Denemek ALTIN - Özgür

அறிவின் அமுதூற்று ‘நூலகம்’!

Dinamani Karur

|

August 12, 2025

மக்களைக் கொன்றால் ஒரு தலைமுறையைத்தான் அழிக்க முடியும்; அதேநேரத்தில், நூலகங்களை அழித்தால் ஒட்டுமொத்தமாக ஓர் இனத்தின் அடையாளத்தையே அழித்துவிட முடியும். அதைத்தான் சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றியவர்கள் செய்தார்கள்.

- ஔவை ந. அருள்

இந்திய நூலக அறிவியலின் தந்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகருமான முனைவர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்த நாளைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தேசிய நூலக தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக, ஒரு நாட்டின் நூலக வளர்ச்சியைக் கொண்டே அந்த நாட்டின் அறிவுச் செழுமை அளவிடப்படுகிறது. இந்தியாவில் தற்போது எங்கெங்கும் தேர்வுப் பயிற்சிக் களங்களும், உயர் பதவி தேர்வுக்கூடங்களும் பரவியிருக்கின்றன. அந்த மாணவர்களுக்கு விருந்தோம்புகைகளாக நூலகங்கள்தான் மிளிர் கின்றன. எங்கள் நூலகத்தை எந்த நேரமும் நாங்கள் மூடுவதில்லை என்று அறிவிக்கும் நூலகங்கள் வளர்ந்து வருகின்றன.

நடமாடும் நூலகங்கள் வீதி முனைகளில் நிற்பதெல்லாம் நமக்குப் பெருமையாக இருக்கிறது. நூலக விழாக்கள், நூலக இதழ்கள் பெருகி வருகின்றன. புத்தகங்கள் படிப்பது மூளைக்கு நலமளிக்கக்கூடிய ஒன்று. புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கும், அறிவாற்றலைப் பெருக்கிக்கொள்ளவும், சவால்களை எதிர்கொள்வதற்கும், எழுத்தாளராக உருவாகவும், வெளிப்படையான அறிவார்ந்த உரையாடல்கள் நடத்தவும் புத்தகங்கள் படிப்பது அவசியமாகிறது.

கி.மு. 300-ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் அருமை-பெருமைகளைக் கேட்டு வியந்த மாவீரன் அலெக்சாண்டர், எகிப்தின் எழிலில் மயங்கி ‘அலெக்சாண்டிரியா’ என்ற நகரை உருவாக்கினார். அங்குதான் மிகப் பெரிய நூலகத்தை எழுப்பினார். உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களை எல்லாம் திரட்டி 10 லட்சம் புத்தகங்களை அந்த நூலகத்தில் வைத்தார்.

அந்தப் புத்தகங்களைப் படிப்பதற்காகவே உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் அறிஞர்கள் அலெக்சாண்டிரியாவுக்கு வந்தனர். அங்கிருந்துதான் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் தத்துவங்கள், விஞ்ஞானம், அளவையியல், புவியியல், சமய தத்துவார்த்தங்கள் பரவத் தொடங்கின.

எகிப்தியர்கள் பாப்பிரஸ் (தருப்பை) புல்லில் தயாரிக்கப்பட்ட ஏடுகளில் எழுதி அலெக்சாண்டிரியாவில் இருந்த நூலகத்தில் சேமித்து வைத்திருந்தனர். ரோமானியர்களில் புகழ்வாய்ந்த ஜூலியஸ் சீசர், ரோம் நாட்டில் வாழ்ந்த வசதியானவர்களிடம் நன்கொடை வாங்கி பொது நூலகங்களை அமைத்தார். கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் இப்படி 28 பொது நூலகங்கள் நிறுவப்பட்டிருந்தன.

Dinamani Karur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Karur

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Karur

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

திருச்செந்தூர் கோயில் பெயரில் சமூக ஊடகங்களில் மோசடி

பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

புதிய சிக்கலில் வங்கதேச உறவு!

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.

time to read

2 mins

January 06, 2026

Translate

Share

-
+

Change font size