Poging GOUD - Vrij

யானை வழித்தடம் காண்போம்

Dinamani Pudukkottai

|

June 23, 2025

பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்

அதிக எண்ணிக்கையில் கூட்டமாக வாழும் ஒரு உயிரினம் தனிமைப்படுத்தப்பட்ட சிறு குழுக்களாகப் பிரியும்போது அந்த இனம் அருகி அழிவை நோக்கிச் செல்லும். சிறப்புவாய்ந்த ஆசிய யானைகள் அழிவை நோக்கிச் செல்லும் உயிரினங்களில் முக்கியமானவை. ஆசிய யானைகளைப் பாதுகாக்க காடுகளில் அவற்றின் வழித்தடங்களின் இணைப்பை உறுதி செய்தல் அவசியம் என்கின்றனர் வல்லுநர்கள்.

இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட யானை வழித்தடங்களை முழுமையாகச் செயல்படும் வழித்தடங்கள், பகுதியாக சேதம் அடைந்த வழித்தடங்கள், முற்றிலும் செயலிழந்த வழித்தடங்கள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். நம் நாட்டில் மொத்தமுள்ள 101 யானை வழித்தடங்களில் 51 வழித்தடங்கள் முழுமையாகச் செயல்படும் நிலையிலும், 24 வழித்தடங்கள் பகுதியாக சேதம் அடைந்த நிலையிலும், 26 வழித்தடங்கள் முற்றிலும் செயலிழந்த நிலையிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

விலங்குகளின் உணர்வு மற்றும் உடலியல் தேவைகள் முற்றிலும் வேறுபட்டவை என்றும், மனிதர்களுக்குத் தெரியாத பல சூழ்நிலைகள் விலங்குகளின் இயக்கத்தைத் தீர்மானிக்கின்றன என்றும் மனிதர்களால் அடையாளம் காணப்படும் யானை வழித்தடம் விலங்குகளுக்குப் பொருத்தமாக இருக்காது என்றும் 1990-ஆம் ஆண்டுகளில் யானை வழித்தட தேடலுக்கு எதிராக வாதிடப்பட்டது.

மற்றவர்களைவிட வழித்தடம் குறித்து நிபுணர்கள் நன்றாக அறிந்திருந்தாலும் பெரிய நிலப்பரப்பின் சுருக்கமான கண்ணோட்டம் வழித்தடங்களை அடையாளம் காண்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும். பொதுவாக, மனிதர்கள் அதிக கவனம் செலுத்தாமல் புறக்கணிக்கும் இரைச்சல் ஆறுகள் போன்ற விலங்குகளின் பயணத்தில் தடை ஏற்படுத்தி, வழித்தடத்தை இணைக்கும் முயற்சியை பயனற்றதாக்கலாம். எனவே, ஒரு நிபுணரால் முன்மொழியப்பட்ட வழித்தடம் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதற்கும், இந்த வழித்தடத்தை விலங்குகள் பயன்படுத்தும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.

MEER VERHALEN VAN Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Pudukkottai

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Pudukkottai

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Dinamani Pudukkottai

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Pudukkottai

தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்

தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

October 31, 2025

Dinamani Pudukkottai

செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Pudukkottai

இரட்டைப் பெருமை!

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Pudukkottai

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

time to read

1 min

October 31, 2025

Translate

Share

-
+

Change font size