CATEGORIES
فئات
தீப வழிபாட்டின் மகத்துவம்!
பஞ்சபூத வடிவில் உலகில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் இறைவன். இவற்றுள் நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது. அவ்வாறு ஞானத்தை வழங்கும் வடிவமான இறைவனை தீபமேற்றி வழிபாடு செய்வது சாலச் சிறந்தது. இதனையே புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்துகின்றன.
நான்கு வகை தர்மத்தைக் காட்டிய ராமாயணம்!
இறைவனிடம் தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால், அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. ஒன்றுக்கு நான்காய் இறைவன் அவருக்கு அளித்ததன் தாத்பர்யத்தை அறிவோம்.
கிடாம்பீ ஆச்சானே... எழுந்திரு!
ஸ்ரீ ஆளவந்தார் வைகுண்ட பதவி அடைந்ததும், ஸ்ரீ ராமானுஜர் திருவரங்கத்திலிருந்து காஞ்சிபுரம் சென்று விட்டார். ஆனாலும், ஸ்ரீ ஆளவந்தாரின் சிஷ்யர்களான பெரிய நம்பி, திருமாலை ஆண்டான், திருக்கோஷ்டியூர் நம்பி ஆகியோர் ஸ்ரீ ராமானுஜரை மீண்டும் திருவரங்கம் வரும்படி கேட்டுக்கொண்டனர்.
ராஜயோகம் தரும் தீப வழிபாடு!
தீபம் ஏற்றும் புனிதத்தைப் புராணங்கள் நமக்கு எடுத்துச் செல்லி இருக்கின்றன. ஒரு தீபம் ஏற்றினாலே புண்ணியம் என்று நினைக்கிறோம். தினமும் ஆயிரம் தீபங்கள் ஏற்றி ராஜ வாழ்வு பெற்ற ஒரு பெண்ணின் புராணக் கதையைக் காண்போம்.
கடன் பிரச்னைகளும்...பரிகாரங்களும்!
கடன் வாங்குவதற்கு நேரம், காலம் மிகவும் முக்கியம். அதே போல் கடனைத் திருப்பி அடைப்பதற்கும் நேரம் என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் கடன் பிரச்னைகள் விரைவில் தீர, சில எளிய பரிகாரங்களைக் காண்போம்.
ஒளி நிறைந்த கார்த்திகை!
கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழை பொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதமாதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.
காசி-கயா யாத்திரை
தீபாவளி பண்டிகையின்போது காசி யாத்திரை செல்லும் பழக்கம் இன்றும் பலருக்கும் இருந்து வருகிறது. தீபாவளியன்று கங்கையிலேயே ஸ்நானம் செய்ய ஆர்வமுடன் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் செல்கிறார்கள்.
இருள் போக்கி ஒளியூட்டும் தீபாவளி!
மஹாவிஷ்ணுவின் வராஹ அவதார காலத்தில் பகவானுக்கும் பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் பௌமன். மகாபலசாலியாக விளங்கிய இவன் பரமேஸ்வரனை நோக்கித் தவமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றான். அதில் ஒன்று, அவனது மரணம் அவனைப் பெற்ற தாயால் மட்டுமே நிகழ வேண்டும் என்பது.
இசை சூத்திரதாரி!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பக்தித் திரைப் படங்களிலேயே, “திருவிளையாடல்' உச்சம் என்பது எனது அபிப்ராயம். இந்தக் காவியத் தின் மேன்மைகளைப் பட்டியலிட ஆரம்பித்தால் ஓரிரு அத்தியாயங்கள் போதாது. இருந்தாலும், இந்தப் படத்தின் மூன்று பாடல்களை மட்டும் தனியே எடுத்து நோக்கலாம் என்று தோன்றுகிறது.
மாப்பிள்ளை ஸ்ரீ பாலகிருஷ்ணன்
ராஜஸ்தான் மாநிலம், ஆரவல்லி மலைத் தொடருக்குப் பின்புறம் பனாஸ் நதிக்கரையில் நாத்வாரா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது, ‘ஸ்ரீநாத்ஜி' என்று அழைக்கப்படும் ஸ்ரீ பால கிருஷ்ணன் திருக்கோயில். இந்தக் கோயிலில் அருள் பாலிக்கும் ஏழு வயது மதிக்கத்தக்க ஸ்ரீகிருஷ்ணனை, மாப்பிள்ளை என்றே பக்தர்கள் அமைக்கின்றனர்.
தீபாவளியில் திறக்கப்படும் அதிசயத் திருக்கோயில்
ஆண்டு முழுவதும் திருக்கோயில்களில் இறை மூர்த்தங்களுக்கு வழிபாடு செய்வது நியதி. ஆனால், வருடத்தில் ஒரு முறை மட்டுமே, அதுவும் தீபாவளி பண்டிகையையொட்டி சுமார் பத்து நாட்கள் மட்டுமே கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு அலங்காரம், அபிஷேகம், வழிபாடு என செய்விக்கப்பட்டு, மீண்டும் நடை அடைக்கப்படும் விநோதத் திருக்கோயில் ஒன்று உள்ளது. அது கர்நாடக மாநிலம், ஹாசனில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஹாசனாம்பா திருக்கோயிலாகும்.
மானசீக பக்தியின் பெருமை!
ஒரு மனிதனின் உயர்வுக்குச் சாதியும், அவனது மத நம்பிக்கைகளும் காரணமாக முடியாது என்பதை வலியுறுத்தியவர் கனகதாசர்.
குரு பெயர்ச்சி 2020 பலன்களும் பரிகாரங்களும்!
மேலோட்டமாகப் பார்க்கையில் இந்தப் பெயர்ச்சி ஒரு சிலருக்கு ஏறக்குறைய பலன்களைத் தந்தாலும் பெருவாரியானவர்களுக்கு நல்ல பல பலன்களை அளிக்கப்போவதாகும்.
மெய்ஞ்ஞானம் அருளும் சூரசம்ஹாரம்!
மாயையை உணர்த்தும் யானைமுகனை முதலில் ஒழித்தார் முருகப்பெருமான்.
பாவம் தீர்க்கும் புனித நீராடல்!
இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சியாவதை ஒட்டி நவம்பர் 20 முதல் டிசம்பர் 01 வரை துங்கபத்ரா நதியில் புஷ்கர விழா நடைபெறுகிறது.
அக இருள் நீக்கும் அம்பிகையின் கேசம்!
'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?' என்று பாண்டிய மன்னனுக்கு ஐயம் வந்த கதை ஒன்று உண்டு. 'ஐயத்தைத் தீர்ப்பவருக்குப் பரிசு' என்று மன்னன் அறிவித்தான். தருமியின் பாடலில் சிறந்த விடை இருப்பதை உணர்ந்து தருமிக்கு பரிசு கொடுக்க யத்தனித்தபோது, நக்கீரர் தடுத்தார். பாடல் தவறு என்றார்.
தாம்பூல மாத்திரை...இயற்கை பற்பொடி!
தேவைகள் இருக்கும்போது, அதனை பூர்த்தி செய்யும் வாய்ப்புகள் தானே வந்தடையும். மஹரிஷியின் பொருளாதார தேவைக்கு மாதம் குறைந்தபட்சம் 75 ரூபாய் தேவைப்பட்டது. ஆனால், அவருடைய சூழல் அதில் பாதியை கூட எட்ட முடியவில்லை. அப்போதுதான் அந்த யோசனை வந்தது.
புதுப்பொலிவு பெறுமா வீரசோழபுரம் சிவன் கோயில்?
கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் மணிமுத்தாறு கரையில் அமைந்துள்ளது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில். 'இந்தக் கோயிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை, இந்து சமய அறநிலையத்துறைக்குத் தெரியாமலேயே தமிழக அரசு குறைந்த விலை நிர்ணயம் செய்து, அங்கே அரசு அலுவலகங்கள் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளது' என்பது சமீபத்தில் பலராலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் செய்தியாகும்.
வேண்டுதல் ஒன்று; வரம் மூன்று!
மும்பையில் வசிக்கும் நான், ஒரு முறை எனது கணவர் மற்றும் அவரது சகோதரியோடு திருப்பதி வேங்கடாசலபதி கோயிலுக்குச் சென்றிருந்தேன்.
வானமே கூரையாக விளங்கும் வெக்காளியம்மன்!
மலைக்கோட்டை நகரமாம் திருச்சி மாநகரத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பழைமையும் பெருமையும் வாய்ந்த அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் மிகவும் பிரபலமான, சக்தி வாய்ந்த ஆலயமாகும். 'சோழன் நெடுங்கிள்ளியின் மகன் பெருநற்கிள்ளி உறையூரில், நங்கைக்கு பத்தினிக் கோட்டம் சமைத்து நாள்தோறும் விழாவெடுத்து, அலங்காரம் நிகழ்த்தி வந்தான்' என்று சிலப்பதிகார காவியத்தின் வரலாற்றுச் செய்தி மூலம் தெரிய வருகிறது. இந்தப் பத்தினி கோட்டத்தில் எழுந்தருளச் செய்த கண்ணகி வழிபாடுதான், காலப்போக்கில் வெக்காளியாக பெயர் மருவி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
வெற்றி தரும் விஜயதசமி!
அம்பிகை, மஹிஷாசுரனை அழிப்பதற்காக ஒன்பது நாட்கள் போர் செய்து, பத்தாம் நாள் வெற்றி பெற்றாள்.
பேதம் பார்க்காத பெருமாள்!
மாறநேரி நம்பி ஸ்ரீ ஆளவந்தாரின் சீடர். பிறப்பால் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர். தனது ஆச்சார்யரான ஆளவந்தார் ராஜபிளவை நோய் வந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது மாறநேரி நம்பிதான் கூடவே இருந்து பணிவிடைகள் செய்து வந்தார்.
ஸ்ரீ ததிமதி மாதா!
சதி தேவியின் சிரசு விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படும் ஸ்ரீ ததிமதி மாதா ஆலயம் ராஜஸ்தான் மாநிலம், நகோர் மாவட்டத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள மிகப் பழைமையான ஆலயமாக இது கருதப்படுகிறது.
ஆயுளை விருத்தி செய்யும் சிரஞ்சீவி ஆலயம்!
நாகை மாவட்டம், திருக்கடையூருக்கு அருகில் திருமணல்மேட்டில் அமைந்துள்ளது மார்கண்டேயன் திருக்கோயில். சிவபெருமானால் சிரஞ்சீவியாக வாழ, வரம் பெற்ற மார்கண்டேய மகரிஷி அருளும் இந்தத் திருக்கோயிலின் வரலாறு மிகவும் சுவாரசியமானது.
நவராத்திரியில் அகண்ட தீப வழிபாடு!
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி, இரண்டு மாத காலத்துக்கு, ‘ஸரத் காலம்' என்று பெயர். இந்தக் காலம் தொடங்கும் நாளன்று ஆரம்பித்து, ஒன்பது நாட்கள் அம்மனை வழிபடும் விசேஷத்தை, 'ஸரத் நவராத்திரி' என்பர்.
நவராத்திரி நாயகி அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன்!
நாகர்கோயில் கன்னியாகுமரி வழிப்பாதையில் சுசீந்திரத்தை அடுத்து வரும் கொட்டாரத்துக்கு அருகே அமைந்துள்ளது அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோயில். அகத்திய முனிவரின் காலடி பதிந்த திருத்தலம்.
சரணாகத வத்சலன்!
பராசர பட்டர், ஸ்ரீ ராமாநுஜரின் முதன்மைச் சீடரான ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருமகன் ஆவார். ஸ்ரீரங்கநாயகி தாயாரும் திருவரங்கநாதனும் அவரைத் தங்கள் மகனாகவே பாவித்து வளர்த்தார்கள்.
ஆசிரியர் பணி ஆரம்பம்!
வாழ்க்கையின் சூழல்களே ஒருவரின் வெற்றியை தீர்மானிக்கின்றன. இருபது வயதைக் கடந்த பின்னர் சுவாமிஜியின் வாழ்க்கை முழுவதும் திருப்பங்கள்தான். சென்னைக்கு வந்த சிறிது காலம் மட்டுமே கொஞ்சம் நிறைவாகவும் அமைதியாகவும் சென்றது. இந்த இடைவெளியில்தான் ஆயுர்வேதம் மற்றும் இந்திய மருத்துவ முறைகளை கற்று நிபுணர் ஆனார்.
அம்பாளுக்கு காலனும் அடிபணிவான்!
'யமன்' என்னும் பெயரைக் கேட்டாலே நமக்கு நடுக்கம்தான். எல்லா மனிதரையும் என்றோ ஒருநாள் அவன் அழைத்துப் போவான் என்றாலும், பூவுலகில் நிரந்தரமாகத் தங்க முடியாது என்பது தெரிந்தாலும், ‘தன் அருகில் அவன் வந்துவிடக்கூடாது' என்று ஒதுக்குவதில் அல்லது ஒதுங்குவதில் ஒவ்வொருவரும் குறியாகத்தான் இருக்கிறோம்.
சதகம் பாடிய அபயாம்பிகை பட்டர்!
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகளில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக் கொள்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அப்படிப் பாவங்களால் மாசுபடும் இந்த நதிகள், ஒவ்வொரு ஆண்டும் துலா மாதம் என்னும் ஐப்பசியில் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கி, தம்மை புனிதப்படுத்திக்கொள்வதாக ஐதீகம்.