டியூஷன் ஆரம்பிக்கும் போதே மழையும் ஆரம்பித்து விட்டது. இரவும் குளிரும் இணை சேர்ந்து உருண்டு புரள.... மேட்டில் இருந்து கீழ்நோக்கி செம்மண் கலந்து சேறோடு அடித்துக்கொண்டு செல்கிறது மழைநீர். கலகலவென பாதையில் நீரோடும் சத்தம் மழைக்குள் நீரே கல்லென உருள்வது போல.
எப்போதும் குடை கை வசம் இருக்க.. டியூசன் விடவும் பிடித்துக்கொண்டு நடந்து விட்டோம்...நானும் வெள்ளையும்.
குடை தலையை வேண்டுமானால் நனைக்காமல் காக்கலாம். முதுகு கால் கைகள் என்று வெடவெடத்து விறுவிறுக்க செய்து விட்டது. கால்களைக் கவ்வும் மழைநீரின் குளுமை கடும் நடுக்கத்தை கொத்திக் கொத்திப் போனது. வழக்கம்தான் என்றாலும்.... வீடு சேர்ந்தால் போதும் என்றானது. வீட்டுக்குள் நுழைந்து நனைந்த பைக்கட்டை திண்ணையில் வைத்து தாத்தாவிடம் புத்தகத்தை எடுத்து வெளியே எடுத்து பரப்பி வைத்து காய வைக்க சொல்லிவிட்டு அப்படியே.... அதற்குள் சட்டையும் கழற்றி...
அப்போதுதான் கவனித்தேன். சட்டை பட்டியில் கேம்லின் பேனாவின் மூடி மட்டும் மாட்டிக்கொண்டிருக்கிறது. அதன் உடலைக் காணவில்லை. திக் என்று தூக்கிவாரி போட்டது. திணறிக்கொண்டு வந்த தடுமாற்றத்தை பிற்காலத்தில் panic என்ற வார்த்தையாக உணர்ந்திருக்கிறேன்.
பேனாவை எப்போதும் வெளிப்பக்கமாக கொக்கி போல சட்டையில் மாட்டும் பழக்கம்... எப்படியோ அதை திருகிக் கழன்றுக் கொள்ள செய்திருக்கிறது. அழுகை பூத்து விட்டது. உதடு பிதுங்கிவிட்டது.
Bu hikaye Kanaiyazhi dergisinin March 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanaiyazhi dergisinin March 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
சாமி என்கிற பரசுராமன்
சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் - என்றான் அண்ணா சிவராமன்.
சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்
20 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தை கட்டமைத்த சொற்கள் இரண்டு.
நாளிதழ் நாப்கின்
பழைய ஜட்டி இருந்தா கொடுக்கா. அப்படியே பழைய பேப்பர் இருந்தா மடித்து உள்ளே வேண்டும் எனக் புது ஜட்டியையும் கொடுங்க நாப்கினையும் கொடுத்தாள் எனும் வரிகளை வாசிக்கையில் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.
அளவுகள்
அதையே நினைச்சிக்கிட்டு இருக்க வேணாம். முதல்ல சாப்பிடுங்க'' ' சண்முகம் ஸார் சோற்றைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருந்தார்.
அர்த்தம்
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று உள்ளதா அப்படி என்றால் அது “ \" என்ன? ?' என்றைக்கு மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெறத் துவங்கினார்களோ அன்று தொடங்கி இன்று வரை பூமராங் கேள்வியாக இது சுழன்று சுழன்று வருகிறது.
சின்ன மீனும் பெரிய மீனும்
அண்ணே, உங்க பயோடேட்டா வேணுமாம்'ணே! காலையிலிருந்து ரெண்டு \"தரம்கவுருமெண்ட்லருந்து போஃன் பண்ணீட்டாங்க.
எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!
வாழ்க்கையைப் பற்றிப் பேசுதற்கு இன்னமும் விஷயங்கள் சுரந்து கொண்டிருப்பதைப் போலவே, நாடகம் பற்றிப் பேசுதற்கும் இன்னமும் விஷயங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆயுத பூஜை
இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்று முணுமுணுத்துக் கொண்டே குமரேசபிள்ளை எழுந்தார்.
சுவர்ணபூமி
சிட்னியின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்கொக் செல்லும் தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் என் மகனும் நானும் ஏறி இருக்கைகளில் அமர்ந்தோம்.