Denemek ALTIN - Özgür

கண்டுபிடிக்கப்படாத நாட்டின் முக்கிய நடவடிக்கை

Tamil Mirror

|

September 15, 2025

அதிகாரம் எவற்றையெல்லாம் செய்யும் என்பதனை வெளிப்படுத்தும் வகையில் இப்போது இலங்கையில் நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் இருக்கின்றன. அந்த ஒழுங்கில்தான், கடந்த வாரத்தில் பெரும் களேபரம் ஒன்று விஜேராம மாவத்தையில் நடந்து முடிந்திருக்கிறது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் இந்தக் களேபரத்துக்குக் காரணமாக இருந்தது. அதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷ மாத்திரமே அரச மாளிகையில் வசித்துவந்தார் என்பதான ஒரு பிம்பமும் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காதவர்கள், வாக்களிக்கத் தவறியவர்கள் பற்றியெல்லாம் விமர்சனங்கள் வந்தவண்ணமிருக்கின்றன.

- லக்ஸ்மன்.

இந்த விமர்சனங்கள் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்யும் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காதவர்கள், வாக்களிக்கத் தவறியவர்களின் எதிர்கால அரசியலைப் பற்றியதாகவே இருக்கிறது. இவ்வாறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது உண்மையில் அரசியலேயாகும். இருந்தாலும் கட்சிகள் மேற்கொள்ளும் முடிவுகளின் அடிப்படையில் சட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருப்பது வழமையாகும் என்பதும் யதார்த்தமாகும்.

நாட்டில் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முடிவினை மக்கள் எடுத்த வேளையில் அனுர தரப்பு முன்வைத்த அனைத்துத் தேர்தல் வாக்குறுதிகளையும் நடைமுறைப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இருந்தாலும் அவர்களுடைய அரசியல் செயற்பாடு மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து தொடங்கியது என்பது நினைவில் இருத்தப்பட்டிருக்கவுமில்லை. இப்போதுதான், 70களில் நாட்டை ஆட்சிப்படுத்தும் ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சியில் தொடங்கப்பட்ட விடயங்கள் இப்போது நடைபெறுகின்றன என்பதனை நாம் மனதில் இருத்திக் கொண்டால் எவருக்கும் நடைபெற்று வருகின்ற விடயங்களில் கவலை ஏற்பட வாய்ப்பில்லை.

ஊழல்வாதிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதும் அவர்களைச் சிறையிலடைப்பதும், முன்னாள் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைப் பறிப்பதும் நாட்டின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சியே. இதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தின் அளவு நம் நாட்டிற்குச் செழிப்பை ஏற்படுத்திவிடுமா என்றால் அது சாத்தியப்படப் போவதில்லை. ஆனாலும், நம் எதிர்காலத்துக்காக அது நடைபெற்றே ஆகவேண்டும். நாட்டின் அரசராகப்பட்டவர் மக்களின் அனைத்துச் சொத்துக்களையும் ஏகபோகமாக, தமது சுகபோகத்துக்காகப் பயன்படுத்த முடியுமா என்றால், அது முடியாது என்கிற மனோநிலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னரேயே உலகத்தில் வளரத் தொடங்கியது. அதற்கு முன்னரான காலங்களில் அது கணக்கிலெடுக்கப்படாமலேயே இருந்து வந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டிருக்கிறது. ஆட்சி மாற்றங்களை மக்களே ஏற்படுத்துகிறார்கள்.

Tamil Mirror'den DAHA FAZLA HİKAYE

Tamil Mirror

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்

முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

time to read

2 mins

September 23, 2025

Tamil Mirror

புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்

அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி

உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்

தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்

‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size