நடு இரவில்... காட்டில் திகில் அனுபவம்!
Nakkheeran
|November 19-21, 2025
அப்போதெல்லாம் என் மனதில் கூடவே மற்றொரு எண்ணமும் தோன்றும். ஒருவேளை நாம் இப்படியே பழைய சம்பவங்களை மனதிலே நினைத்துக்கொண் டிருப்பதால்தான், என் கணவர் என்மீது எவ்வளவு அன்பு செலுத்தினாலும் எனக்கு பரிபூரணமாக அது கிடைக்க வில்லையோ என்று நினைக்கத் தோன்று கிறது. என் கணவர் எதைச் செய்தாலும் ஒரு குறை அதில் இருப்பதாக தெரிகிறது. இதனால் 'திருப்தியால் நிரம்ப வேண்டிய என் இதயத்தில் ஒரு பகுதி சூன்யமாகவே இருக்கிறது' என்று நானே, என் கணவருக்காக வாதிட்டுக் கொள்வேன். ஆனாலும் என் இதயம் அதை ஏற்காது.
-
நினைத்துப் பார்க்கிறேன்... நான் ஒருத்தி தான் இப்படியா? எத்தனையோ பேர் காதலிக்கிறார்கள். அவர்கள் காதல் கைகூடாமல், வேறு ஒருவரை கணவராகப் பெற்றதும் உண்டு. தங்களை அடக்கியாளத்தக்க புருஷன் கிடைக் கும்போது அவர்கள் காலப்போக்கில் பழைய சம்பவங்களை மறந்துவிடுவதில்லையா? ஆனால் என் நிலை அப்படியில்லை. ஆரம்பத்திலிருந்தே என் இதயத்திலிருந்து பழைய சம்பவங்களைக் கிள்ளியெறிய நினைத்த போதும் என்னால் அது முடியவில்லை. அது புற்றுநோயாகவே பற்றிக் கொண்டுவிட்டது.
எப்படி நினைத்துக்கொண்டாலும், என்ன தான் என்னையே நான் சமாதானப்படுத்திக் கொண்டாலும், எனக்கும் என் கணவருக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கத்தான் செய்தது. அந்த இடைவெளியை என்னால் அளக்கவும் முடியவில்லை; அடைக்கவும் இயலவில்லை. அந்த இடைவெளி கடைசிவரையில் அப்படியே இருந்துவிட்டது. என் வாழ்க்கையிலே ஏதோ ஒரு குறை இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. அது என்ன குறை? எதனால் அந்த குறை என்பதை என்னால் தனியே பிரித்தெடுத்து சொல்லவும் முடியவில்லை... ஏதோ ஒரு குறை அவ்வளவுதான். அதற்குமேல் ஆராய்ச்சி செய்யத் தோன்றவில்லை.
புரொவின்ஷியல் பிராட்காஸ்டிங் கார்ப்ப ரேஷனில் என் கணவருக்கு சூபர்வைசர் வேலை. இதற்காக இவர் ஏராளமான இடங்களுக்குப் பிரயாணம் செய்யவேண்டியிருந்தது. சாலை வசதி இல்லாத, பஸ் போகாத கரடுமுரடு பாதையில் காட்டு வழியாக பல ஊர்களுக்கு, குக்கிராமங் களுக்கு செல்லவேண்டிய வேலை அது. ஊருக்கு ஊர், கிராமத்துக்கு கிராமம் சென்று பொது இடங்களில் ரேடியோவை நிர்மாணிப்பது, அவற்றை பழுது பார்ப்பது, ஒழுங்காக வேலை செய்கிறதா என்று கவனிப்பது போன்ற வேலைகள்தான் என் கணவருக்கு.
இதுபோன்ற சுற்றுப்பயணம் போக இவருக்கு ஒருநாள் உத்தரவு வந்தது. அரசு உத்தரவை மீற முடியுமா? ஒருமுறை கிளம்பிவிட்டால் திரும்பி வர சுமார் 20-30 நாட்களாகும். வீட்டில் என்னைத் தனியாக விட்டுப் போக அவருக்கு விருப்பமில்லை... நானும் அதை விரும்பவில்லை. அவருடனே நானும் பயணம் கிளம்பிவிட்டேன். அது ஊர் சுற்றி வருவது போன்ற பயணமில்லை என்பது அப்போது புரியவில்லை.
Diese Geschichte stammt aus der November 19-21, 2025-Ausgabe von Nakkheeran.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Nakkheeran
Nakkheeran
திலீப் விடுதலை... பகீர் பின்னணி!
8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!
கொதிக்கும் ஐ.பி.!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
யார் கெத்து? பலியான மாணவன்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!
நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
நிறைவேற்றப்படாத வேண்டுதல்!
‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கைதி என் 9658
ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!
-மக்கள் மனநிலை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அம்மா போட்ட குண்டு?
மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.
3 mins
December 13-16, 2025
Nakkheeran
அடக்கி வாசிக்கும் விஜய்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!
2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.
2 mins
December 13-16, 2025
Listen
Translate
Change font size

