கணவன் மனைவி உறவு சிறக்க வேண்டுமென்றால், குடும்பம் விளங்க வேண்டுமென்றால், விட்டுக் கொடுத்தல் மிகவும் அவசியம் ஆகும். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல் சிறப்பு ஆகும். குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அல்லது ஆண்களா? பல குடும்பங்களில் பெண்கள் தான் அதிகம் விட்டுக் கொடுப்பார்கள். சில குடும்பங்களில் ஆண்கள் அதிகம் விட்டுக் கொடுப்பதையும் நாம் பார்க்கிறோம்.
கணவனுக்கும் மனைவிக்கும் பல செயல்களில் கருத்து வேறுபாடுகள் வரலாம். இருவரும் வெவேறு சூழ்நிலைகளில் வளர்ந்து இணைந்தவர்கள் என்பதை மறக்கலாகாது. ஆணின் சிந்தனைகளும், வேறு. பெண்ணின் வேறு. அதனால் முக்கியத்துவங்களும் எண்ணங்களும் முக்கியத்துவங்களும் சண்டைகளும், கருத்து வேறுபாடுகளும் தவிர்க்க முடியாதவை என்பதை இரு பாலரும் உணர வேண்டும்.
பெண்கள் ஏன் அதிகம் விட்டுக் கொடுக்கிறார்கள்? இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பெண்கள் அதுவும் தமிழ் பெண்கள் இயல்பாகவே மிகவும் பொறுமைசாலிகள். கணவன் மீது உள்ள மரியாதையின் நிமித்தம் விட்டுக் கொடுக்கலாம். பெண்கள் திருமண பந்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதற்கு பங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காக விட்டுக் கொடுக்கலாம். குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்கலாம். பொருளாதார ரீதியாக கணவனை சார்ந்திருப்பதனால் விட்டுக் கொடுக்கலாம். ஊர் உலகத்திற்கு பயந்து விட்டுக் கொடுக்கலாம். எது எப்படியோ, பெண்கள் விட்டுக் கொடுத்து நம் எல்லா குடும்பங்களையும் உடையாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது உண்மை.
இப்பொழுது இந்த விட்டுக் கொடுத்தல் கொஞ்சம் குறைந்து வருகிறது என்பது உண்மை தான். பெண்கள் பொருளாதார ரீதியாக ஆண்களை சார்ந்திருப்பது குறைந்திருப்பதால் ஏற்படும் விளைவு தான் இது. 'தான்' என்கிற அகந்தை இப்பொழுது பெண்களையும் பிடித்து ஆட்ட தொடங்கி விட்டது தான் காரணம்.
விட்டுக் கொடுப்பது தான் சிறந்த இல்லறத்திற்கு முதுகெலும்பு ஆகும். அது ஒன்றும் கேவலமில்லை. மற்றவர்கள், ஒற்றுமையாய் இருக்கும் உங்களை அதுவும் இதுவும் சொல்லி கலைக்க முயலுவார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அகந்தையை தூக்கி வீசுங்கள்.
This story is from the Thanga Mangai February 2024 edition of Thangamangai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the Thanga Mangai February 2024 edition of Thangamangai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!
பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரிகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்ற பொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!
வாழ்க்கை இணைகள் ஒன்றாக பயணம் செய்யும் போது அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் தோல்வியடைவதில்லை.
வாழ்வியலும் பொருளியலும்!
மனித வாழ்வோட்டத்தில் இன்றியமையாததும் தவிர்க்க | முடியாததுமான ஒன்றாகும். வாழ்க்கையை பொருள் உள்ளதாக மாற்றுவது பொருள் ஆகும். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி மனதில் வலுவாக நம்பிக்கை கொள்ள வைப்பது பொருள் ஆகும்.
புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?
புரிதல் என்பது வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், அழகானதாகவும் மாற்றி விடக் கூடியது. அதேநேரத்தில் புரிதல் இல்லாததால் தான் பிரிதல் அதிகம் நடக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புரிதலை பற்றி நாம் ஒவ்வொருவரும் என்ன புரிந்து கொண்டிருக்கிறோம்? இதன் வரையறை என்ன?
காதல் மணமா? ஏற்பாட்டு மணமா? எது சிறந்தது?
சுமார் 80 முதல் 85 விழுக்காடு ச சுவரையிலான மக்கள் நம்பகமான திருமண தளங்கள் மற்றும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை செய்யவே விரும்புவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.
சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!
சமூக நீதி என்கிற ஒரு கொள்கைதான் என்னை சுயமரியாதையுள்ள ஒரு மனுசியாக தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைவியாக இந்தச் சமூகத்தில் அடையாளப்படுத்தியது.
துளியில் நிறைந்த கடல்!
இன்றைய உலகம் அறிவியல், தொழில்நுட்பம், நாகரிக வளர்ச்சி என்று எத்தனையோ முன்னேற்றங்களை சந்தித்து வந்தாலும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது மனிதர்களாகிய நாம்தான். இத்தகைய முன்னேற்றங்களுக்கு இடையில், நமக்கு அதற்கேற்ற சவால்களும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. அதில் மிகப்பெரிய சவால் என்று பெரும்பான்மையானோர் கருதுவது இன்றைய குழந்தை வளர்ப்பு ஆகும்.
விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி?
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற இதழ்களில் தான் முன்பு போடுவார்கள். காரணம், தவறுகளை திருத்திக் கொள்வதற்காக. இயல், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?
குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அது எந்த நாட்டுப் பெண்கள் என்பதை பொருத்தும் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நம் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி மட்டும் பார்ப்போமே. மேலே படியுங்கள்.
கௌரி லங்கேஷ்...நீதிக்கு நிகழ்ந்த அநீதி!
அது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் இரவு எட்டு மணி. பெங்களூரைச் சேர்ந்த அந்த 55 வயது பெண்மணி, வழக்கம்போல தன் வீட்டுக்கு திரும்பிய போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், ஏழு முறை சுடப்பட, அதில் கழுத்து, மார்பு, வயிறு என்று மூன்று இடங்களில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அநியாயமாக இறந்து போனார்.