Try GOLD - Free
பெருகும் மக்கள்தொகை-வரமா, சாபமா?
Dinamani Tiruvannamalai
|June 23, 2025
இந்தியாவின் முன்னுள்ள முக்கிய சவால், மக்கள்தொகை எண்ணிக்கையை அதிகரிப்பதல்ல; அறிவார்ந்த, திறன்மிக்க பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். திறன் மேம்படுத்தப்பட்டால்தான் மனிதத் திறன் வளம்மிக்க நாடாக இந்தியா மாறும். தரமான கல்வி, இளைஞர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டிய தருணமிது.
இந்தியாவில் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது, ஒரு நாட்டிலுள்ள மக்களின் பாலினம், வயது, கல்வி, வேலைவாய்ப்பு, சொத்து விவரங்கள் ஆகியவற்றை அவர்களிடமிருந்தே பெற்று அரசால் பகுப்பாய்வு செய்வதற்காக நடத்தப்படுகிறது. இது, மத்திய, மாநில அரசுகள் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற மக்கள் நலன்சார்ந்த துறைகளுக்குத் தேவையான திட்டங்களை வகுத்து, சமுதாய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய திட்டமிடலுக்கு உதவுகிறது.
சுதந்திர இந்தியாவில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1951-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது; அப்போதைய மக்கள்தொகை சுமார் 36 கோடியே 10 லட்சம் ஆகும். கடைசியாக, இந்தியாவின் 15-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-இல் நடத்தப்பட்டது; அப்போதைய மக்கள்தொகை சுமார் 121 கோடியே 8 லட்சம் ஆகும். பின்னர், 2021-இல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த ஆயத்தப் பணிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டன. எனினும், நாட்டில் கரோனா தீநுண்மி பரவல் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2027-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு, பதினாறாவது தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன், வெளிப்படையான ஜாதி வாரி கணக்கெடுப்புப் பணியும் துவங்கும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கை கடந்த ஜூன் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
பனிப்பொழிவால் பாதிக்கப்படும் ஜம்மு-காஷ்மீர், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், லடாக் மாநிலங்களில் முதல்கட்டமாக அடுத்தாண்டு அக்டோபர் 1-ஆம் தேதி கணக்கெடுப்புப் பணி தொடங்கும். இது இந்தியாவில் முதல் எண்ம மக்கள்தொகை கணக்கெடுப்பு. அதாவது, இந்த முறை மக்கள்தொகை தொடர்பான தரவுகள் எண்ம முறையில் இருக்கும்.
This story is from the June 23, 2025 edition of Dinamani Tiruvannamalai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvannamalai
Dinamani Tiruvannamalai
கர்நாடக மேலவைத் தேர்தல்: பாஜக, மஜத எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பு
கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) எம்எல்ஏக்கள் 11 பேர் கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்தனர். இது, அந்தக் கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார்
கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், 4 மணி நேரத்தில் விசாரணையை முடித்து திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.
1 min
June 20, 2026
Dinamani Tiruvannamalai
மேக்கேதாட்டு அணை கூடாது
மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
தியாகத்தின் உருவம் !
உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
டெலிகிராம் மீதான தற்காலிக தடை நியாயமானது
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு இடைக்காலத் தடை விதித்தது நியாயமானதே. அளவுக்கு மீறிய நடவடிக்கை அல்ல' என்று தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடமளிக்கக் கூடாது
காவிரியில் மேக்கேதாட்டு அணை கட்டுவதில் தமிழகத்துக்கு விரோதமாகச் செயல்படும் காங்கிரஸுக்கு அமைச்சரவையில் முதல்வர் ஜோசப் விஜய் இடமளித்திருக்கக் கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min
June 20, 2026
Dinamani Tiruvannamalai
மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.
1 min
June 20, 2026
Dinamani Tiruvannamalai
பேரவை நேரலை தொடரும்: அமைச்சர் ராஜ் மோகன்
தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ராஜ்மோகன் தெரிவித்தார்.
1 min
June 19, 2026
Dinamani Tiruvannamalai
ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.
1 min
June 19, 2026
Translate
Change font size

