மாநிலம் தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது
Dinamani Puducherry
|July 02, 2025
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
-
மதுரை, ஜூலை 1: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 'ஒரு மாநிலம் தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது' எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பெண் பக்தரின் நகைகள் காணாமல்போனது தொடர்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். காவல் துறையினர் விசாரணையின் போது நடத்திய தாக்குதலில் அஜித்குமார் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அஜித்குமார் மரணம் குறித்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என அதிமுக வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் ராஜராஜன், மாரீஸ்குமார், அருண் சுவாமிநாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ஏ.டி. மரிய கிளாட் ஆகியோர் அமர்வு முன் திங்கள்கிழமை முறையீடு செய்தனர். மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி யளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குரைஞர் ஹென்றி திபேன் தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் விசாரணையின் போது முன்னிலையான வழக்குரைஞர்கள், காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் தடிமனான நெகிழிக் குழாய்கள், இரும்புக் கம்பிகளால் தாக்கினர் எனத் தெரிவித்து, புகைப்படங்களையும், விடியோவையும் தாக்கல் செய்தனர். பின்னர், வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதம்: காவலாளியைத் தாக்கிய போது, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்தார். காயமடைந்த அஜித்குமாரை சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு உயிரிழந்தார். இந்த நிலையில், விசாரணையை அங்கிருந்து தான் தொடங்கி இருக்க வேண்டும். அவரது உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது ஏன்? இது சந்தேகத்தை எழுப்புகிறது.
Bu hikaye Dinamani Puducherry dergisinin July 02, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Puducherry'den DAHA FAZLA HİKAYE
Dinamani Puducherry
வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் இறுதிக்கட்ட அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் இறுதிக்கட்ட அதிகவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
January 01, 2026
Dinamani Puducherry
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட 'பிரளய்' ஏவுகணைகள், ஒடிஸாவிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் குறைந்த நேர இடைவெளியில் அடுத்தடுத்து ஏவப்பட்டு புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன.
1 min
January 01, 2026
Dinamani Puducherry
வெற்றியின் தொடக்கம் கனவு!
வெற்றி என்றதும் நம் கண்களுக்கு முதலில் தெரிவது அந்த இலக்கைத் தொடும் இறுதிப் புள்ளிதான் ஒரு தங்கப் பதக்கம், ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் அல்லது ஒரு அறிவியல் சாதனை.
2 mins
January 01, 2026
Dinamani Puducherry
அஸ்ஸாம்: சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டி தம்பதி எரித்துக் கொலை
அஸ்ஸாமில் சூனியக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி ஒரு தம்பதியை கிராம மக்கள் ஒன்று கூடி எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
January 01, 2026
Dinamani Puducherry
காங்கிரஸ் விருப்ப மனு: கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் ஜன.
1 min
January 01, 2026
Dinamani Puducherry
வாழ்க்கையின் அர்த்தம் பொறுப்புணர்வு!
நம் அனைவருக்கும் எண்ணற்ற அனுபவங்களை தந்த ஆண்டாக 2025 நிச்சயம் இருந்திருக்கும்.
3 mins
January 01, 2026
Dinamani Puducherry
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ரஷீத் கான் தலைமையில் ஆப்கன்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி, ரஷீத் கான் தலைமையில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
January 01, 2026
Dinamani Puducherry
எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவிப்பதில் தகராறு: அதிமுகவினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு
கொளத்தூரில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவிப்பதில் ஏற்பட்ட தகராறில் அக்கட்சியினர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
1 min
January 01, 2026
Dinamani Puducherry
புதிய வெற்றிகள் நிறைந்த ஆண்டாகட்டும்
முதல்வர் மு.க. ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
1 mins
January 01, 2026
Dinamani Puducherry
பொங்கல் தொகுப்புக்கு ரூ.248 கோடி
தமிழக அரசு ஒதுக்கீடு; 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்
1 min
January 01, 2026
Translate
Change font size

