試す - 無料

மாநிலம் தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது

Dinamani Puducherry

|

July 02, 2025

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மதுரை, ஜூலை 1: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 'ஒரு மாநிலம் தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது' எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பெண் பக்தரின் நகைகள் காணாமல்போனது தொடர்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். காவல் துறையினர் விசாரணையின் போது நடத்திய தாக்குதலில் அஜித்குமார் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார்.

இந்நிலையில், அஜித்குமார் மரணம் குறித்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என அதிமுக வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் ராஜராஜன், மாரீஸ்குமார், அருண் சுவாமிநாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ஏ.டி. மரிய கிளாட் ஆகியோர் அமர்வு முன் திங்கள்கிழமை முறையீடு செய்தனர். மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி யளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குரைஞர் ஹென்றி திபேன் தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் விசாரணையின் போது முன்னிலையான வழக்குரைஞர்கள், காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் தடிமனான நெகிழிக் குழாய்கள், இரும்புக் கம்பிகளால் தாக்கினர் எனத் தெரிவித்து, புகைப்படங்களையும், விடியோவையும் தாக்கல் செய்தனர். பின்னர், வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதம்: காவலாளியைத் தாக்கிய போது, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்தார். காயமடைந்த அஜித்குமாரை சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு உயிரிழந்தார். இந்த நிலையில், விசாரணையை அங்கிருந்து தான் தொடங்கி இருக்க வேண்டும். அவரது உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது ஏன்? இது சந்தேகத்தை எழுப்புகிறது.

Dinamani Puducherry からのその他のストーリー

Dinamani Puducherry

Dinamani Puducherry

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Puducherry

Dinamani Puducherry

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Puducherry

Dinamani Puducherry

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Puducherry

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Puducherry

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Puducherry

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Puducherry

Dinamani Puducherry

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Puducherry

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Puducherry

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Puducherry

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size