ஒரு மனிதனை விமர்சனம் புண்படுத்துவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அது பண்படுத்தும் என்பது தான் அனுபவப்பூர்வ உண்மை.
உங்களை யாரும் விமர்சனம் செய்யாமல் இருக்க வேண்டுமா? எதையும் செய்யாதீர்கள்; எதையும் பேசாதீர்கள்; ஒன்றுமே செய்யாமல் இருங்கள்!'
கொஞ்சம் கடுமையாகவே சொல்லியிருக்கிறார் அமெரிக்க எழுத்தாளரும் தத்துவவியலாளருமான எல்பர்ட் ஹப்பார்டு.
நீங்கள் செய்கிற வேலையில் யாராவது கண்டுபிடிக்கிறார்களா? அதற்காகக் கவலையேபடாதீர்கள். `நாம் வேலை செய்கிறோம்; செய்த வேலையில்தானே குறை சொல்கிறார்கள்' என்று திருப்திபட்டுக்கொள்ளுங்கள்.
அதற்காகத் திரும்பத் திரும்ப தப்பும் தவறுமாக ஒரு வேலையைப் பார்க்க வேண்டும் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. தவறுகளைக் களையவும், ஒரு செயல் மேம்பட உதவுவதும்தான் விமர்சனம். ஒரு நேர்மையான விமர்சகர், தனிநபர் தாக்குதலில் இறங்க மாட்டார்; அவருடைய விமர்சனம் படைப்பாளியின் திறமையை அடையாளம் காட்டுவதாக இருக்கும்; படைப்பாளி தன் திறமையை வளர்த்துக்கொள்ள உதவுவதாக இருக்கும்.
விமர்சனத்தை எதிர்கொள்வதற்குக்கூட ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. யாராவது நம்மை ஏதாவது சொல்லிவிட்டால் 'நான் யார் தெரியுமா, என்னைப் போய் குறை சொல்லலாமா?' என்கிற அளவுக்கு எகிறுகிறவர்களைப் பார்க்கிறோம்.
`நான் மட்டுமா தப்பு செய்யறேன்... மத்தவங்களும்தான் செய்றாங்க..' என்று அடுத்தவர் மேல் விரலை நீட்டுபவர்களும் இருக்கிறார்கள். நம்மை யாராவது விமர்சனம் செய்யும்போது அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். உண்மையிலேயே நம் மீது தவறு இருந்து, அதை ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தால் அதைக் களைய முன் வரவேண்டும். இது, இறங்கி வருவதல்ல; வளர்ச்சிப் பாதையில் மேலே மேலே போவதற்கான வழி.
இந்த எதார்த்தத்தை அடையாளம் காட்டுகிறது ஒரு மேதையின் வாழ்வில் நடந்த கதை.
அந்தச் சிறுவனுக்கு வயது ஐந்து. ஆனால், மேதை. அப்படித்தான் சொல்ல வேண்டும். பின்னே... அந்த வயதிலேயே அம்மா பாடுகிற அத்தனைப் பாடல்களையும் தன் கையிலிருக்கும் வயலினில் அட்சரம் பிசகாமல் அப்படியே இசைத்துவிடுகிறானே! அவனின் வயலின் இசையைக் கேட்டவர்களெல்லாம் மெய்மறந்து போனார்கள். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... 19ஆம் நூற்றாண்டில் வயலின் இசையில் தனி முத்திரை பதித்த உலே புல்.
This story is from the Thanga Mangai February 2024 edition of Thangamangai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the Thanga Mangai February 2024 edition of Thangamangai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!
பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரிகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்ற பொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!
வாழ்க்கை இணைகள் ஒன்றாக பயணம் செய்யும் போது அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் தோல்வியடைவதில்லை.
வாழ்வியலும் பொருளியலும்!
மனித வாழ்வோட்டத்தில் இன்றியமையாததும் தவிர்க்க | முடியாததுமான ஒன்றாகும். வாழ்க்கையை பொருள் உள்ளதாக மாற்றுவது பொருள் ஆகும். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி மனதில் வலுவாக நம்பிக்கை கொள்ள வைப்பது பொருள் ஆகும்.
புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?
புரிதல் என்பது வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், அழகானதாகவும் மாற்றி விடக் கூடியது. அதேநேரத்தில் புரிதல் இல்லாததால் தான் பிரிதல் அதிகம் நடக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புரிதலை பற்றி நாம் ஒவ்வொருவரும் என்ன புரிந்து கொண்டிருக்கிறோம்? இதன் வரையறை என்ன?
காதல் மணமா? ஏற்பாட்டு மணமா? எது சிறந்தது?
சுமார் 80 முதல் 85 விழுக்காடு ச சுவரையிலான மக்கள் நம்பகமான திருமண தளங்கள் மற்றும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை செய்யவே விரும்புவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.
சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!
சமூக நீதி என்கிற ஒரு கொள்கைதான் என்னை சுயமரியாதையுள்ள ஒரு மனுசியாக தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைவியாக இந்தச் சமூகத்தில் அடையாளப்படுத்தியது.
துளியில் நிறைந்த கடல்!
இன்றைய உலகம் அறிவியல், தொழில்நுட்பம், நாகரிக வளர்ச்சி என்று எத்தனையோ முன்னேற்றங்களை சந்தித்து வந்தாலும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது மனிதர்களாகிய நாம்தான். இத்தகைய முன்னேற்றங்களுக்கு இடையில், நமக்கு அதற்கேற்ற சவால்களும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. அதில் மிகப்பெரிய சவால் என்று பெரும்பான்மையானோர் கருதுவது இன்றைய குழந்தை வளர்ப்பு ஆகும்.
விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி?
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற இதழ்களில் தான் முன்பு போடுவார்கள். காரணம், தவறுகளை திருத்திக் கொள்வதற்காக. இயல், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?
குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அது எந்த நாட்டுப் பெண்கள் என்பதை பொருத்தும் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நம் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி மட்டும் பார்ப்போமே. மேலே படியுங்கள்.
கௌரி லங்கேஷ்...நீதிக்கு நிகழ்ந்த அநீதி!
அது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் இரவு எட்டு மணி. பெங்களூரைச் சேர்ந்த அந்த 55 வயது பெண்மணி, வழக்கம்போல தன் வீட்டுக்கு திரும்பிய போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், ஏழு முறை சுடப்பட, அதில் கழுத்து, மார்பு, வயிறு என்று மூன்று இடங்களில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அநியாயமாக இறந்து போனார்.