يحاول ذهب - حر

“வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025” விழாவில் வேளாண்மை, சார்புத் துறைகளின் கண்காட்சி

June 12, 2025

|

DINACHEITHI - NELLAI

தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (11.6.2025) ஈரோடுமாவட்டம், பெருந்துறை- விஜயமங்கலம் பகுதியில், வேளாண்மை-உழவர்நலத்துறை சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள "வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்-2025" கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டு , கருத்தரங்கத்தினைத் தொடங்கி வைத்தார்.

வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய இரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வினை விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள், ஏற்றுமதியாளர்களிடையே ஏற்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் முதன்முறையாக 27.7.2023 அன்று திருச்சிராப்பள்ளியில் "வேளாண் சங்கமம் - 2023" கண்காட்சியை திறந்து வைத்தார்.

இக்கண்காட்சியானது, உயர் விளைச்சல் தரவல்ல புதிய இரகங்கள், பாரம்பரிய நெல் இரகங்கள், வருமானத்தை பெருக்க வேளாண் நவீன தொழில்நுட்பங்கள், உத்திகள், நவீன வேளாண் இயந்திரங்கள், சூரியசக்தி மூலம் இயங்கும் கருவிகள், செயல் விளக்கங்கள், விளை பொருட்களை மதிப்புக் கூட்டும் முறைகள், தொழில்நுட்பங்கள், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன், பட்டுப்பூச்சி வளர்ப்பு குறித்தான கருத்தரங்குகள், உழவன் செயலி பதிவிறக்கம், திட்டபலன் முன்பதிவுகள் போன்ற வேளாண்மை தொடர்புடைய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக ஜூலை 27 முதல் ஜூலை 29 வரை நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை- விஜயமங்கலம் பகுதியில் இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், உயர்விளைச்சல் தரவல்ல புதிய பயிர் இரகங்கள், அறுவடை பின்சார் மேலாண்மை நுட்பங்கள், மதிப்புக்கூட்டும் நுட்பங்கள், வேளாண்மையில் மின்னணு தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்தும் நுட்பங்கள், உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை, பாரம்பரிய இரகங்களைப் பரவலாக்குதல், உணவு பதப்படுத்துதல், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு நுட்பங்கள், பயிர்க்கடன், பயிர்க்காப்பீடு உள்ளிட்ட சேவைகள், ஏற்றுமதி தொடர்பான விழிப்புணர்வு போன்ற பல்வேறு வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தற்போதைய அனைத்து விவரங்களையும் உழவர்கள், மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள் இயற்கை நல ஆர்வலர்கள் ஆகியோர் ஒரே இடத்தில் அறிந்துகொள்ளும் வகையில் "வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் - 2025" 11.06.2025 மற்றும் 12.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும்.

المزيد من القصص من DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - NELLAI

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - NELLAI

ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி

முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NELLAI

உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி - த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன்

12-ந் தேதி ஆஜர் ஆக வேண்டும்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NELLAI

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 9.14 லட்சம் பேர் விண்ணப்பம்

தேர்தல் ஆணையம் தகவல்

time to read

1 mins

January 06, 2026

DINACHEITHI - NELLAI

சென்னையில் புத்தகத் திருவிழா: வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, வரும் ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - NELLAI

கனிமொழி எம்.பி. பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

“பாராளுமன்றத்தில் முழங்கும் கர்ச்சனை இங்கும் கேட்கிறது”

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - NELLAI

தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்

இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

Translate

Share

-
+

Change font size