Try GOLD - Free
நமது எதிர்காலம் நோக்கி...
Dinamani Tiruvannamalai
|June 04, 2025
இன்றைய அரசியல் சமுதாயப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணத் துடிப்பவர்கள் இளைஞர்களிடம் நம்பிக்கை ஒளியைப் பெற முடியும். காரணம், இன்று வளர்ந்துள்ள அறிவியலையும், தொழில்நுட்பத்தையும், பொருளாதாரத்தையும் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் பயன்படுத்த இவர்கள் திட்டமிடுகிறார்கள்.
சமுதாயத்திலும் அரசியலிலும் உள்ள அவலங்களையும் அலங்கோலங்களையும் பார்த்துப் பார்த்து ஒருவித சலிப்பில் நம்பிக்கை இழந்தவர்களாக பெரும்பான்மை மக்கள் பேசுவதைத்தான் கேட்டு வருகிறோம். அதே நேரத்தில் மறுபக்கத்தில் நமக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் களத்தில் நின்று புறக்கணிக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, எண்ணிலடங்கா இளைஞர்கள் செயல்படுவதை நம்மால் காணமுடிகிறது. நம்பிக்கை தரக்கூடிய நற்செயல்பாடுகள் நடக்கக்கூடிய இடங்கள் அனைத்தும் புறக்கணிப்புக் குள்ளான இடங்கள். எனவே, நாம் அங்கு சென்று பார்த்தால்தான் அந்த இளைஞர்களின் செயல்பாடுகளில் உள்ள பொறுப்பையும், தியாகத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் எப்படி நாட்டு விடுதலைக்கு தியாகம் செய்து போராடினார்களோ அதேபோல் இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் யாருடைய பார்வையும் படாமல், அங்கீகாரத்துக்கு காத்திருக்காமல் அரசால் நிராகரிக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், அரசாங்கத்தால் தொடமுடியாத மக்களைத் தொட்டு அவர்களுடைய பிரச்னை என்னுடையது என்று பொறுப்பேற்று செயல்படும் இளைஞர்களை பார்க்கும்போது, நமக்கு நம்பிக்கை பிறக்கிறது. அவர்களுடன் உரையாடும்போதுதான் அவர்கள் இன்று செயல்படுவது 'புதிய கனவில்', 'புதிய நம்பிக்கையில்' என்பது தெரிகிறது.
இவர்கள் அனைவரும் எதிர்காலத்துக்கான ஒரு மாபெரும் கனவில் செயல்படுவதை நம்மால் காணமுடியும். பொதுவாக, எந்த மனிதர்கள் தேங்குவார்கள் என்றால் மனித சுழற்சியின் வேகம் அறியாமல், மாற்றத்தின் வேகம் அறியாமல் மாற்றத்துடன் பயணிக்க மறுத்து தொடங்கிய இடத்தில் நின்று, வாழும் சூழலில் நிகழ்கின்ற எதிர்மறைச் செயல்களைப் பார்த்துப் பார்த்து நம்பிக்கை இழப்பவர்கள்தான். சாதனைமனிதர்கள் தேங்க மாட்டார்கள், திணற மாட்டார்கள், சமூக சுழற்சியின் திசையும் வேகமும் அறிந்து, தன் இலக்கை குறிக்கோளை காலநிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு தனக்கென உயர் சிந்தனைச் சூழலை உருவாக்கி செயலில் கரைவோர் அஞ்சாமல் கூச்சமற்று சவால்களைச் சமாளித்து அடுத்த காலத்துக்குச் சென்றுவிடுவர்.
This story is from the June 04, 2025 edition of Dinamani Tiruvannamalai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvannamalai
Dinamani Tiruvannamalai
டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 22, 2026
Dinamani Tiruvannamalai
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvannamalai
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
2 mins
June 22, 2026
Dinamani Tiruvannamalai
'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvannamalai
கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை
பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvannamalai
கர்நாடக மேலவைத் தேர்தல்: பாஜக, மஜத எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பு
கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) எம்எல்ஏக்கள் 11 பேர் கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்தனர். இது, அந்தக் கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார்
கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், 4 மணி நேரத்தில் விசாரணையை முடித்து திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.
1 min
June 20, 2026
Dinamani Tiruvannamalai
மேக்கேதாட்டு அணை கூடாது
மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
தியாகத்தின் உருவம் !
உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.
2 mins
June 20, 2026
Translate
Change font size
