Denemek ALTIN - Özgür

உரிமைப் போரில் பௌத்த நாடுகள்!

Dinamani Tiruvallur

|

August 13, 2025

சர்வதேச நீதிமன்றம் 1962-இல் 'ப்ரே விஹார்' கோயிலை கம்போடியாவுக்கு வழங்கினாலும், அதன் சுற்றுப்புறப் பகுதி இன்னும் தாய்லாந்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. எனவே, பக்தர்களின் வருகை குறித்த சிக்கல்கள் தொடர் பதற்றத்துக்கு வழிவகுக்கின்றன.

- பினக் ரஞ்சன் சக்கரவர்த்தி

லகின் கண்கள் அனைத்தும் காஸா மீது படிந்திருக்க, நூற்றாண்டு கடந்த கம்போடியா-தாய்லாந்து எல்லைப் பிரச்னை திடீரென ராணுவ மோதலாக அண்மையில் வெடித்தது. பொருளாதார விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்திவந்த ஆசியான் அமைப்பை இந்த மோதல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரண்டு பௌத்த நாடுகள் எல்லையில் மாறிமாறி குண்டு மழை பொழிந்ததற்கு, ஒரு மலை உச்சியில் அமைந்துள்ள 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'ப்ரே விஹார்' என்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னம் அந்தஸ்து பெற்ற ஹிந்து கோயிலின் உரிமைப் பிரச்னைதான் முக்கியக் காரணம் என்பது பலரை வியப்பில் ஆழ்த்தும் செய்தி.

மலேசிய பிரதமரின் தலையீட்டில், தாய்லாந்து-கம்போடிய பிரதமர்களுக்கு இடையே நடந்த நேரடிப் பேச்சுவார்த்தையால் நிபந்தனையற்ற சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. முன்னதாக, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை தாய்லாந்து மறுத்திருந்தது. மலேசியாவின் சண்டை நிறுத்தத் திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்ட தாய்லாந்து, பின்னர் தங்கள் ராணுவத்தின் அழுத்தம் காரணமாகவே அதிலிருந்து பின்வாங்கியதாக கம்போடியா குற்றஞ்சாட்டியது. மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் கம்போடியா உண்மையாக ஆர்வம் காட்டினால் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் குறிப்பிட்டார். அதன் பிறகே, சமாதானப் பேச்சுவார்த்தைகள் சாத்தியமாயின.

இந்த மோதல் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தைக் கூட்டியது. அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளும் மத்தியஸ்தம் செய்ய முன் வந்தன. அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்துக்கு உடன்படவில்லையெனில் வர்த்தக ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும் என இரு நாடுகளுக்கும் தன் பாணியில் மிரட்டல் விடுத்தார்.

மேலும், 'இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் நான் ஆற்றிய பங்கு எனக்கு நினைவுக்கு வருகிறது' என்று குறிப்பிட்டு, தமது சமாதானத் தூதர் பாத்திரத்தை நிலைநாட்ட முயன்றார். எனினும், உக்ரைன் மற்றும் காஸா விவகாரங்களில் டிரம்ப் விடுத்த கெடுபிடிகள் தோல்வியைச் சந்தித்த நிலையில், அந்தப் பின்னடைவுகளை ஈடுசெய்யும் நோக்கில் அவர் எடுத்த முயற்சியாகவே இது பார்க்கப்பட்டது.

Dinamani Tiruvallur

Bu hikaye Dinamani Tiruvallur dergisinin August 13, 2025 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Dinamani Tiruvallur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tiruvallur

முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை

தேர்தல் ஆணையம் திட்டம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு

ஆபத்தான இடங்களில் உணவகங்களை அகற்ற நடவடிக்கை

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்

தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகர் சதுர்த்தி

பாஜக தேசியத் தலைவர் நட்டா

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்

அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா

ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்

அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvallur

சென்னையில் விடியவிடிய பலத்த மழை

அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size