استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

குஜராத்தில் டாடா ராணுவ விமான ஆலை

October 29, 2024

|

Dinamani Chennai

ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து மோடி தொடங்கி வைத்தார்

குஜராத்தில் டாடா ராணுவ விமான ஆலை

குஜராத்தின் வதோதரா நகரில் நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலையை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

‘டாடா’ குழுமம் அமைத்துள்ள இந்த ஆலையில் ‘ஏர்பஸ்’ விமானத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சி-295 ராணுவப் பயன்பாட்டு விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன.

இந்திய விமானப் படையின் பழைய அவ்ரோ-748 விமானங்களுக்குப் பதிலாக 56 ‘சி-295’ விமானங்களை வாங்குவதற்கு ‘ஏர்பஸ்’ நிறுவனத்துடன் சுமார் ரூ.21,000 கோடி மதிப்பீட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி 4 ஆண்டுகளுக்குள் ஸ்பெயினின் ஏர்பஸ் உற்பத்தி ஆலையில் தயார் நிலையில் முதல் 16 விமானங்களையும், மீதமுள்ள 40 விமானங்களை ஏர்பஸ்-டாடா நிறுவனங்களுக்கிடையிலான தொழில் உடன்பாட்டின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள டாடா உற்பத்தி ஆலை மூலம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த உற்பத்தி ஆலையின் திட்டம் கடந்த 2012-இல் அப்போதைய ‘டாடா சன்ஸ்’ குழுமத் தலைவர் ரத்தன் டாடாவால் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலையான ‘டாடா விமான வளாகம்’ தொழிற்சாலையின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் 2.5 கி.மீ. தொலைவுக்கு வாகனப் பேரணியில் சென்றனர்.

المزيد من القصص من Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

சென்னைப் பல்கலை.யில் 1,93,686 பேருக்கு பட்டம்

ஆளுநர் ஆர்.என். ரவி பதக்கங்களை வழங்கினார்

time to read

1 min

January 23, 2026

Dinamani Chennai

காவல் நிலைய கட்டட வழக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

சென்னை திரு. வி. க. நகர் காவல் நிலையத்துக்கு நிரந்தரக் கட்டடம் கோரி தொடரப்பட்ட வழக்கை ரூ.

time to read

1 min

January 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

நியூஸிலாந்தில் தொடர் நிலச்சரிவு: வீடு, சுற்றுலா முகாம் மண்ணில் புதைந்தன

இருவர் உயிரிழப்பு: சிலர் மாயம்

time to read

1 min

January 23, 2026

Dinamani Chennai

பாரதத்தை வழிநடத்தும் தலைவர்!

இந்தியா அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது 1947-இல்தான் என்றாலும், அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, அக்டோபர் 21, 1943 அன்று சிங்கப்பூரில் இடைக்கால சுதந்திர இந்திய அரசை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நிறுவிவிட்டார் என்பது அதிகம் பேசப்படாத வரலாறு.

time to read

3 mins

January 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அரசின் உரையை வாசிக்க மறுத்து வெளியேறினார் கர்நாடக ஆளுநர்

உச்சநீதிமன்றத்தை அணுக முதல்வர் ஆலோசனை

time to read

1 min

January 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

எஸ்ஐஆர் மன அழுத்தத்தால் 110 பேர் இறப்பு

மம்தா குற்றச்சாட்டு

time to read

1 min

January 23, 2026

Dinamani Chennai

நாளை பொதுவிநியோக திட்ட குறைதீர் முகாம்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் சனிக்கிழமை (ஜன.

time to read

1 min

January 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும்

ராகுல் காந்தி வலியுறுத்தல்

time to read

1 mins

January 23, 2026

Dinamani Chennai

தலைமைக் காவலர் மீது தாக்குதல்: 3 இளைஞர்கள் கைது

அம்பத்தூர் அருகே கல்லூரி மாணவி, தலைமைக் காவலர் ஆகியோரை தாக்கிய வழக்கில் 3 போதை இளைஞர்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

January 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

81 அரசு பொறியியல் கல்லூரிகள் ஆய்வகங்களுக்கு மேம்பாட்டு நிதி

ஆணைகளை வழங்கினார் அமைச்சர்

time to read

1 min

January 23, 2026

Translate

Share

-
+

Change font size