Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

யானை வழித்தடம் காண்போம்

Dinamani Pudukkottai

|

June 23, 2025

பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்

அதிக எண்ணிக்கையில் கூட்டமாக வாழும் ஒரு உயிரினம் தனிமைப்படுத்தப்பட்ட சிறு குழுக்களாகப் பிரியும்போது அந்த இனம் அருகி அழிவை நோக்கிச் செல்லும். சிறப்புவாய்ந்த ஆசிய யானைகள் அழிவை நோக்கிச் செல்லும் உயிரினங்களில் முக்கியமானவை. ஆசிய யானைகளைப் பாதுகாக்க காடுகளில் அவற்றின் வழித்தடங்களின் இணைப்பை உறுதி செய்தல் அவசியம் என்கின்றனர் வல்லுநர்கள்.

இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட யானை வழித்தடங்களை முழுமையாகச் செயல்படும் வழித்தடங்கள், பகுதியாக சேதம் அடைந்த வழித்தடங்கள், முற்றிலும் செயலிழந்த வழித்தடங்கள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். நம் நாட்டில் மொத்தமுள்ள 101 யானை வழித்தடங்களில் 51 வழித்தடங்கள் முழுமையாகச் செயல்படும் நிலையிலும், 24 வழித்தடங்கள் பகுதியாக சேதம் அடைந்த நிலையிலும், 26 வழித்தடங்கள் முற்றிலும் செயலிழந்த நிலையிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

விலங்குகளின் உணர்வு மற்றும் உடலியல் தேவைகள் முற்றிலும் வேறுபட்டவை என்றும், மனிதர்களுக்குத் தெரியாத பல சூழ்நிலைகள் விலங்குகளின் இயக்கத்தைத் தீர்மானிக்கின்றன என்றும் மனிதர்களால் அடையாளம் காணப்படும் யானை வழித்தடம் விலங்குகளுக்குப் பொருத்தமாக இருக்காது என்றும் 1990-ஆம் ஆண்டுகளில் யானை வழித்தட தேடலுக்கு எதிராக வாதிடப்பட்டது.

மற்றவர்களைவிட வழித்தடம் குறித்து நிபுணர்கள் நன்றாக அறிந்திருந்தாலும் பெரிய நிலப்பரப்பின் சுருக்கமான கண்ணோட்டம் வழித்தடங்களை அடையாளம் காண்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும். பொதுவாக, மனிதர்கள் அதிக கவனம் செலுத்தாமல் புறக்கணிக்கும் இரைச்சல் ஆறுகள் போன்ற விலங்குகளின் பயணத்தில் தடை ஏற்படுத்தி, வழித்தடத்தை இணைக்கும் முயற்சியை பயனற்றதாக்கலாம். எனவே, ஒரு நிபுணரால் முன்மொழியப்பட்ட வழித்தடம் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதற்கும், இந்த வழித்தடத்தை விலங்குகள் பயன்படுத்தும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.

Dinamani Pudukkottai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Pudukkottai

தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்

தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

October 31, 2025

Dinamani Pudukkottai

செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Pudukkottai

இரட்டைப் பெருமை!

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Pudukkottai

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Pudukkottai

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Pudukkottai

நிதி எழுப்பும் கேள்வி!

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Pudukkottai

அன்புள்ள ஆசிரியருக்கு...

நடுத்தர மக்களின் வளர்ச்சி

time to read

1 min

October 31, 2025

Dinamani Pudukkottai

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

time to read

1 mins

October 31, 2025

Dinamani Pudukkottai

அன்பின் வழியது உயிர்நிலை

நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.

time to read

2 mins

October 30, 2025

Dinamani Pudukkottai

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

time to read

2 mins

October 30, 2025

Translate

Share

-
+

Change font size