ஸ்ரீகுருவாயூரப்பன் மகிமையை உலக மக்களுக்குப் பறை சாற்றிய பெருமையில் பெருமளவு 'நாராய ணீயத்தை ' சாரும். அந்த பக்திக் காவியத்தை இயற்றியவர் அருட் கவிநாராயண பட்டத்திரி மேப்பத்தூர் நாராயணபட்டத்திரி. அவர், அவதார புருஷராகவே கருதப்படுகிறார். இவர், 400 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவர். இவரது காலம் 1560-லிருந்து 1632 வரை. இவர் ராமாவதாரத்தில் லட்சுமணனாகவும், கிருஷ்ணாவதாரத் தில் பலராமனாகவும் அவதாரம் செய்த சாட்சாத் ஆதிசேஷனே ஆவார் என்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணாவதார லீலைகளை நெஞ்சுருக, மெய்சிலிர்க்க வர்ணித்துள்ளார் நாராயணபட்டத்திரி.
கார்த்திகை மாதம் 28-ம் தேதி நாராயணீயம் காவியத்தைப் பூர்த்தி செய்து, ஸ்ரீகுருவாயூரப்பன் திருவடிக ளில் சமர்ப்பித்தாராம். அந்த நாள் 'நாராயணீய தினமாகக் குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. பட்டத்திரி 12ஆண்டுகள் குருவாயூரப்பன் ஆலயத் திலேயே வாழ்ந்தார். 12-ஆண்டுகள் ஆலயத்தில் நாராயணீயம் பக்தி மழையாகப் பெய்தது. ஆலயத்துக்கு வந்த பக்தர்கள், அவர் நாராயணீயம் காவியத் தைப் பாடக் கேட்டு, பக்தி வெள்ளத்தில் மூழ்கிப்போனார்கள்.
நாராயணீயம் இன்றும் பக்தர்களால் பாடப்பட்டுவருகிறது. குருவாயூரப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாதம் 28-ம் நாள், பட்டத்திரி நாராயணீயம் பாடி நிறைவேற்றிய அந்த நாளை, பண்டி கையாகக்கொண்டாடுகிறார்கள். பக்தர்கள் பிரார்த்தித்துக் கொண்டபடி பண்டிதர்களை வைத்து நாராயணீயம் பாராயணம் செய்வது நாள் தோறும் நடைபெறுகிறது.
கார்த்திகை மாதம் அண்ணாமலையில் நடைபெறும் தீபத் திருவிழா, 10-நாட்கள் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது. ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த திருவிழா, எல்லை தெய்வங்களாகக் கருதப்படும் ஸ்ரீதுர்க்கை,ஸ்ரீபிடாரி, ஸ்ரீவிநாயகர் ஆகி யோர்களுக்குத்தான் முதல் மூன்று நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்ப டுகிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில், ஸ்ரீதுர்க்கைக்குத்தான் முதல் வழிபாடு!
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங் குகிறது. முதலாவதாக அருள்மிகு துர்க்கை யம்மை வழிபாடு நடைபெறுகிறது. இந்த விழாவில், துர்க்கைக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
This story is from the December 01, 2022 edition of Aanmigam Palan.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 01, 2022 edition of Aanmigam Palan.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
வீரவசந்த வைபோகன்
வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
துறவா? உறவா?
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.