Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl
The Perfect Holiday Gift Gift Now

சமூக நீதியும் சம நீதியும்

Dinamani Pudukkottai

|

July 18, 2025

இன்றைய அடிப்படையான பிரச்னை ஒரு சமூகத்துக்கு இரண்டு சான்றிதழ் ஏன் என்பதுதான்?. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் சீர்மரபு இனம் (டிஎன்சி) என்ற வகைப்பாடு இல்லை; இங்கு மட்டும் ஏன் என்ற கேள்விக்கு சரியான விடை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது.

- சி.மகேந்திரன்

இந்திய சமூகம் ஐரோப்பிய நாடுகளைப் போன்றதல்ல. இது முற்றிலும் சமூகம் சார்ந்தது. இதன் சமூகக் குழுக்கள் ஒவ்வொன்றும் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்டது. இதை அறிந்துதான் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், இந்திய சமூகத்தின் இயங்கியல் மையப்புள்ளி சமூக நீதி என்றார்.

ஆனால், இதை நிறைவேற்றுவதில் தான் பிரச்னைகள் வந்து விடுகின்றன. அரசியலமைப்புச் சட்டம் தந்த உறுதிமொழிகளால், அதை நிறைவேற்றித் தர முடியவில்லை. ஒவ்வொன்றும் ஆயிரமாயிரம் சட்டப் பிரச்னைகளையும், சமூக மோதல்களையும் சந்திக்கும் அபாயத்தைத் தந்து விடுகிறது. சமூக நீதியை சரியாகப் புரிந்து கொள்வதில்தான் அடிப்படையான சிக்கல் இருக்கிறது.

முதலில் சமூக நீதியை சலுகை என்பதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. உரிமை என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு காலத்தில் சமூகம் தந்த கொடுமையை அதே சமூகத்துக்குச் சரி செய்து கொடுக்கும் உயர் கடமையாகக் கருத வேண்டும். இந்த சமூக நீதியில் மற்றும் ஒரு சமூக நீதி வேண்டும் என்ற குரல் எழுந்துவிடக் கூடாது.

பாதிப்புக்கு ஏற்ப வழங்கப்படும் சமூக நீதியைத்தான், சம நீதி என்கிறோம். இன்றைய சமூக நீதியில் சம நீதி இல்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதில் அரசு இயந்திரம் எந்த அளவுக்கு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறது என்பதை வெளிப்படையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

எந்த தேசத்தின் வளர்ச்சியையும், மக்களால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அதிலும் மக்களை ஒன்றுபடுத்தாமல் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்த முடியாது. இதற்கு ஒற்றுமைதான் அவசியம் என்றால், அதற்கான முன்நிபந்தனை சமூக நீதியாக மட்டுமே இருக்க முடியும். நீதியற்ற சமூகத்தில் எவ்வாறு மனப்பூர்வமாக மக்கள் ஒருங்கிணைவார்கள். மறுக்கப்பட்டவர்களுக்கு உரிமை இல்லாமல் ஒற்றுமையும் சாத்தியமில்லை; வளர்ச்சியும் சாத்தியமில்லை.

பிரிட்டிஷ் கடலோடிகளால் இந்திய அரசர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வது மிகவும் சுலபமாக இருந்தது. காடுகள், மலைகள், கடற்கரை பெரும் மணல் பரப்பு என்ற பிரிந்து கிடந்து, சமூகம் சமூகமாக வாழ்ந்து வந்த இனக்குழுக்களை இவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. இவர்களது துப்பாக்கிகளும் பீரங்கிகளும் அவர்களிடம் செல்லுபடியாகவில்லை. அந்தப் பிரதேசங்களுக்குச் சென்ற அந்நியர்கள் திரும்பி வரவும் இல்லை.

Dinamani Pudukkottai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Pudukkottai

மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி

time to read

1 min

December 20, 2025

Dinamani Pudukkottai

வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை

வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

time to read

1 min

December 20, 2025

Dinamani Pudukkottai

ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா

கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.

time to read

1 min

December 20, 2025

Dinamani Pudukkottai

4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு

நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 20, 2025

Dinamani Pudukkottai

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.

time to read

2 mins

December 20, 2025

Dinamani Pudukkottai

நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி

சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Pudukkottai

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு

ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Pudukkottai

1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி

மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Pudukkottai

கலப்படம் தடுக்க புதிய பால் கொள்கை: தமிழக அரசு முடிவு

பாலில் கலப்படத்தை தடுக்க புதிய பால் கொள்கையை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Pudukkottai

ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்

கட்சி விரோத செயல்பாடு தொடர்பாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் அளிக்கக் கோரி ஜி.கே. மணிக்கு, அன்புமணி தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

December 19, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back