புரிதல் என்பது ஒருவரின் இயல்பினை அறிந்து அதற்கு இணக்கமான முறையில் நடந்து கொள்ளும் முறை.
ஒரு குடும்பத்தில் புரிதல் இல்லை என்றால் தம்பதிகள் வாழ்க்கை சிறக்காது. உண்மை காதல் இருந்தால் புரிதல் எளிதாகிறது.
பிள்ளைகள் குணமறிந்து பெற்றோர் அவர்களை வழி நடத்தும் விதம் புரிதலை தெளிவாக்குகிறது.
நட்பில் புரிதல் மற்றும் நம்பிக்கை இரண்டும் வேண்டும். நட்பில் புரிதல் இல்லை எனில் நண்பர்களிடையே இணக்கம் இருக்காது.
சமுதாய வாழ்க்கையில் புரிதல் இல்லை எனில் ஊருடன் ஒத்து வாழ்வது கடினம். மொத்தத்தில் வாழ்க்கையில் புரிதல் இல்லை எனில் உலக வாழ்க்கையுடன் இணங்கி வாழ்தல் கடினம்.
ஒருவரின் தெரிந்த குணங்களை வைத்து மட்டும் வைத்து புரிந்து கொள்ள முயற்சிக்கக் கூடாது. அவரிடம் நமக்கு தெரியாத குணங்களும் கட்டாயம் இருக்கும். அந்த குணங்கள் அவருக்கே உரிய சமூக, பொருளாதர பின்புலம் மூலம் உருவானதாக இருக்கும்.
தவிர, படித்த புத்தகங்கள், சந்தித்த மனிதர்கள் மற்றும் அவர்களால் பெற்ற அனுபவங்கள், அவர்களின் சுய சிந்தனை போன்றவற்றாலும், ஒருவரின் குணங்கள் கட்டமைக்கப் பட்டிருக்கும்.
ஒருவரின் குணங்கள் நாம் விரும்பியபடி இருக்க வேண்டியதில்லை. முற்றிலும் மாறாக இருக்கலாம். அந்த குணங்கள் சரி அல்லது தவறாக இருந்தாலும் ஒருவரை அப்படியே ஏற்று கொள்ளுதல் நட்பின் முதல்படியாகவும், காலம் செல்ல, செல்ல இருவருக்குமான உரையாடல்கள் மூலம் சரியானவற்றை தெரிந்து கொள்ளுதலுமே சரியான புரிதலாக இருக்ககூடும். இதுவே புரிதல் என்பதற்கான அரிச்சுவடி.
ஒருவரது உணர்வுகளை மற்றொருவர் அப்படியே ஏற்றுக்கொள்ளுதலே சிறந்த புரிதல் ஆகும்.
கணவர், மனைவி இருவரிடையே மட்டுமல்லாது எந்த உறவுமுறை எனினும் அவரவர் எண்ணங்களை தனியாக வெளிப்படுத்திட வழிவிடுதலே சிறந்தது.
هذه القصة مأخوذة من طبعة Thanga Mangai February 2024 من Thangamangai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة Thanga Mangai February 2024 من Thangamangai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!
பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரிகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்ற பொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!
வாழ்க்கை இணைகள் ஒன்றாக பயணம் செய்யும் போது அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் தோல்வியடைவதில்லை.
வாழ்வியலும் பொருளியலும்!
மனித வாழ்வோட்டத்தில் இன்றியமையாததும் தவிர்க்க | முடியாததுமான ஒன்றாகும். வாழ்க்கையை பொருள் உள்ளதாக மாற்றுவது பொருள் ஆகும். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி மனதில் வலுவாக நம்பிக்கை கொள்ள வைப்பது பொருள் ஆகும்.
புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?
புரிதல் என்பது வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், அழகானதாகவும் மாற்றி விடக் கூடியது. அதேநேரத்தில் புரிதல் இல்லாததால் தான் பிரிதல் அதிகம் நடக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புரிதலை பற்றி நாம் ஒவ்வொருவரும் என்ன புரிந்து கொண்டிருக்கிறோம்? இதன் வரையறை என்ன?
காதல் மணமா? ஏற்பாட்டு மணமா? எது சிறந்தது?
சுமார் 80 முதல் 85 விழுக்காடு ச சுவரையிலான மக்கள் நம்பகமான திருமண தளங்கள் மற்றும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை செய்யவே விரும்புவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.
சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!
சமூக நீதி என்கிற ஒரு கொள்கைதான் என்னை சுயமரியாதையுள்ள ஒரு மனுசியாக தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைவியாக இந்தச் சமூகத்தில் அடையாளப்படுத்தியது.
துளியில் நிறைந்த கடல்!
இன்றைய உலகம் அறிவியல், தொழில்நுட்பம், நாகரிக வளர்ச்சி என்று எத்தனையோ முன்னேற்றங்களை சந்தித்து வந்தாலும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது மனிதர்களாகிய நாம்தான். இத்தகைய முன்னேற்றங்களுக்கு இடையில், நமக்கு அதற்கேற்ற சவால்களும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. அதில் மிகப்பெரிய சவால் என்று பெரும்பான்மையானோர் கருதுவது இன்றைய குழந்தை வளர்ப்பு ஆகும்.
விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி?
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற இதழ்களில் தான் முன்பு போடுவார்கள். காரணம், தவறுகளை திருத்திக் கொள்வதற்காக. இயல், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?
குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அது எந்த நாட்டுப் பெண்கள் என்பதை பொருத்தும் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நம் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி மட்டும் பார்ப்போமே. மேலே படியுங்கள்.
கௌரி லங்கேஷ்...நீதிக்கு நிகழ்ந்த அநீதி!
அது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் இரவு எட்டு மணி. பெங்களூரைச் சேர்ந்த அந்த 55 வயது பெண்மணி, வழக்கம்போல தன் வீட்டுக்கு திரும்பிய போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், ஏழு முறை சுடப்பட, அதில் கழுத்து, மார்பு, வயிறு என்று மூன்று இடங்களில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அநியாயமாக இறந்து போனார்.