يحاول ذهب - حر
எத்தனை, எத்தனை வகையான தலைவர்கள்!
September 24, 2025
|Dinamani Thoothukudi
தொகுதி வரையறைச் சட்டத்தை உருவாக்கியவர் மோடியா? அந்தச் சட்டத்தை அம்பேத்கரும், நேருவும், படேலும், அல்லாடி கிருட்டிணசாமி ஐயரும், அரசியல் நிருணய சபையும் ஆராய்ந்து, விவாதித்து சட்டமாக்கி இருக்கிறார்கள்! இதற்கு அரசியல் நிருணய சபை காரணமா? மோடி காரணமா?
உண்மையில் மைய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. முப்பது நாட்கள் ஒரு மந்திரியோ, அவரனையரோ, தலைமையமைச்சர், முதலமைச்சர் உட்பட யாரோ சிறையில் இருக்க நேரிட்டால், அவர் சிறையிருந்த முப்பத்தியொன்றாவது நாளில் பதவியை இழந்து விடுவார்! அந்த வழக்கில் தான் குற்றமற்றவன் என்று விடுதலை பெற்ற பிறகே, அவர் பதவி அரசியலுக்குத் திரும்ப முடியும்!
நாடாளுமன்றத்தில் இது விவாதிக்கப்பட்ட போது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மாற்றுக் கட்சி ஆட்சியினரைப் பழி வாங்கவும், அவர்களை நிலைகுலையச் செய்யவுமே இத்தகைய சட்டங்கள் என்று அவர்கள் கூறினர்!
இது குறித்து எதிர்க்கட்சிகளோடு அலசி விவாதித்து, வேண்டிய திருத்தங்களைச் செய்து, அதை நடைமுறைப்படுத்த, அது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கூட்டுக் குழுவில் பங்கேற்பதற்குப் பதிலாக, அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக அந்தக் குழுவைப் புறக்கணித்துள்ளன. இதற்கு ராகுல் காந்தி தலைமை ஏற்றுள்ளார்!
இந்தச் சட்டத்தில் உள்ள முப்பது நாள் மிகக் குறைவான காலக்கெடு என்று தோன்றினாலோ, அதைவிடக் குற்ற நடத்தையாளர் தப்பிக்க முடியாத வகையில் வேறு புது வகைத் திருத்தம் தோன்றினாலோ, அவற்றை முன்வைப்பதற்கு மாறாக, இந்தச் சட்டத்தையே முற்றாக எதிர்ப்பதன் மூலம், எல்லா மாநில ஊழல் ஆட்சிகளையும் முழுமையாகக் காப்பாற்றத்தானே இண்டிக் கூட்டணி வழி வகுக்கிறது!
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் ஒன்றரை ஆண்டுகள் சிறைக்குள்ளேயே முதலமைச்சராக இருந்து பணியாற்றினார்! சிறை என்பது குற்றம் செய்தவர்களின் தண்டனைக்கான இடம். அதைத் தலைமைச் செயலகமாக மாற்றிக் கொள்ளும் நிகழ்கால நிலையில், அதற்குரிய புதிய சட்டங்கள் தேவைப்படுகின்றனதானே!
இந்தியக் குற்றவியல் சட்டத்தை உருவாக்கிய மெக்காலேயோ, அதற்குத் திருத்தங்கள் செய்த இந்திய ஆட்சியினரோ, மந்திரிகள் மந்திரிகளாகவே சிறைக்குள் புகுவர் என்று எதிர்பார்க்கவில்லை!
அதைவிட ஒரு படி மேலே போய், குற்ற அடிப்படையில் சிறைக்குப் போனவரை, ஆளும் கட்சி ஒரு மந்திரியாகவே சிறையில் நியமனம் செய்தது. ஆளுநர் மறுத்தபோது, யாரையும் மந்திரியாக்குவது முதலமைச்சரின் முன்னுரிமை என்று சட்டம் பேசுகிறார்கள். அரசியல் சாசனத்தில் தடை இருக்கிறதா என்று எதிர்க்கேள்வி எழுப்பி விமர்சகர்களின் வாயை அடைக்கிறார்கள்.
هذه القصة من طبعة September 24, 2025 من Dinamani Thoothukudi.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.
2 mins
June 20, 2026
Dinamani Thoothukudi
காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடமளிக்கக் கூடாது
காவிரியில் மேக்கேதாட்டு அணை கட்டுவதில் தமிழகத்துக்கு விரோதமாகச் செயல்படும் காங்கிரஸுக்கு அமைச்சரவையில் முதல்வர் ஜோசப் விஜய் இடமளித்திருக்கக் கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min
June 20, 2026
Dinamani Thoothukudi
தியாகத்தின் உருவம் !
உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.
2 mins
June 20, 2026
Dinamani Thoothukudi
மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.
1 min
June 20, 2026
Dinamani Thoothukudi
மேக்கேதாட்டு அணை கூடாது
மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
2 mins
June 20, 2026
Dinamani Thoothukudi
கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யத் தயார்
தன் மீது தொண்டர்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று சிவசேனை (உத்தவ் பாலா சாகேப் தாக்கரே) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
1 min
June 20, 2026
Dinamani Thoothukudi
மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தீர்மானம்: அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை வரவேற்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
1 min
June 20, 2026
Dinamani Thoothukudi
உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் உலக சாம்பியன் ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.
1 min
June 19, 2026
Dinamani Thoothukudi
எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு 60% பங்கு ஒதுக்க ஆர்பிஎல் வங்கி வாரியம் ஒப்புதல்
துபையைச் சேர்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு, இந்தியாவின் தனியார் துறையைச் சேர்ந்த ஆர்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ஒதுக்க அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Thoothukudi
பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
1 min
June 19, 2026
Translate
Change font size

