"என்னுடைய மகள் அல்லது மகனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களின் உலகம் வேறாக இருக்கிறது. அவர்களுக்கு நாங்கள் சரியான வழிகாட்டுதலை தரவில்லையோ..?" என்ற சந்தேகம் பெரும்பான்மையான பெற்றோர்களுக்கு இருக்கிறது.
ஆதலால், அவர்களுக்கு வழிகாட்டும் விதமாகவும், இன்றைய குழந்தைகள் உலகம் எப்படியானதாக இருக்கிறது, அதில் பெற்றோர்களாகிய நாம் என்னவாக இருக்கிறோம், குழந்தைகள் மற்றும் மாணவர்களின் உலகத்தில் இந்த சமுதாயத்தின் பங்கு என்ன, அவர்கள் சந்திக்கும் சவால்கள், அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்று ஒரு மிகப்பெரிய கருத்தாக்கத்தை அடிப்படையாகக் வழங்கலாம் என்று கொண்டு ஒரு நெடுந்தொடரை முடிவு செய்தோம்.
ஒரு சிறு விதையில்தான் மிகப்பெரிய ஆலமரம் அடங்கியுள்ளது. அதேபோன்று துளியாகத் தொடங்கும் நம் குழந்தைகளுடைய திறன்கள் பரந்து, விரிந்து மாபெரும் கடலாகப் பரிணமிக்க, பெற்றோர்களாகிய நாம் தான் தூண்டுதலாக இருக்க வேண்டும்.
அதன் அடிப்படையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, குழந்தைகளுக்கான மனநல ஆலோசகராகவும், உளவியலாளராகவும் சிறப்பான முறையில் செயலாற்றி வரும் சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் வனிதா அவர்கள் எழுதும் இந்தத் தொடரை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது தங்கமங்கை இதழ்.
வனிதா அவர்கள் தமிழ் இலக்கியம், உளவியல், கல்வி, ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல், நிர்வாக மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டப் படிப்பும் நிறைவு செய்துள்ளார். மேலும் ஆசிரியர் பட்டப்படிப்பும் நிறைவு செய்து கற்றலுக்கு எல்லையே இல்லை என்பதன் நிகழ் சான்றாக உள்ளார். தமிழ் இலக்கியத்தில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தத் துறையில் இவரது சிறப்பான சேவையைப் போற்றும் விதமாக பன்னாட்டு அரிமா சங்கம் வழங்கிய நல்லாசிரியர் விருது, கோல்டன் குரு விருது, உமன்ஸ் வுமன் விருது, தமிழ் சுரங்கம் விருது, இளம் சாதனையாளர் விருது உட்பட எண்ணற்ற விருதுகளை, பல்வேறு அமைப்புகள் வழங்கி பாராட்டியுள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த வனிதா அவர்கள் எழுதும் இந்தத் தொடர், பெற்றோர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்குமே ஒரு வாழ்வியல் வழிகாட்டியாக இருக்கும் என நாங்கள் உறுதி அளிக்கின்றோம்.
"இன்றைய குழந்தைகளின் உலகம்'
பாகம் 1
هذه القصة مأخوذة من طبعة Thanga Mangai February 2024 من Thangamangai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة Thanga Mangai February 2024 من Thangamangai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!
பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரிகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்ற பொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!
வாழ்க்கை இணைகள் ஒன்றாக பயணம் செய்யும் போது அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் தோல்வியடைவதில்லை.
வாழ்வியலும் பொருளியலும்!
மனித வாழ்வோட்டத்தில் இன்றியமையாததும் தவிர்க்க | முடியாததுமான ஒன்றாகும். வாழ்க்கையை பொருள் உள்ளதாக மாற்றுவது பொருள் ஆகும். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி மனதில் வலுவாக நம்பிக்கை கொள்ள வைப்பது பொருள் ஆகும்.
புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?
புரிதல் என்பது வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், அழகானதாகவும் மாற்றி விடக் கூடியது. அதேநேரத்தில் புரிதல் இல்லாததால் தான் பிரிதல் அதிகம் நடக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புரிதலை பற்றி நாம் ஒவ்வொருவரும் என்ன புரிந்து கொண்டிருக்கிறோம்? இதன் வரையறை என்ன?
காதல் மணமா? ஏற்பாட்டு மணமா? எது சிறந்தது?
சுமார் 80 முதல் 85 விழுக்காடு ச சுவரையிலான மக்கள் நம்பகமான திருமண தளங்கள் மற்றும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை செய்யவே விரும்புவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.
சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!
சமூக நீதி என்கிற ஒரு கொள்கைதான் என்னை சுயமரியாதையுள்ள ஒரு மனுசியாக தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைவியாக இந்தச் சமூகத்தில் அடையாளப்படுத்தியது.
துளியில் நிறைந்த கடல்!
இன்றைய உலகம் அறிவியல், தொழில்நுட்பம், நாகரிக வளர்ச்சி என்று எத்தனையோ முன்னேற்றங்களை சந்தித்து வந்தாலும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது மனிதர்களாகிய நாம்தான். இத்தகைய முன்னேற்றங்களுக்கு இடையில், நமக்கு அதற்கேற்ற சவால்களும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. அதில் மிகப்பெரிய சவால் என்று பெரும்பான்மையானோர் கருதுவது இன்றைய குழந்தை வளர்ப்பு ஆகும்.
விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி?
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற இதழ்களில் தான் முன்பு போடுவார்கள். காரணம், தவறுகளை திருத்திக் கொள்வதற்காக. இயல், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?
குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அது எந்த நாட்டுப் பெண்கள் என்பதை பொருத்தும் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நம் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி மட்டும் பார்ப்போமே. மேலே படியுங்கள்.
கௌரி லங்கேஷ்...நீதிக்கு நிகழ்ந்த அநீதி!
அது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் இரவு எட்டு மணி. பெங்களூரைச் சேர்ந்த அந்த 55 வயது பெண்மணி, வழக்கம்போல தன் வீட்டுக்கு திரும்பிய போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், ஏழு முறை சுடப்பட, அதில் கழுத்து, மார்பு, வயிறு என்று மூன்று இடங்களில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அநியாயமாக இறந்து போனார்.