Denemek ALTIN - Özgür
எத்தனை, எத்தனை வகையான தலைவர்கள்!
Dinamani Thoothukudi
|September 24, 2025
தொகுதி வரையறைச் சட்டத்தை உருவாக்கியவர் மோடியா? அந்தச் சட்டத்தை அம்பேத்கரும், நேருவும், படேலும், அல்லாடி கிருட்டிணசாமி ஐயரும், அரசியல் நிருணய சபையும் ஆராய்ந்து, விவாதித்து சட்டமாக்கி இருக்கிறார்கள்! இதற்கு அரசியல் நிருணய சபை காரணமா? மோடி காரணமா?
உண்மையில் மைய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. முப்பது நாட்கள் ஒரு மந்திரியோ, அவரனையரோ, தலைமையமைச்சர், முதலமைச்சர் உட்பட யாரோ சிறையில் இருக்க நேரிட்டால், அவர் சிறையிருந்த முப்பத்தியொன்றாவது நாளில் பதவியை இழந்து விடுவார்! அந்த வழக்கில் தான் குற்றமற்றவன் என்று விடுதலை பெற்ற பிறகே, அவர் பதவி அரசியலுக்குத் திரும்ப முடியும்!
நாடாளுமன்றத்தில் இது விவாதிக்கப்பட்ட போது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மாற்றுக் கட்சி ஆட்சியினரைப் பழி வாங்கவும், அவர்களை நிலைகுலையச் செய்யவுமே இத்தகைய சட்டங்கள் என்று அவர்கள் கூறினர்!
இது குறித்து எதிர்க்கட்சிகளோடு அலசி விவாதித்து, வேண்டிய திருத்தங்களைச் செய்து, அதை நடைமுறைப்படுத்த, அது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கூட்டுக் குழுவில் பங்கேற்பதற்குப் பதிலாக, அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக அந்தக் குழுவைப் புறக்கணித்துள்ளன. இதற்கு ராகுல் காந்தி தலைமை ஏற்றுள்ளார்!
இந்தச் சட்டத்தில் உள்ள முப்பது நாள் மிகக் குறைவான காலக்கெடு என்று தோன்றினாலோ, அதைவிடக் குற்ற நடத்தையாளர் தப்பிக்க முடியாத வகையில் வேறு புது வகைத் திருத்தம் தோன்றினாலோ, அவற்றை முன்வைப்பதற்கு மாறாக, இந்தச் சட்டத்தையே முற்றாக எதிர்ப்பதன் மூலம், எல்லா மாநில ஊழல் ஆட்சிகளையும் முழுமையாகக் காப்பாற்றத்தானே இண்டிக் கூட்டணி வழி வகுக்கிறது!
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் ஒன்றரை ஆண்டுகள் சிறைக்குள்ளேயே முதலமைச்சராக இருந்து பணியாற்றினார்! சிறை என்பது குற்றம் செய்தவர்களின் தண்டனைக்கான இடம். அதைத் தலைமைச் செயலகமாக மாற்றிக் கொள்ளும் நிகழ்கால நிலையில், அதற்குரிய புதிய சட்டங்கள் தேவைப்படுகின்றனதானே!
இந்தியக் குற்றவியல் சட்டத்தை உருவாக்கிய மெக்காலேயோ, அதற்குத் திருத்தங்கள் செய்த இந்திய ஆட்சியினரோ, மந்திரிகள் மந்திரிகளாகவே சிறைக்குள் புகுவர் என்று எதிர்பார்க்கவில்லை!
அதைவிட ஒரு படி மேலே போய், குற்ற அடிப்படையில் சிறைக்குப் போனவரை, ஆளும் கட்சி ஒரு மந்திரியாகவே சிறையில் நியமனம் செய்தது. ஆளுநர் மறுத்தபோது, யாரையும் மந்திரியாக்குவது முதலமைச்சரின் முன்னுரிமை என்று சட்டம் பேசுகிறார்கள். அரசியல் சாசனத்தில் தடை இருக்கிறதா என்று எதிர்க்கேள்வி எழுப்பி விமர்சகர்களின் வாயை அடைக்கிறார்கள்.
Bu hikaye Dinamani Thoothukudi dergisinin September 24, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Thoothukudi'den DAHA FAZLA HİKAYE
Dinamani Thoothukudi
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Dinamani Thoothukudi
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Dinamani Thoothukudi
வெற்றியின் முகவரி பணமா?
மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
2 mins
December 01, 2025
Dinamani Thoothukudi
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
ஆசியாவில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியல்: முக்கிய சக்தியாக உருவெடுத்தது இந்தியா
பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் 'ஆசியா பவர் இண்டெக்ஸ் -2025' பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Translate
Change font size

