The Perfect Holiday Gift Gift Now

மேலும் 34 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

June 17, 2025

|

Dinamani Thoothukudi

நிவாரண முகாம்கள் அருகே தொடரும் துப்பாக்கிச்சூடு

டேய்ர் அல்-பாலா, ஜூன் 16: காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தவர்கள் மீது திங்கள்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேலும் 34 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது: காஸா முழுவதும் திங்கள்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் ராஃபா நகரில் 33 பேரும் மத்திய காஸாவில் ஒருவரும் அடங்குவர் என்று அமைச்சகம் கூறியது.

அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) நிவாரணப் பொருள் விநியோக மையங்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்தின் நிவாரண மையங்களுக்கும் செல்லும் வழியில் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

இதற்கு முன்னர் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களைப் போலவே இவற்றையும் இஸ்ரேல் ராணுவம்தான் நடத்தியதாக சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இருந்தாலும், இந்தத் தகவலை இஸ்ரேல் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.

காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை அனுமதித்ததில் இருந்தே அந்தப் பொருள்களை வாங்க முகாம்களை நோக்கி வருவோர் மீது இஸ்ரேல் படையினர் தினமும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். ஆனால், ஒரே நாளில் இவ்வளவு அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

المزيد من القصص من Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்

time to read

3 mins

January 03, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்

போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்லாது அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

time to read

1 mins

January 03, 2026

Dinamani Thoothukudi

அமைவிடத்தில் அலட்சியம் கூடாது

அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

January 03, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்

தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.

time to read

1 min

January 02, 2026

Dinamani Thoothukudi

சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்

காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Thoothukudi

புத்தாண்டு சபதங்கள்!

சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.

time to read

2 mins

January 02, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பதினாறு பேறு தரும் பரமன்

கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Thoothukudi

இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Thoothukudi

அஸ்ஸாம்: சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டி தம்பதி எரித்துக் கொலை

அஸ்ஸாமில் சூனியக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி ஒரு தம்பதியை கிராம மக்கள் ஒன்று கூடி எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 01, 2026

Dinamani Thoothukudi

தில்லி: அமலாக்கத் துறை சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.8 கோடி நகைகள் பறிமுதல்

தில்லியில் கருப்புப்பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.

time to read

1 min

January 01, 2026

Translate

Share

-
+

Change font size