் மேலானவர் அல்ல' என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலவரம்பை நிர்ணயம் செய்ததுடன், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142-ஐ பயன்படுத்தி, ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய 10 மசோதாக்களுக்கும், ஒப்புதல் வழங்கிய மாண்பமை உச்சநீதிமன்றத்துக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களின் உரிமைகளையும் நிலைநாட்டும்வகையில், இந்திய நீதித்துறை வரலாற்றில், முன் உதாரணமான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பைப் பெற்றுத்தந்த கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இந்தக் கூட்டம், பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 3: கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமாகச் செயல்படும் அரசியல் சக்திகளுக்குக் கண்டனம்
மாநில உரிமைகளுக்கான மைல்கல்லாக விளங்கும் மாண்பமை உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர், ஆகியோரைத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய அரசையும், மாண்பமை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையேகேள்விக்குறியாக்கும் விதமாக குறுக்கு வழியை நாடும், கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமான சக்திகளையும், இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
Diese Geschichte stammt aus der May 26, 2025-Ausgabe von DINACHEITHI - KOVAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது
காப்பி அடித்தால் 3 ஆண்டு தடை
1 min
March 01, 2026
DINACHEITHI - KOVAI
ஆந்திரா: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 18 பேர் பலி
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஆந்திர முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
1 min
March 01, 2026
DINACHEITHI - KOVAI
பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வருகை - திருப்பரங்குன்றம் கோவில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
1 mins
February 28, 2026
DINACHEITHI - KOVAI
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர் செல்வம்
, அ. தி. மு. க. , நா.
1 mins
February 28, 2026
DINACHEITHI - KOVAI
ஓ.பன்னீர்செல்வத்தை வருக வருக என வரவேற்கிறேன்- மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முதலமைச்சர் மு.
1 min
February 28, 2026
DINACHEITHI - KOVAI
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை
மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை
1 mins
February 26, 2026
DINACHEITHI - KOVAI
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.
1 min
February 25, 2026
DINACHEITHI - KOVAI
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
February 25, 2026
DINACHEITHI - KOVAI
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
February 25, 2026
DINACHEITHI - KOVAI
தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
1 min
February 25, 2026
Translate
Change font size

